Thursday, September 27, 2012

அநாமதேய அழைப்புகள்


சற்று முன்...
***********
பெண்: ஹலோ... எப்படி இருக்கீங்க என்னை மிஸ் பண்ணுறீங்களா?

ஆண் : ஆமா!  ரொம்பவே மிஸ் பண்ணுறேன் டியர்,

பெண் : எப்படிங்க உங்களை விட்டு போவேன், உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் நான் உங்க தனிமையில விட்டுட்டு போய்டுவேனா...

ஆண் : நீதான் எனக்கு எப்போதும் கூடவே இருக்கிற டியர்...

# நீங்களும் உங்க தனிமையை கொள்ள வேண்டுமா! ஸ்டார் மற்றும் 9-ஐ டயல் செய்து... ஃப்ரெண்ட்ஸ் சாட்- சேவையை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். உங்கள் நம்பரைச் சொல்லாமலேயே... உங்கள் துணையை தேர்ந்தெடுங்கள்... இந்த சேவைக்கு கட்டணம் முப்பது நாட்கள்க்கு 30 ருபாய் மட்டுமே...

மீண்டும் அதே உரையாடல்...
மீண்டும் மீண்டும் என 3 முறை இந்த ஒலிபரப்பு “சேவை?!” +911400035667 - என்ற அநாமதேய [vodafone]  அழைப்பில் இருந்து ...








கலாச்சரம் பண்பாடு நாகரீகம் எல்லாம்  கிழிகிழியென கிழிந்து கொண்டிருக்கும் போதே... ஒன்னொரு மூலையில் இப்படியான [பாலியல்] அழைப்புகளை கொடுத்துக்கொண்டிருக்கும் மக்களின் அத்யாவசியத்தேவையில் இடம் பிடித்துவிட்ட தொலைப்பேசிகளின் அழிச்சாட்டியம்.






-இதை எல்லாம் தடுக்க வழியே இல்லையா...!
[சற்று முன் எனக்கு வந்த அழைப்பின் உரையாடல் இது]

கடலோரக்குருவிகள் -பாலகுமாரன்



மனிதன் தன்னை உணர புத்தகங்கள் மிக முக்கியமான காரணிகளாக அமைந்துவிடுகின்றன...!
பாலகுமரனின் - சாந்தமயமான எழுத்தில் திளைத்திட இன்னும் ஒரு வாய்ப்பாக அமைந்தது... கடந்த தினங்கள்

அவருடைய “கடலோரக் குருவிகள்” நாவலை இரண்டு தினங்கள் முன் படித்துவிட்டு...இப்போது வரைக்கும் மனதுக்குள்  ஒவ்வொரு  அத்யாயத்தினையும் மீண்டும் மீண்டும் நினைத்து மறுவிக்கிடக்கிறேன்...

வாழ்க்கையின் உணர்வுகளை வகையாய்ச் சொல்லிக்கொடுக்கும் ஆசான்களில் ஒருவராய் பாலகுமாரன் அவர்களை காண்கிறேன்...!

கடலோரக் குருவிகள்-Kadalora kuruvigalமுடிந்தால்... [நாவல் விரும்பிகள்] கடலோரக்குருவிகளை புரட்டுங்கள் நிச்சயம் உங்களை நீங்களே உணர்வீர்கள்...!

கர்பிணி-யை உதாரணப்படுத்துவதிலும் சரி... குருவிக்கதையை கருவாக எடுத்துச்சொல்வதிலும் சரி...
இன்றைய இளைஞர்களுக்கான நெம்புகோல் அவர் பேனா என்பதை மறுப்பதற்கில்லை..! முன்னுரையில் இயக்குனர் ஷங்கர் இப்படிச் சொல்லி இருக்கிறார்...

இந்த நாவலின் 30ஆவது அத்யாயம், முதல் கடைசி பக்கம் வரை அனைத்துப்பக்கங்களையும் தன் ட்ரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி மீது ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று...!


-கவிதைக்காரன்

Monday, September 17, 2012

புத்தகக்கடை


இந்த மாதந்த்தின் மிச்சமான நாட்களின் இரவு நேரம்   மிக அருமையான தருணங்களால் ஆக்கிரமிக்கப்பட இருக்கின்றன!

ஆம்...!  ஐந்து புத்தகங்கள் இப்போது இன்னும் அதிகமாய் என் அலமாரியில் இடம் பிடித்த என்ற மகிழ்ச்சியில்...! நான்.

