Saturday, September 1, 2012

காதல்...வைத்தேன்...!

ஒரு மாலை
நேரத்தின்
வெளிச்சப்பொழுதில்..
என் பக்கமாய் !
நீயிருந்தாய்
காதலோடு..!






















காற்றின்
இடைவெளிக்குள்
நாமிருவரும்
விலகிக்கொள்ள
காதல் வந்து -நம்மை
கட்டிப்போட்டுவிட்டு
கைகொட்டிச்சிரிக்கிறது!















யாரும் எழுதிடாத
கவிதையொன்றை
எனக்கெழுது
எனக்காதருகே
கிருகிசுத்தாய்...!

நான் மொத்தமாய்
வெட்கமாய் உனை
அணைத்து
சத்தமின்றி
ஓர் முத்தத்தை
உன்னில்
எழுதிவைத்தேன்...!














சட்டென்று
விலகி போடா பொறுக்கி !
கவிதை எழுதித்தாவென்றால்
கன்னங்களையா தின்கிறாயென..!
கள்ளமாய் புன்னகைத்தாய்..!






















இத்தனை
நாட்களும்..!
எனக்காகமட்டும்
நான் எழுதிய அத்தனைக்
கவிதையாயும்
நீ இருந்தாய்..!




























ஆனால்!
நான்
எழுதிடாத
கவிதையாய்
நம் காதல் இருந்தது..!
இறுதிவரை...!


**கவிதைக்காரன்**
    கார்த்திக் ராஜா!

No comments: