Showing posts with label கண்ணீர். Show all posts
Showing posts with label கண்ணீர். Show all posts

Thursday, November 10, 2011

பனியுமில்லை வெயிலுமில்லை... புதிதாய் நிலவுமோர்... இரட்டைக்காலம்


கதிரும் நிலவுமாய் நீ..........
ஒருநாள் துயர் நீ..
மறுநாள் துணை நீ...

எனை நான் கண்டுகொள்ள
நாசி நுழைந்த சுவாசம் நீ

இளமாலைப் பொழுதில்
வெண்பனிப் பூக்கள்
சிந்தும்
வான்முகிலின்
வளர்ப்புமகளா இவள்?


குளிர்கால மேகம் சிதறிப்போகும்
குளிராத தேகம் இவளுக்கு
இறுக்கி அணைத்து
இளைப்பாறிக்கொள்வாள்
தன் காதலை...


இதழ் சொட்டும் வார்த்தையில்
இதயம் மயங்கித்தான் போகும்
கடைக்கண்ணால்
இவள் எய்யும் அம்புகளுக்குச் சமமாய்

அர்ஜுனனின் வில்லுக்கு
வலிமை தோற்கும்.


முன் பனி..
முழுமதி........
மழைக்குடை....
வெயில் நிழல்.....
வெட்க்கபந்தி............

இவையெல்லாம் நீயானால்...

உன்னைச்சமைத்து காதல் தொட்டுக்கொள்ளப்பார்க்கிறேன்
காலை உணவிற்கு..

மௌனம் கலைத்து மழையாய்
பொழிவாயே
உன் செவ்விதழால் வருடும்

அந்த முத்தமழைக்கு ஏங்கி
தாகமாயுருக்கும் என்னை
அணுவுக்கும் இடைவெளி இல்லாமல் நனைத்துவிட்டுப்போனால்
என்ன...?

சைவ அசைவம் பார்த்தா சமிக்ஞை புரிந்தாய்
விரலால் தீண்டியதும்
பட்டென கன்னம் விழும் அந்த நிமிடம்
இறந்து பிறக்கும்
என்னை

இன்னும் இன்னும் எத்தனை ஜென்மம் செய்வாய்..


நான் கிறுக்கலாய்ச்செய்யும் அத்தனையும் ரசித்தாய்
நான் ரசித்து எழுதும் அத்தனை கவிதையையும்
கிறுக்கல் என்றாய்..

அடி...
முரண்காற்றுக்கிளைய
தென்றலானவளே
என்னத்தான் செய்யப்போகிறாய்

எப்போது இதயம் கொய்யப்போகிறாய்
என ஒவ்வொரு நிமிடமும்
தட்பவெட்பம் தடுமாறும்
என்னை

தலைக்கோதி
மார்போடனைக்கும் உன் தேகச்சரணடைய
காற்றுக்குமிழிக்குள்
மூச்சைப்பிடித்து நிற்கும்
என்னை

மேகக்கூட்டுக்குள்
முத்தெடுக்கவெண்ணி
தலைகீழ் வனத்தில் நிலை கொள்லாமல்
திரியும் என்னை


அய்யோ!
போதும் இன்னும் எத்தனை “என்னை”
போட்டாலும் நீ வரப்போவதில்லை
எனத்தெரிந்தும்
புலம்பும் என்

புலம்பெயர்ந்த இதயத்தை
புதைத்த இடமாவது சொல்லிப்போயேன்..!

Saturday, October 29, 2011

கண்ணீர் வரைந்த கவிதை


நித்திரை இழந்த இரவின்
நடு நிசிவேளை
என் அறைக்கதவு திறந்து
முற்றத்திற்கு வரம் என்
மேனி மீதினில்
மென்மையும் வேகமுமாய்
மோதிப் பிரியும் வாடைகாற்றாக
உன் நினைவு..



வாடைகாற்றின்
தீராதா ஏக்கத்தில்
தீந்தொளிந்தாலும்..!
அதே இடம்விட்டு நகராமல்
நெடு நேரம் நின்றுவிடுகிற
என்னை..காணதவாறே..!
கடந்து போய்விடுகிறாய் காற்றே..

இன்று..
உன் கனவில்கூட
நான்
காணாமல் ஆக்கப்பட்டிருப்பேன்.
என்றாலும்
நீ என்னை மறந்துவிட்டாய்
என்பதையே...!
நீ என்னை நினைத்திருந்தாய்
என்பதற்கான சாட்சியமாய்
வைத்துகொள்வேன்!...