 கடந்த மாதங்களில் கடந்து வந்த புத்தகங்களின் தாக்கம் மனசுக்குள்ளே ஒட்டிக்கிட்டே இருக்கும் போது ..நண்பர் [அண்ணன் ]  ஒருவர் வீடு மாற்றலாகி கிரஹப்பிரவேசத்திற்கு அழைத்திருந்தார்...!

விழா முடிந்து திரும்பும் போது அவரது பழைய வீட்டில் சில எலெக்ட்ரானிக் பொருட்களை எடுத்து வர நண்பருடன் சென்றேன். சென்றதும் ரொம்ப நல்லதாப்போச்சு...!

அவரது அலமாரியின் இடைவெளிகளில் கொஞ்சம் புத்தகங்கள்...காணக்கிடைக்கப்பட..

இப்போ அவர் தயவால் ....


1,என். சொக்கனின் CIA -அடாவடிக் கோட்டை 

2,கோபிநாத்தின் 2010-ல் பதிப்பாகிய ... நீயும் நானும் 


3,எம்.ஜி. தேவசகாயம் எழுதி, ஜெ.ராம்கி அவர்களால்
தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட
“எமெர்ஜென்ஸி” -ஜே.பி யின் ஜெயில் வாசம்
 [இந்திரா Vs ஜெயபிரகாஷ் நாராயண்.]














4, பா.ராகவனின் டாலர் தேசம் [அமேரிக்காவின் அரசியல் வரலாறு]












*இவர் எழுதிய  “மாவோயிஸ்ட்” அபாயங்களும் அதன் பிண்ணணியும் - புத்தகத்தை கடந்த வாரங்களில் படித்த போதே இவரது பிற புத்தகங்களின் தேடலில் டாலர் தேசத்தை முதன்மையாக தேடினேன். :) கிடைத்துவிட்டது !




இவை அனைத்துக்கும் மேலாக நான் மானசீக குருவாக நினைக்கும் அறிவியல் எழுத்தினை எனக்கு அறிமுகம் காட்டிய திரு.ரங்கராஜன் *சுஜாதா*  அவர்களின் சிறுகதைத் தொகுப்பான




5, உயிர்மை பதிப்பகத்தின்  “தேர்ந்தெடுத்த சிறுகதைகள்” முதல் தொகுதி [50 சிறுகதைகள்] புத்தகமும் இப்போது என் கையில் புரள்கிறது...!
சொல்லவும் வேண்டுமா கீழிருந்து மேல் வரிசையாக சுஜாதாவிலிருந்து வாசிப்புப்பட்டியலை துவங்கி விட்டேன்!




இதில் டாலர் தேசம் புத்தகம் மட்டும் 857-பக்கங்களை உள்ளடக்கியது கிட்டத்தட்ட பள்ளிக்கூட நாட்களில் தூக்கிச்சுமந்த பழைய ஏற்பாடு பைபிள் அளவில்...!

ஒரு நல்ல நண்பன் நூலகத்துக்குச்சமமானவன்னு சொல்லுவாங்களே...புத்தகங்களும்   நான் நண்பனா பார்க்கும் ஒரு ஜீவன் !
இன்னும் இரண்டு வார காலத்திற்கு என்னை கையில் புடிக்க முடியாது அவ்வ்வ் ஹாஹா! :)
- கார்த்திக் ராஜா.


Wednesday, September 5, 2012

சிவவாக்கியர் சித்தர்..


நண்பனிடம் சற்று முன் தொலைப்பேசி உரையாடல் போது பேச்சு அப்படியே சமீபகாலத்தில் ஊடகங்களுக்கு செய்திகளை வாரி வழங்கும் ஆன்மீகவாதி ஒருவர் பற்றி [கதவைத் திற ] பேச்சு தொடர்ந்தது..! [ 09-05-2012 ]

அப்படியே...  “சிவவாக்கியரை”  பற்றி அறிமுகப்படுத்தினால்... அக்காலச் சித்தர்களில் சிவவாக்கியரின் பாடல்களை உடனே தேடிப்படித்து தொலைப்பேசி உரையாடலினூடே.. வியந்து கலந்துரையாடினோம்!



சிவவாக்கியரை ஒரு சித்தர் எனச்சொல்லுவதை விட பெரியாரின் முன்னோடி எனச்சொல்லலாம்! அவரின் பாடல்களில் அவர்ச்சாடாத சமூக மூடநம்பிக்கைகளே இல்லை  எனச் சொல்லலாம்!


சிலை வழிபாடு பற்றி

 “நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

சமைத்த பாத்திரம் சுவையை உணருமா என்ன? உள்ளிருக்கும் கடவுளை அறியாமல் நட்டுவைத்த கல்லை நாலு புஷ்பம் சாத்தி வணங்கி நிற்கிறாயே என்கிறார்.!

ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை [?]  ஒரு கட்டுக்கோப்பிற்குள்
கொண்டுவர,  நல்வழிப்படுத்த  உருவ  வழிபாடு  தேவைப்படுகின்றது.

சட்டத்துக்கும்,  சான்றோர்  உரைகளுக்கும்  கட்டுப்படாத   சிந்தைத்
தெளிவில்லாத  மனிதர்களுக்கு,  ஒரு  வடிவத்தைக்  காட்டி இதுதான்
கடவுள்,  இவர்  உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை
தரக்  காத்திருக்கின்றார்.

ஆகவே  தவறு  செய்யாதே என்று கண்டிப்போமானால்  அந்தக்  கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில்கடவுள்  கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்; கடவுளின் கட்டளை என்று  சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்
படுகிறார்கள்.

அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்பயனாகிறது.  பலரை  நல்வழிப்படுத்த  உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.

     ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.உருவ  வழிபாடு ஒரு  மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம் ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில் இருப்பதாகவும்,   மண்ணில்  இருப்பதாகவும்,    மரத்தில்   இருப்பதாகவும்,
உருவமைத்துக்    காட்டுவது    கடவுளையே   அவமதிப்பதாகும்  [ஆனாலும் கடவுளை **கடவுள்ச் சித்தாந்தத்தை** இவர்களும் விட்டுவிடவில்லை]  என்று
வாதிடுகின்றனர். சிவ வாக்கியர் சாடியதெல்லாம் மூடப்பழக்கவழக்கங்களை...

   “ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
     தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
     ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
     பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

-பாடலின் அர்த்தம் அதிகம் விளக்கத்தேவையில்லை.. *ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை..!* யாரென்றறிந்திட முடியாத ஆதி சித்த நாதரை பேதை மனிதர்கள் செய்யும் கூற்றுக்களை பார் உலகமே என்கிறார்..!

எச்சில் பண்டங்கள் இறைவனுக்கில்லை என்கிறீர்களே.. உங்கள் வாய் முணுமுணுத்த வேதங்களில் எச்சில் படவில்லையா? கன்று எச்சில் பசு மடியில் கறந்து நீங்கள் அபிஷேகிக்கும் பாலில் இல்லையா?

[அவர் இன்னும் ஆழமாய் மனிதனின் பிறப்பில் கூட கை வைத்து இருக்கிறார்... விந்து எச்சில் பற்றியும்  நான் தவிர்த்தமைக்கு மன்னிக்கவும்]

மீன் இறைச்சி தின்பதில்லை என கூறும் வேதர்களே மீன்வாழும் நீரைக்குடித்துக் கொப்பளித்ததில்லையோ, மானுரித்த தோலைனை மார்பில் சூடியதில்லையோ,  ஆட்டிறைச்சி தின்னதில்லை என்போரே.. உங்கள் யாகங்களில் ஊற்றும் நெய்யில் உள்லதென்னவோ? என்கிறார்.

 “மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
     மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)

இவ்வளவு தூரம் வந்தவர் சாதியைச் சாடாமல் போவாரா என்ன? ம்ம்ம் அதையும் துவைத்து தொங்க விட்டிருக்கிறார்.

 “சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ
     பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோகாதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ
     சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே” (47)

 பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
     இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ
     பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
     பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாடு மும்முளே” (40)


ஒருவர் பலரிடத்தும்  பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,
ஞானியாகவும்   இருக்கலாம்,   யோகம்  செய்து  கொண்டும்   இருக்கலாம்,
நாட்டைத்  துறந்து  காட்டிலே போய்க்கூட வாழலாம்.  ஆனால் உள்ளத்தில்
தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன
விரதங்கள்  யாவும்  பாழாய்  முடியும்.  உள்ளத்திலே குற்றங்களை வைத்துக்
கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.
     அப்படியானால்  உண்மையான  கடவுள்தான்  யார்? என்ற வினாவுக்கு
அறிவுதான்  இறைவன்  என்று  விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவு
தான்  இறைவன் என்றால்  அறிவாளிகள் மட்டும்தான்  இறைவனைத் தொழ
இயலுமோ?  என்ற  வினாவும்  எழுகிறது.  இல்லை  பாமர  மக்களும்  தம்
அன்பினால்  இறைவனைத்  தரிசிக்கலாம்   என்றும்   இறைவன்   எங்கும்
நிறைந்திருக்கிறான்  என்ற  கருத்தையும்   சிவவாக்கியர்  தம்  பாடல்களில்
நிறைத்துக் காட்டுகின்றார்.



