Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, December 8, 2013

ரௌத்திரம்

சப்தமிடாத ஓர் ஊமை மௌனம்... உள்ளிருந்து எண்ணங்களை உருட்டும்..

போதிமரம் தேடிச்செல்லும் ஞானவாக்குகள் குப்பைத்தொட்டியெங்கும் இரைந்து கிடக்கும்

வேற்றுகிரகம் போலே சுற்றியிருக்கும் தொடர்பில்லாத மனிதனை தற்செயலாயேனும் கவனிக்கத் தோன்றும்

அடுத்தது என்னவென்ற கேள்விகள் தாகத்தைக் கொடுக்ககாலிக்
குடுவைகள் எக்காளமாய்ச் சிரிக்கும்.

கவனமாயிறுவென்னும் கருணைப்பட்டோர் வாக்குகள் போலானதோர் பசி தீர்க்கும் மந்திரம் வேறில்லை...

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

இச்செகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

பாரதி மெல்ல மெல்ல உள்ளிருந்து ரௌத்திரம் விதைக்கிறான்.. கூச்சலிட்டமனம் அமைதிப்பட்ட குளமாகுது!

அதன் கள்ள மவுனத்துக்கடியில் ஏதுகுடியிருக்குதென்று யாரறிவார்.

-கவிதைக்காரன்.

Thursday, November 21, 2013

குலம்வளர்க்கச் சேராயோ...


பூத உடல் நோகும் கண்ணா...
நாதன் காண ஏங்குவதில்...

காதல் வந்து தேங்கும் நெஞ்சம்
காத்திருந்தும் காலமென்ன... 
ஆதலினால் வந்துவிடு ஆவிபற்றிக் கொண்டுவிடு

ஊதல் வந்து வீசுதுகாண்
உயிரின் சப்தம் மாயுதல் கேள்..

ஏனுனக்குப் புரியவில்லை
இதுவரைக்கும் பதிலுமில்லை...

கோமறுத்த கன்றினைப் போல் கோதை உள்ளம் கனன்றதே பார்....

பார்த்திபன் தோள் கொண்டவனே பாவைதேடி வாராயோ...

ஊழிநிறங் கொண்டவனே
உனது மாரில்ச் சாயேனோ

ஆதிஷேசன் மீது ஆடும்
ஆநிறைக் கோனே...

என் நாதமென்னும் துகில் விரித்தேன் தாவி ஓடிவா...

உன் கூர்விழியால் குமைந்த பெண்ணை கூதல் வந்து வீசும் முன்னே
குலம்வளர்க்கச் சேராயோ...

- கவிதைக்காரன்

Sunday, November 17, 2013

விடிதலுக்கேங்கினேன்... நீ வரத் தாங்கினேன்...



ஏன் மணிவண்ணா..
என்மீதிரக்கமில்லையா..
பால் மருவும் வெண்கண்ணா
விட்டு தொலைவு போகிறாயெதற்கு...

தீப்பற்றிய மெழுகாய் என் உளம்
உருகி உனைத்தேடித் தேயுது பாராயோ!

அரையணி தானவிழ
உடல் ஒளி தான் சிறிய
வளைகள் வழுக்கி விழுந்தனவே..
வந்தெனை நீயும் அணைத்திடுக...

மார் உயர்ந்தெழுந்து வாய் விம்மிடும் மங்கை
மனத் துயர் பார்க்கும் விழிகளை ஏங்கி ஏங்கி உயிர்த்தேயுதே...

தோங்கு மரமதில் வாங்கும் பூங்குயில் ராகம்
உன்பெயரெழுதி எனை மேயுதே...

பொழுது சாய்ந்து இருள் கம்மி கரைகிறது...
உளமோ உனை எண்ணி மருளுதே...

தூரமாய் உன் நிஜம்
வருவதாய் நோக்கினேன்...
ஆநிரைக் காண்கிறேன்
மாமணி கேட்கிறேன்
கோகலே நாகுகள் உகளுமன்றோ...
என் சொல்லி உய்குவேன் அவனையின்றி...

தோழி மேனியின் வெம்மையும் எனை இகழுமடி...
தோது ஏது இனி மாயன் வரவில்லை.
மாது நான் என்ன செய்கவோ
இருள் மிகச் சூழ்ந்தது
பனிப்புகை ஓங்குது..

அன்னைத் தோழியர்
அவரவர் துயிலில் தான் விழுந்து அயர்ந்து தூங்கவே...

அந்தகாரத்தின் ஆட்சி எனைக்கொய்ய
உன்னைக்காணாது
அயர்ந்த விழியது இன்னும் உயிர்பெற்று ஏங்குதே...

விடிதலுக்கேங்கினேன்
நீ வரத் தாங்கினேன்...
உன் செவி என் குரல் மடுக்கவில்லை...
ஏனென்று எனக்கொன்றும் புரியவில்லை...

ஒண்சுடரோனவன்
அவனைக் காணவில்லை
பெண்ணிவள் படுந்துயர் அவனுஞ் சகிக்கவில்லை...

யோ.... என்ன ஓர் இரவு ஏழு ஊழியாய்
எரிதழல் போலென்னை கொல்குதே..

மன்னவ நீவரின் யாதும் தீராது பாவி
என் நெஞ்சு இனி என்ன சொல்லித்தான் தீரும் போ...




- கவிதைக்காரன்

Sunday, May 6, 2012

அன்னையர் தின வாழ்த்து..???


நெஞ்சம் எரியுது தனலாய்...
நெருஞ்சி முள்ளின் கீறலாய்..

அன்பைத் தேடி ஏங்கி வழிந்த என் உள்ளம்
சென்ற பாதையெல்லாம் வெறுமை வடிந்த பள்ளம்

அன்னை அன்னையென அன்பை மட்டும் எழுதுவதில்
உடன்பாடில்லை எனக்கு...

அனுதினமும் அன்புக்கு ஏங்கி அடுத்த வேலை
உணவுக்காய் எச்சில் காக்கைகளோடு இடமில்லாமல்
படுத்துக்கிடந்த எனக்கு...
தாலாட்டுப்பாட்டுக்கு கேடில்லை

தாயானவள் தரம்தப்பி என்னை
தவிக்க விட்டுப் போனபோது
ஐயிரண்டு வயது எனக்கு

அடித்து துவைத்த அப்பன் வளர்ப்பில்
அடிவயற்றுக்கும் கஞ்சியில்லை.

பெருநகரத்தின் வீதியில்
பிச்சையெடுக்க கைகள் உயர
தன்மானம் தடை சொன்னதால்

கையேந்தி உணவகத்தின் அர்த்தஜாம நேரத்தில்
பத்துப்பாத்திரம் கழுவி காத்திருந்து
பசி நீர்த்தேன்...

அழுது அழுது கண்ணீரில் உப்பில்லை
ஏன் இப்படி பிறந்தேன்? என் மீது தப்பில்லை

பற்றி எரிகிறது தாயே...
பள்ளி செல்லும் பிள்ளைகள் -எல்லாம்
என்னை பக்கத்தில் தாண்டி
கடந்து போகும் போது...!

அன்னையர் தினமென
ஆங்கோர் விளம்பரநாளிதழில்
கண்டேன்...

அண்ணன்கள் பலரும்
அன்னையென்றாலே புனிதமென
மாண்பையே எழுதும் போது

என்னைப்போலான
இருட்டின் கரையில் வெம்பித்திரியும்
பேரின் கதைகேட்க ஆளில்லைபோல...

என் கண்ணீரையெல்லாம்
திரட்டி உண்மை எழுதுகிறேன்...

நீ நல்லவளா கெட்டவளா தெரியாது
ஆனால் நல்ல தாயாய் நீ இல்லை என்று
மட்டும் எனக்குத் தெரியும்

உன்னை குற்றம் சொல்லப்போவதில்லை
நான் - எங்கிருந்தாலும் நல்லாயிரு..
ஆனால் நான் இங்கு நல்லாவேயில்லை...!

தயவுசெய்து
இனி என்போல் யாரையும்
உருவாக்கிவிட்டுப்போய்விடாதே..!

கற்பனை & எழுத்து
-கவிதைக்காரன்

Thursday, May 3, 2012

மாலை நேரம் .... மனதின் ஓரம்,,, வந்தாள் தோழி..




மாலை நேரம் மனம் அமைதி வேண்டி
கொஞ்சம் வீட்டுத்தோட்டத்துப் பக்கம் 
எட்டிப்பார்த்தது மனம்...

நேற்றைய கவலை மூட்டையின்
முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதால்
அச்சுமைகள் கொஞ்சம் மனதை
இறுக்கிக்கிடக்க..

எதேச்சையாய் கைப்பேசித்திரையில்
தோழியவள் பெயர் மின்ன
தூரல் ஏறியது என் வானம்...

அழைப்பை எடுத்து நலம் விசாரித்து
நாட்களின் இடைவெளியை வார்த்தைகளில்
பகிர்ந்தது மனதை இறகாகப்
பறக்கச்செய்கிறது...

ஏனோ அதுவரை அலைபாய்ந்த மனது
அவளின் பேச்சினால் திசைமாறிப்போனது
வழக்கமாய் இருவரும் பரஸ்பரம் நிகழ்வுகளைப்
பறிமாறிக்கொள்வோம்... இன்று..

நான் வளர்க்கும் நாய்க்குட்டியின்
வளர்ச்சியையும் , மீன்களின் செல்லப்
பெயர்களையும், என் தோட்டத்தின் மரங்களையும் 
மலர்ச்செடிகளையும் அம்மா விதைத்த
கீரைச்செடிகளையும்... பற்றி கலந்துரைடாடும் போது

கொஞ்சம் கிணற்றுப்பக்கம் சென்ற போது 
குதித்துக்குளிக்கும் ஆசை என்னை ஆட்டுவிக்க 
பேச்சைத் துண்டித்து நீருக்குள் மூழ்கினேன்..

இயற்கையும் தோழமையும் என்னுள்
இருந்த அத்தனைக்கவலைகளையும் 
மூழ்கடித்தே போனதை நினைத்து 
சிலிர்த்தேன்... 

அவள் என்மீது கோபித்திருப்பாளா தெரியாது... 
இடையிலே துண்டித்தேனென.. 
ஆனால் அதையே அவளிடம்
நான் எதிர்ப்பார்க்கிறேன்...

நாளை சண்டையிடுவதற்காய்
அழைப்பாளென...!

-கவிதைக்காரன் 

Tuesday, March 20, 2012

ஆரெனின் கண்டால் சொல்வீர்...



 



செம்பொட்டு புலரும் காலை நிதம்
வானில் பறந்து பாங்காய்..

சிலிர்க்கும் சிட்டே கொஞ்சம்
கேளென் இசைக்கும் நெஞ்சம்...

பெட்டைக்குருவி உன்னை
பேணமறந்து போனோம்..!

முற்றும் அழிந்த பின்னே
இங்கே நினைவுநாளா விளக்குகின்றோம்..

அலைகற்றை எழுப்பும் தாக்கம்
சிதைந்ததெம் மழலை ஏக்கம்..!

உச்சிமிகப்பழுக்கும் வயதில்
காணவோ நீயும் இல்லை...

எத்தனை மரங்கள் கொன்றோம்...!
எத்தனை பறவை தின்றோம்...!

வலைஉலகம் சுமக்கும் பெயரை -எம்மையும்
அறியாமல் வல்லூறாய் வதைத்தே கொன்றோம்..

நெற்றை கொடுக்கும் கைகள் -நிதம்
உன்னை காணாது கண்கள் தேங்கும்...!

ரெட்டை சிறகு போதும் ஆரெனின்
எனக்குத் தாரும்...

பீடித்த மானுடம் வேண்டாம்
நீ வாழ்ந்த வெறுங்கூடெனக்குப் போதும்...

யாரெனில் எனக்குச்சொல்வீர்
ஆங்கோர் குருவி கண்டால்..

-கவிதைக்காரன்

Friday, March 9, 2012

உடைந்த சில்லுகளாய் மனம்..





என் வழித்தடங்கள் எல்லாம்
வெறுமையால் நிரப்பப்பட...

போகும் பாதையெல்லாம் வேண்டா வெறுப்பாய்
நிலவும் கதிருமென்னை அன்னிச்சையாய்

ஆக்கிரமித்துக்கொள்ள
நிழல் என்னை நீங்காத இருள் என்னை பீடித்துக்கொண்டது..!

பெரும் போக்கிடமில்லாதவனாக
நாடியவரோடேயே நட்போடு அண்டிக்கிடப்பதால்

உனதருமையும் தரமிழந்து போகிறதோ!
மற்றான் மணம் புதிதென்பதால் தானோ

உன்னையே கண்முன் எடைபார்க்கவும்
துணியும் அன்போ...இவையெல்லாம்

எதை எதிர்ப்பார்த்து நின்றாய்
ஏமாற்றம் உன்னைச்சாய்த்துப்போட...கலங்காதே...

இல்லாத அருமை இருக்கும் பேருக்கும்
உணரும் வரை நீயும் நானும் மட்டுமில்லை
தனிமைக்கும் நீயே துணையாவாய்...

சில நேரம் சமாதானப்பட்டுக்கொள்ள முனைந்தாலும்
சட்டென உடைந்த கண்ணாடிச்சிதறல்களாக என்னைச் சாய்க்கப்பார்க்கிறதே.. என்செய்வாய்...
**
முள்ளுக்கு வேலி இல்லை என..
முடங்குதல் அழகோ..!

உன் வானம் பின்னால் ஆயிரம் விண்மீன்...
வாழக்கற்றுக்கொள்வதைக் காட்டிலும்

வாழ்ந்துவிடல் நன்றாமே.. குழந்தையாய்
கொஞ்சம் தவழ்ந்து போவது

தாழ்ந்து போவதிலும் நன்றென்பாய்...
வா... ஒரு மின்னல் மழை ரசிக்க...

வெயில்காலம் மழைக்காலம் மாறி வந்த போதும் கவிதைக்கு குறைவா என்ன உன்னிடம்... !

கவலையை கடவாய் மனிதா!
ஏதுமில்லை வெற்றிடம் காற்றோடும் கதை பேசலாம்..!

Wednesday, February 22, 2012

எதிர்வினை..





நிசப்த அலைவரிசையில்
அவன் என் முன் அமர்ந்துகொண்டு
பார்வையால் என்னை ஆக்கிரமிப்பதை
தடுக்க முடிவதே இல்லை..!


அவன் கேட்கும்  கேள்விகளுக்கு
பதிலைச்சொல்லி முடிப்பதற்குள்
அடுத்த கேள்வியை
எடுத்து என்  முன்வைக்கிறான்..


எப்படி சாத்தியமாகிறது இவனால்
என்று நான் சிந்திக்கும் முன்னரே
அடுத்தடுத்த கேள்விகள்
எடுத்து வைக்கப்பட்டன


ஆனால்...!
ஒரு ஒற்றுமை என்னவெனில்


அவன் கேட்க்கும் அத்தனைக்கேள்விகளும்
என் அன்றைய நாளின் செயல்களையே
உடனிருந்து வேவுபார்த்ததாக இருக்கிறது..!


முதல் கேள்வி இப்படியாக இருந்தது
ஏன் தேவை இல்லாத இடங்களிலும்
உன் சுபாவம் தெரியாதவரிடத்தும்
வார்த்தைகள் விதைக்கிறாய் என..!


அடுத்த கேள்வி உனக்கான அடையாளத்தை
ஏன் இத்தனை மட்டமாக்கிக்கொள்கிறாய்? என!


அடுத்த கேள்வி பொறுமையில்லாமல்
உன் கோவத்தையும் வெளிப்படுத்தி
பொதுஇடத்தில் மேலும் இழுக்கு சுமந்து
அவப்பெயரைத்தேடிக்கொள்வானேன்?


அதன்பின்னராக.... உனக்கு அறிவென்பதே இல்லையா!?
என்றும்... கேள்விகள் தீர்வதாகவே தெரியவில்லை


இப்படி நான் பதிலகளைத்தேடும் முன்னரே
அவன் கேள்விகள் என் மனதின்
எல்லையைத்தொட்டு கடந்து போய் விடுகிறது,...


அதன் பின் நான் அவனுக்கு
பதில்களைச்சொல்லாமல்
மனதின் எண்ணங்களை பரிசீலித்த்துக்
கொண்டிருந்தமையால்
அவன் அங்கிருந்து கிளம்பிப்போனதை
கவனிக்கவே இல்லை ...!


அவனுக்கும் என் பதில்கள் தேவையாக இல்லை
என்னை சிந்திக்க வைப்பதே
அவன் வந்ததன் காரணமாக
இருந்தது...! தினமும்...


அவனைப்பற்றி விசாரிப்பதும்
எனக்கு தேவையாகப்படவில்லை...


அதோ அதோ தொலைவில்
அவன் கடந்து போகிறான்
நான் உரத்தகுரலில் அவன் பெயரைக்கேட்டேன் !
பதில் வரவில்லை...மீண்டும் கேட்டேன்
“மனசாட்சி” என்றொரு எதிரொளி வந்தது...!


-கவிதைக்காரன்

Sunday, February 19, 2012

எதிரிகளிடம் ஜாக்கிரதை....








நேற்றைய கனவில்
எனக்கும் என் எதிரிக்குமான
வாய்த்தகராறு...!

சற்று நேரத்தில் வார்த்தை
பெற்றுப்போட்ட சண்டைக்குழந்தைகள்
உடனுக்குடன் நாகரீகம் பாராமல்
நடுரோட்டில் கைசரசங்களாக வளர்ந்திடுகிறது..

ஓங்கு குத்தப்பட்ட கைகள் அவன் நாசியை
பதம்பார்க்க..  மீள்வதற்குள்
அடுத்த குத்து அடி வயிற்றில் என
ஆக்ரோசமாகிப்போனது அச்சண்டை..!

சண்டை அன்று எனக்கு பிடித்தமான
பொருளாகி இருந்தது...
எதைப்பற்றியும் எவன் பற்றியும்
சிந்திக்காமல் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ள

வெளிநாட்டில் இருந்து வரும் மாமன்
வாங்கி கொடுத்த விளையாட்டு பொம்மை
போல அதன் மீது அத்தனை
ஆர்வமாகத்தோன்றியது...அந்தச்சண்டைகள் எனக்கு...

அதுவும் எதிரிக்கு முதலில்
இரத்தம் கொட்டிப்போனால்
நாம் தான் மோதலில் ஆக்கிரமிப்பில்
இருக்கிறோம் என்ற ஆணவம்
தலை மேல் ஏறி அமர்ந்து கொள்ளும்!

அது அடுத்த அடியைக்கொடுக்க
கொஞ்சமும் யோசிப்பதில்லை..
அது சண்டைக்குப்பின்வரும்
நிகழ்வுகளைப்பற்றி சிந்திக்க விடுவதே இல்லை!

மூளை மரத்துப்போய் முன்கோபம்
நரம்புகளை முறுக்கேறச்செய்ய !
சுற்றி வேடிக்கைபார்ப்போரின் முகபாவனைகள்
நம்மை ஒரு இரக்கமில்லாதவன் மேல்
செலுத்தும் பார்வையோடு அதேநேரம்
மிரட்சியாக பார்க்கும் போது

கிடைக்கும் பெருமித உணர்வு
எதிரியை நிலைகுலையச்செய்யும்
அளவுக்கு தாக்க வைக்கிறது...!
அநேகமாக இன்னும் இரண்டு அடி
கொடுத்தால் எதிரி வீழ்ந்திடுவான்

என் கனிப்பு தப்பவில்லை
அடுத்த இரண்டு அடிகளுக்குள்ளாகவே
அவன் வீழ்ந்தான்..
இனி அவன் எழுந்து வந்து அடிக்கப்போவதில்லை
அடிவாங்கவும் திராணி இல்லாதவனானான்!

அங்கிருந்து கிளம்பும் முன் அச்சத்தால்
எவனும் அவனைக்காப்பாற்றவோ என்னை
தாக்கவோ முனைவதாகப்படவில்லை!

எதற்கும் அவர்களை இன்னும் பலவீனப்படுத்தலாமென்ற
எண்ணத்தில் நான்கைந்து வன்சொற்களை
ஏகவசனாமாக வீசிவிட்டு விரைந்து கடந்து போகிறேன்
அந்த இடத்திலிருந்து... !

நான்
சிறுவயது முதல் இதுபோலான
சண்டைகளுக்கு தலைபடுவதில்லை,
 ஏன் கெட்டவார்த்தை
பேசுவோருடனோ கூட நட்பு பாராட்டியதே இல்லை

அதைவிட பள்ளியில் எனக்கு இருந்த
நல்லபெயரை காப்பாற்றிக்கொள்ள
இருக்கும் இடம் தெரியாமலே வளர்ந்துவிட்டவன்..!

ஆனால் இன்று ஒருவனை இரத்தம் வரும்
அளவுக்கு காயப்படுத்த நான் குரூரமானவனாகிப்போக
யார் காரணம் !? வேடிக்கை பார்த்தவனில் ஒருவன் வந்து
விலக்கி இருப்பானேயானால்..!