இந்த சாட்சிகளில் ..முன்
நான் ஆயுள் கைதியாய்
கண்ணீரோடு...!
-கார்த்திக் ராஜா..
 

கண்ணீர் கண்ணீர்..!






வார்த்தைகள் வராது


வாயடைத்துப் போகையில்


கண்ணீர் மொழியாகும்.




அந்த மொழி -எல்லோரும்


அறிந்ததாய்...


தன் நினைவுகளால்


வாழ்ந்து கொண்டு


இருக்கும் சிலருக்காய்


உதிரும் மொழி அது..




நானும் உங்களைப் போல.


விலா நோகச் சிரிப்பவன்-தான்.


சிரிக்கையிலே அழுகையும்


வரும் சில நேரங்களில்.


அத்தனையிலும் சிறப்பு


கொண்டதாய் இருக்கும்


அந்த துளிர்த்திருக்கும் கண்ணீர்,




மனம் மிகவும் மகிழ்ச்சியடையும்


ஒரு சிறு சம்பவம் நடந்தாலும்,


அதை தந்தவருக்கு,


நன்றியின் அடையாளமாய்


ஒரு துளி கண்ணீர் என் இமைக்கரைகளை


உடைத்து உப்பு வெள்ளமாய்


கன்னங்களில் உருண்டோடும்.




எதிரமர்ந்து காண்பவருக்கு எப்படியோ?


எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் அதுவும் ஒன்று.




அதற்கு அழுகை என்று பெயரில்லை..!


அப்படி அழைத்தாலும் தவறில்லை..!!


அப்படி கண்ணீர் விட வைப்பவர்கள்..!!


என் இதயத்திற்கு -மிகவும்


நெருக்கமானவராகவே மட்டுமே


-இருக்க முடியும்.




எனது கண்ணீர் கண்டு, படித்து, ரசித்து


கருத்து சொல்லும் தோழமைக்கு


நன்றிகள் பல _கூறி..!! மதிப்பில்லா


உள்ளத்தை தவிப்புக்கு


ஆளாக்கவா..!என்று




ஏனோ இன்று கண்ணீர் பத்தி


எழுதி எல்லோரையும் அழ வைக்கிறீர்...


என குறுஞ்செய்திகள் தொடும் முன்னே!




நான் எனது தந்தையின் பிரிவிற்கே


கண்ணீர் சிந்த முடியாமல் தவித்ததை நினைவுகூர்கிறேன்?




.... ஆனாலும் கவிதை எனக்கு மிகவும்


பிடித்திருக்கும்


மனதை முழுமையாய் ஆக்ரமித்தது ...


ஒரெ நொடியில் இறுக்கமாய்


இருந்த மனதை மறுநொடியில்


நிலா தேடும் குழந்தையாய்.


கன்னக்குழி காட்டி கண்சிமிட்ட வைக்கும்..!!அது..




கண்ணீரும் சுகமானது என்பதைச்


சொல்ல வந்தேன்.


அது கவிதையை விட


சுகமானதா என எழுதும் போது


அறிந்து கொண்டேன்..




ஆனந்தக் கண்ணீர் அருமை.-ஆனால்




மனதை கரைக்க கூடிய, அழுத்தக் கூடிய




கண்ணீர் விடும் தருணங்களை நான் -தவிர்க்க விரும்புகிறேன்.


அதாவது அது போல் தருணங்கள் நிகழாதிருந்திருந்தால்


நன்றாக இருக்குமென்றேண்ணி..






கண்ணீரும் சுகமானது தான்.


சிந்தப் படுவது யாருக்காக என்பதைப் பொறுத்து.




உண்மையில் வெளியே ரொம்ப சந்தோஷித்து


நடமாடும் நபர்கள் உள்ளே ஏதோ ஒரு


விதத்தில் காயம் பட்டவர்களாக இருப்பார்கள்.


வெளியே சிரித்து நடமாடினாலும்,


காயம் பட்ட இதயம் கண்ணீர்


விட்டுக் கொண்டிருக்கும் சிலருக்கு.






பூவின் மீது நீர்த்துளி


மன கிறுக்கலின் வழி கண்ணீர்த்துளி


எனக்குப் பிடித்தது இந்த வழி





சிரிப்பில் அழுவதும் அழுகையில் சிரிப்பதும்.




-கார்த்திக் ராஜா!
 —