-தேடல் தந்த தளங்களில் இருந்து

கவிதைக்காரன்.

சிவகாசி...! வெடித்த உயிர்கள்




கொஞ்சம் பரிதாபமும்..!
சில கண்ணீர்த்துளிகளும்...!
நெஞ்சைக் கொல்லும் கதறல்களுமாக
சேர்த்து...

குட்டி ஜப்பானை
குலைத்துப்போட்டு
விளையாடும் கோரதாண்டவம்
மீண்டும் ஒருமுறை..
அரங்கேற்றப்பட்டுக்கிடக்கிறது.

-கவிதைக்காரன்

Tuesday, September 4, 2012

அடிப்படை அலட்சியவாதிகள்...நீங்கள்?




அலட்சிய அட்டைகள்
நம் லட்சிய
உதிரத்தை
உறிஞ்சிப்போதல் கண்டு

 எப்போது தான்
கொதித்திட்டோம்...!

நாளை
பார்த்துக்கொள்ளலாம்!

மறு நாள்
பார்த்துக்கொள்ளலாம்

அடுத்த வாரம்
பார்த்துக்கொள்ளலாம்

அடுத்த திங்கள்
பார்த்துக்கொள்ளலாம்-என

அடுத்து அடுத்து என்றே
படுத்தே கிடந்ததினால் தான்

பட்டினிக்கூட்டத்திற்கு
பஞ்சமே இல்லையோ..!

அழுது நின்ற கண்கள் கூட..!
கண்ணீரின்றி  வற்றிப்போனதற்கு
உன் அலட்சியமுமோர் விடைதானோ!

இன்று மழையில்லை..!
உனக்கோ குடைகேடானது..!

நாளை விளைநிலமில்லை
உனக்கு அடுக்குமாடி வீடானது..!

மறுநாள் விதைக்க
விதையுமில்லை..!

நீ வித் அவுட் சீஸ்
பர்க்கரை வெண்ணையில்
தொட்டு விழுங்கிக்கிடக்கிறாய்..!

நாளை விவசாயமுமில்லை
விவசாயியுமுமில்லாமல்

போன பின், நீ எங்கள் சுடுகாட்டு வீதியில்
குலசம்  விசாரிக்க வந்தென்ன பயன்.!

இங்கே புயலடித்தால் உனக்கென்ன?
பூகம்பம் வந்தால் உனக்கென்ன!?

உன் வீட்டுக் கண்ணாடிக்கோப்பை
விழுந்து உடைந்தால்
வீலென்று பதறும் நீ...

உன் கண் முன்னாடி மடிந்தே போகும்
சக மனிதனை கண்ணெடுத்தும் பாறாதது ஏனோ!

உன் அலட்சியத்திற்கும்
அவனுக்கும் சம்பந்தமில்லை
என்று மட்டும் சொல்லிவிடாதே..

அவன் வீழ்ந்து கிடப்பதின் சாரமே
உன்  அலட்சியத்தின் அஸ்திவாரத்தினால்தான்

கதவிடுக்கில் நசுக்கப்பட்ட
கைவிரல் போல்...! அவன் துடித்ததெல்லாம்;

உன் ஒற்றை விரல்
 கடமையை நீ செய்யாது போனதினால் தான்!

ஓட்டுப்போடும் சரிசையில் நீ
இல்லாது போனதினால்; ஆட்டிப்படைக்கும்
அறுகதை அற்றக்கூட்டத்தை அவையேற்ற காரணமாய்!

இயற்கைக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்
மழை இல்லாது போனதற்கும் மாண்டு உழவன் சாவதற்க்கும்
நானெப்படி பொறுப்பேவேனென்றா சிந்த்தாந்தம் பேசிடாதே...!

மண்ணை கடத்தி.. என் நிலத்தாயை
கற்பழித்தான்; மதிலைக்குடைந்து
எங்கள் கனிமத்தை கவர்ந்திட்டான்,

கன்னி வயிற்றில் கத்தியைச்சொறுகுதல்
போல- எம் நதியைக் கீறி நீரை கடத்திட்டான்..!

உரிமைப்போராட்டம் உளுத்துப்போய்
உணர்வுக் கொதிப்பலை..அடுப்பின் தீயை
அணைத்துப்போனது..

உழவுக்கு வழியில்லை.!
உணவுக்கு..  உரமில்லை..!
தானியங்கள் வீணாக்கி..!
தரணியை பாழாக்கி..!
கழநியை கட்டிடமாக்கி..!

ஊரெங்கும் மது ஊட்டி..
ஊழலில் ஊறித்திழைத்து..!
தான் மட்டும் வாழ்ந்து போகும்
தன்னாட்சி தறுதலைகளை

தனிப்பெரும்பான்மையினால்
அவையேற்ற உன் அலட்சியம் தான்
காரணமே..!

உன்னை மட்டும் கை நீட்டிச் சொல்லல்
தகுமோ! உன்னைப்போல் உணர்வுச்சோம்பேரிகள்
அலட்ச்சிய அரிதாரத்துடன்...! ஆயிரமாயிரமாய்..!

பின் நாடு பட்டுப்போகாமல்
பட்டாடைப்பொலிவாய்
திரிந்திடுமா என்ன?..!

மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும்
மக்களின் அரசில் மக்கள் பாடு மந்தை மாடாய்..!

இதுவரைக்கும் உணர்த்தியதுண்டா உனக்கு..!
ஏதேனும் உறுத்தல்கள்..!

மிச்சம் வைத்துக்கொள் நாளை ..அவ்வுறுத்துதலை..!
என் கேள்விகளுக்கு  உன் அலட்சியம் பதிலாய்..
இல்லாது போகட்டும்...!

-கவிதைக்காரன் 


ஆசிரியர் தினம் - கவிதைக்காரன்!



  • ஆண்டுகள் தோறும் ஆசிரியர் தினம்
  • வந்து போய்க்
  • கொண்டிருப்பதென்னவோ
  • வாடிக்கை..!
  • அன்றெல்லாம்
  • உங்களை தாழ்ந்து
  • பணிந்து...!
  • கவிதையில் நனைத்து
  • கண்ணீர் மொழி பேசும்
  • முரட்டுக் குழந்தைகள் நாங்கள்..!
  • இந்த முரணை
  • நினைத்துப்பார்க்கையில்
  • எங்களுக்கே வேடிக்கையாகி இருக்கும் 
  • உங்கள் பேரில் கேலிகளும்
  • நாங்கள் செய்ததுண்டு..!
  • அதனை கொஞ்சமும்
  • பொருட்படுத்திக்கொள்ளா
  • பக்குவம் உங்கள் போல
  • யாருக்குண்டு...! 
  • சொன்னதை எப்போதும் 
  • சத்தியமாய்ச் சரியாய்
  • செய்ததில்லை..! 
  • கற்றுக்கொடுக்கும் போதெல்லாம்
  • எங்கள் கவனம்..கடற்கரை
  • தக்கை போல் கவனிப்பற்றுக்
  • கிடந்ததும் உண்டு..!
  • தேர்வென்று வரும் போது
  • மட்டும் மாய்ந்து
  • மாய்ந்து படிக்கும் மேதாவிப்
  • பிள்ளைகள் நாங்கள்..!
  • இன்று மட்டுமாய்
  • மேல்பூச்சுக்காய்
  • உங்களை புகழ்ந்து
  • புகழ்மாலை சூட்டுவிக்க
  • எங்களுக்கும் விருப்பமில்லை..!
  • ஏனென்றால் நாங்கள்
  • உங்களிடம் தானே! இப்படி
  • மனதின் வார்த்தைகளை
  • உண்மையாய்ப் பேசக்
  • கற்றுக்கொண்டோம்! 
  • ஆம்!
  • உண்மையில் நாங்கள்
  • உங்களுக்கு ஒப்பாய்
  • எப்போதும் நடந்ததே
  • இல்லை..! 
  • ஆனால்!
  • வாழ்க்கையின்
  • நீரோட்டத்தில் நதி எல்லா நாளும்
  • தேக்கங்களாய் இருந்திடாதென்பதை.. 
  • சில நேரம் வெள்ளமெடுத்தது
  • போல் உணர்த்திப்போகும்
  • உங்களின் வார்த்தைகள்..! 
  • அந்த வெள்ளத்தில் விழுந்து
  • எதிர்நீச்சல் போட
  • எப்படியும் பயிற்றுவித்து
  • விடுகிறீர்கள்..! 
  • இங்கே வரும் போது
  • நாங்கள் எப்படியெல்லாமோ
  • தான் வந்திருந்தோம்! 
  • மறுத்தாலும் அதுவே
  • உண்மையென்றானது..!
  • ஆயினும் வெறுத்திடாமல்
  • பேதமின்றி அனைவருக்கும்
  • வேதம் கற்பித்தீர்கள் நீங்கள்! 
  • இது...இன்று
  • நேற்றுமட்டுமில்லை
  • நாளையும் எங்களைப்போல்
  • இன்னொருவர்..!
  • மீண்டும்  மற்றொருவரென..!
  • கடந்துகொண்டே போகிறது...! 
  • நாங்கள் உங்களின்
  • நிழலில் நீச்சல் கற்று..
  • நடந்து கொண்டே போய்விடுகிறோம்..
  • எந்த நன்றியுமில்லாமல்..! 
  • எப்போதும்
  • அதை நீங்கள்
  • எதிர்ப்பார்த்ததில்லை..!
  • என்பது இப்போது புரிந்திருந்தோம்! 
  • என்றாவது எங்களின்
  • வருங்கால வசந்தங்களில்
  • உங்கள்
  • நினைவு நாடாக்கள்..! 
  • எங்களின்
  • இசைப்பேழையினில்
  • இசைக்கப்பட்டிருக்கும்.., 
  • அன்றெங்கள் கண்களில்
  • துளிர்த்திருக்கும்
  • அந்த ஒற்றைத்துளி
  • கண்ணீர்தான் உங்களுக்கான
  • நன்றியைச்சுமந்திருக்கும்..! 
  • ஆசிரியர்களே... உங்கள் அன்பிற்கு
  • முன்னால் நாங்கள் நாணல் தான் எப்போதும்..! 

  • என் ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்!  

-கவிதைக்காரன் ! 


உலகப்புதிர்கள்!





உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத இரகசியத்தை கொண்டுள்ளது.

பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் இரகசியத்திற்கு இன்னும் விடைகிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான "கிஸா" பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது. இந்த அளவுக்கு கற்களை தோண்டி எடுத்தால் பிரமாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை.

இதைப் போலவே 1947 -க்கும் 1956-க்கும்இடைபட்ட காலத்தில் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் உள்ள கும்ராம் மலைக்குகையில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 900 ஆவணங்கள் கிடைத்தன.
மெல்லிய செப்பு தகடுகளில் எழுதப்பட்ட இவை சாக்கடல் சுருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட இந்த சுருள்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகசியம். தங்கப்புதையலுக்கான தகவல்கள். புதையல் கரிசிம் மலையில் இருக்கிறது என்கிறது ஒரு சுருள். ஆனால் கரிசிம் மலை எது என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத வினா.
இலக்கியமும், சினிமா பாடல்களும், வரலாறும் அலசி காயப்போட்ட Ôபாபிலோனின் தொங்கும் தோட்டம்Õ எங்கே இருக்கிறது? என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 4 00- ல் பெரோசஸ் என்பவர்தான் முதன்முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார். பாக்தாத்துக்கு பக்கத்தில் கி.மு.6 00-ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கையாக தெரிவிக்கிறார்கள்.

உலகில் உள்ள மலைகளிலேயே மிகவும் பணக்கார மலை எதுவென்றால் அது ஆல்ப்ஸ் மலைதான். காரணம் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளுக்கு பயந்து, தான் வைத்திருந்த பிளாட்டினம், தங்கம், வெள்ளி முதலியவற்றை அள்ளி ஆல்ப்ஸ் மலையில் ஒளித்து வைத்திருப்பதாக நம்பி மலையெங்கும் அலைந்து திரிந்தது அமெரிக்கப்படை. கடைசியாக ஒரு புதையலை கண்டுபிடித்தது. அதுவே பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானம் கொண்டது. அன்றிலிருந்து மக்கள் கூட்டம் எப்போதும் ஆல்ப்ஸ் மலையில் புதையல் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது.

இயேசு கிறிஸ்து இறுதியாக திராட்சை ரசம் குடித்த கோப்பை ஒன்று ஐஸ்லாந்தில் இருப்பதாக கூறுகிறார்கள். திஹோலி கிரெயில் என்று அழைக்கப்படும் இந்த கோப்பை பூமிக்கு அடியில் 15 அடி ஆழத்தில் ஒரு இரகசிய அறையில் இருப்பதாக கதைகள் உலவுகின்றன. கோப்பை இருக்கிறதா? இல்லையா? என்று மக்கள் கூட்டம் ஐஸ்லாந்து பகுதியில் பூமியை தோண்டிக்கொண்டே இருக்கிறது. இப்படி விடை கிடைக்காத இரகசியங்கள், அதிசயங்கள் பூமியில் நிறைய இருக்கின்றன.

-நன்றி தமிழால் இணைவோம்! முகநூல்

Saturday, September 1, 2012

தலைப்பில்லாத கவிதை....!


விழிகள்
உண்ணும்
பூக்களிங்கே...!

கவிதை
தின்னும்
காரிகை இங்கே..!

வதனம்
பேசும்..
வெண்ணிற விழிகள்..!

இதமாய்
இதயம் கொய்து போவதேன்..!

கொஞ்சம்
நேசமும்..!
கொஞ்சும்
சுவாசமும்..!

அள்ளிப்போனதென்..!
அந்தி நேர கவிதைகளை...!

ஒற்றைக் கீற்றோளியாய்
கணகளைச் சிமிட்டினால்..!

வெற்றுப் பாலையையும்
சோலையென்றாக்கினாய்..!

சோலையினுள்
தெரியும் இப்பூவுக்கோ பெயரில்லை..!

காலையினில் எழுதும்
இந்த கவிதைக்குமாய்...! சேர்த்து...!
தலைப்பில்லை...!

-கவிதைக்காரன்

காதல்...வைத்தேன்...!

ஒரு மாலை
நேரத்தின்
வெளிச்சப்பொழுதில்..
என் பக்கமாய் !
நீயிருந்தாய்
காதலோடு..!






















காற்றின்
இடைவெளிக்குள்
நாமிருவரும்
விலகிக்கொள்ள
காதல் வந்து -நம்மை
கட்டிப்போட்டுவிட்டு
கைகொட்டிச்சிரிக்கிறது!















யாரும் எழுதிடாத
கவிதையொன்றை
எனக்கெழுது
எனக்காதருகே
கிருகிசுத்தாய்...!

நான் மொத்தமாய்
வெட்கமாய் உனை
அணைத்து
சத்தமின்றி
ஓர் முத்தத்தை
உன்னில்
எழுதிவைத்தேன்...!














சட்டென்று
விலகி போடா பொறுக்கி !
கவிதை எழுதித்தாவென்றால்
கன்னங்களையா தின்கிறாயென..!
கள்ளமாய் புன்னகைத்தாய்..!






















இத்தனை
நாட்களும்..!
எனக்காகமட்டும்
நான் எழுதிய அத்தனைக்
கவிதையாயும்
நீ இருந்தாய்..!




























ஆனால்!
நான்
எழுதிடாத
கவிதையாய்
நம் காதல் இருந்தது..!
இறுதிவரை...!


**கவிதைக்காரன்**
    கார்த்திக் ராஜா!

தக திமி தா மழை..!


கொஞ்சமும்
சலனமில்லை...
இதற்கு முன் நிமிடம் வரை..!

எப்போது... மழைத்துளி
கன்னங்களில் விழுந்து
தட்டென்று தெறிக்கத்தொடங்கியதோ..!

அடுத்தவினாடியே...!
ஒரு ....ரெட்டைச்சுழியான!
குழந்தைத்தனம் உட்புகுந்து

குட்டிக்கரணமிடத் துவங்குகிறது..!
தகதிமிதா...மழை

-கவிதைக்காரன்.

இப்படியோர் இடத்தில்...!


திசைகள் எனக்கு வேண்டாம்...!
தினம் ...இரவு பகல்
எதுவும் வேண்டாம்..!

நீலவானுக்கும்
அலையில்லா கடலுக்கும் நடுவே பச்சையாய்ப்
பூத்திருக்கும்
சிறு மண் மேட்டில்...!

சிறகடித்துத் திரியும்..
சிட்டுக்குருவி கூட்டில்..-வாழ
ஒற்றைக்குரலில்
ஓர் வரம் வேண்டும்..!

பசி தூக்கம்
வேண்டாம்,
 பகை நட்பும்
வேண்டாம்..!

கள்ளம் வைத்துப்
பேசும் உள்ளங்கள்
எப்போதும் வேண்டாம்...!

அன்பும் ஆசையும்
வேண்டாம் ; அவையெல்லாம்
அரவணைக்கிறேன் பேர்வழி -என

என்னைப் பதம் பார்த்துப்போன
காயங்கள் இன்னும்
ரணப்பட்டே கிடக்கின்றன...!!

வேண்டியதெல்லாம் நான் பெருங்குரலெடுத்து
அழும் போது.. வழியும்
அந்த கண்ணீர்த்துளி

இந்தக் கடலுக்குள் விழுந்து
காணாமல் போவது போல்...!

என் கவலையும் எதிரொலியும்
எனக்கே கூட  கேட்காமல் போகவேண்டும்..!
இப்படியோர் இடத்தில்...!

-கவிதைக்காரன்!

வரலற்றின் ஏடுகளில் பெண்கள் -


*வரலாற்றின் ஏடுகளில் பெண்கள்*
-கவிதைக்காரன்.
_______________________________________________________________________________
1955 திசம்பர் மாதம்...!

ஒரு மாலை நேரம்... வேலை முடிந்து சோர்வினாலும் கால்வலியினால் கொண்ட அசதியினாலும் ! அலாபாமாவின் பேரூந்தில் பயணிக்கிறார். அந்த பெண்மணி.... மனிதனுக்கு மனிதன் சமம் என்னும் போது.. நிறவேறுபாடுகள் தலைவிரித்தாடிய நகரம் அது.

பெண்ணுக்கும் சரி, கருப்பு நிறத்தவருக்கும் எந்தவித மதிப்பும் இல்லாததாகக் கருதப்பட்ட காலக்கட்டம் அது. வெள்ளை நிறத்தவர் பேரூந்தில் ஏறி விட்டால் கருப்பு நிறத்தவர்கள் எழுந்துவிடவேண்டும்... என்பது அங்கு எழுதப்படாதச் சட்டம்.

அப்படித்தான் அன்றும் ஒரு வெள்ளையர் பேருந்தில் ஏறியவுடன், கறுப்பர்கள் அனைவரும் எழுந்துவிட்டனர். அந்த ஒரு  ஒர பெண் மட்டும் எழ மறுத்தார்.  “நீ எழ மறுத்தால், போலீசைக் கூப்பிடுவேன்” என்றார், ஓட்டுநர்.

“தாராளமாக செய்யுங்கள்” என்றார் அந்தப் பெண். போலீஸ் வந்தது. அந்தப் பெண்ணைக் கைது செய்தது. கைதி எண் 7053. என காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் அசரவில்லை, உரிமைக்குக் குரல் கொடுத்தார்.  வரலாற்றையே மாற்றிய ஒரு பேருந்து நிகழ்வு அது!.

விதைகள் எதுவும் செய்யாமல் விருட்சங்கள் உருவாகிவிடுவதில்லை. போராட்டங்களும் எதிர்ப்பும் இல்லாமல் உரிமைகள் சாத்தியமில்லை.

ஒரு உரிமைக்கான எதிர்ப்புக்குரல் அங்கே எழுந்தது. கறுப்பினத்தவர் என அடையாளப்படுத்தப்பட்ட சகமனிதர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு வழியமைத்தது.

யார் அந்த பெண்?. வரலாறு அவரை இப்படி அழைக்கின்றது “நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய்”   -என்று. உண்மையில் அந்தப் பெண்ணின் நிஜப்பெயர் ரோசாபார்க்ஸ். [Civil rights activist Rosa Parks ].

அந்த ஒற்றைக்குரல் மக்கள் குரலாக ஓங்கி ஒலித்தது. நீதி கிடைக்கும் வரை எந்த மாநகரப் பேருந்தில் ஏறுவதில்லை, பணிகளுக்கும் செல்வதில்லையென புறக்கணிப்பு போராட்டத்தை நிகழ்த்தினார்கள் மக்கள்.

எல்லாபக்கங்களில் இருந்தும் மிரட்டல்கள். துணிந்து நின்று போராடினார். ரோசா தொடர்ந்த போராட்டத்தின் விளைவினால்  சிவில் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.

"அன்று அவர் எழ மறுத்ததால்தான், இன்று நாங்கள் எழுந்து நிற்கவும், தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது" என்ற குரல் பகிரங்கமாக...எல்லாத்திசைகளிலும் எதிரொலித்தது  கருப்பினர்களால்.


ஆம்! ஒரு சரித்திரம் மாற்றி எழுதப்பட்டது.. இன்று அவரை மேலைநாடுகளில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வாழும் வரை மக்களுக்காக சுழன்றார்.
எண்ணற்ற விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது.

மிகையாக NAACP -இன் உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.இன்று அவர் பெயரில் “ரோசாபார்க்ஸ் மியூஸியம் ” ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வி முதலான பல சேவைகள் அதன்மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.!


2005-ம் ஆண்டு அக்டோபர் 24-ல் காலமான இவரால் ஒரு சரித்திரத்தை திருத்தி எழுத வைக்க முடிந்தது என்பதை நினைத்துப்பார்க்கும் போது.. பெண்மை எத்தனை மகத்துவமான சக்தி என்பதை உணரமுடிகிறது.


"I have learned over the years that when one's mind is made up,
this   diminishes fear; knowing what must be done does away with fear."
– Rosa Parks





-வரலாற்றில் நகர்வோம்...