வார்த்தைச்சண்டை கைநீட்டும் முன்
அவ்விடத்தை நான் கடந்திருப்பேனேயானால்!

இந்த நிகழ்வு நடந்தே இருக்காதே
என எனக்கு நானே என்னை நல்லவனாகச்சித்தரிக்க
சமாதானப்படுத்திக்கொண்டிருக்கையில்

கனவு முடிந்தது... காலை புலர்ந்தது
 கவனமாக எதிரிகளைத் தவிர்த்து வருகிறேன்..!

-கவிதைக்காரன்
[கார்த்திக் ராஜா] 

Saturday, February 18, 2012

நடிகை





அவள் திரை ஊடகத்தில்
தவிர்க்க முடியாத நாயகி
ஆகி இருந்தாள்;

கவர்ச்சிக்கு பெயர்போன
அவளுக்கு அத்தகையதோர் வேடம்
ஒதுக்கப்பட்டுக்கிடந்தது
கிட்டத்தட்ட எல்லா படங்களிலும்

அறிமுகம் செய்த ஒரு
இயக்குனரோடு காதலென்றும்

நடிகர் ஒருவரோடு தொடர்பென்றும்
பத்திரிக்கைகள் அவளை
எழுதி தள்ளிக்கொண்டு இருந்தது

அதையெல்லாம் அவள்
கண்டு கொள்வதாகவே இல்லை..
அது இன்னும் அவளைப்பற்றி
விளம்பரமாக்கி இருந்தது...

புதியதாய் ஒரு இயக்குனர் ஒருவரின்
திகில் கதையொன்றில்
நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாள்.

மலைப்பிரதேசமொன்றில்
படப்பிடிப்புக்காக வந்திருந்தபொழுது
மாலை ஒப்பனை வேளையின் போது

அந்த காட்சியை முதலாவதாக
ஒரு புரொடக்‌ஷன் மேனேஜர்
கண்டிருந்தான்.

தான் தனிமையில் ரசித்து
சிலிர்த்த நாயகி கயிற்றின் பிடி
கழுத்தில் மாட்டப்பட்ட நிலையில்

கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து
கொண்டிருந்தாள் - என
அவன் அறிய வந்த போது

படமாக்க
தயாராகிக்கொண்டிருந்த
அத்தனை டெக்னீஷியன்களின்
காதுகளுக்கும் அச்செய்தி
அறியப்பெற்றிருந்தது.

ஊடகங்களெல்லாம் “உச்” கொட்டின..
மஞ்சள் பத்திரிக்கைகளெல்லாம்
வாயடைத்துப்போயின..

அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்த
தயாரிப்பாளர்களெல்லாம் நெஞ்சுவலி
சிகிச்சையென
அனுமதிக்கப்பட்டிருந்தனர்..

 “யாரென்றறியப்படாத
பிரபல” இயக்குனரின்
போன் ஒலிக்கிறது..!
மறுமுனைக்குரலில்
ஒரு மெல்லிய வனமம்
குடியிருக்கும் புன்னகையோடு

காரியம் முடிந்ததாய்
சொல்லிச்செல்கிறது..


அத்தோடு மூடி மறைக்கப்படுகிறது
கவர்சியான அவள் பிணம்

விற்பனைக்கு தயாராகின்றன
அவளது எச்சில் ஆப்பிள்களும்
அவள் எழுதிய காகித வஸ்துக்களும்!
சில வஸ்திரங்களும் கூடவே...!


-கவிதைக்காரன்...

யாரிவனென்றறிய...





சற்றுமுன் தண்டவாளங்களுக்கருகே
 வேகமாய் என்னை
கடந்து போன ஒருவன் சற்று
தூரத்திலிருந்து முறைத்துப்
பார்க்கிறான்.

கொஞ்சமும் அவன் பார்வை
என்னை விட்டு அகலாமல்
வெறித்துப்பார்ப்பதால் அவன்
என்னைத்தான் பார்க்கிறான்

என்பதை உறுதி செய்துகொண்டேன்  
மேலும் யாரவன் என்பதை
சிந்திக்க தொடங்க அந்த நேரம்
சரியாக இருக்குமென ஆரம்பித்தேன்.

இதுவரைக்கும் சண்டைகள் போடாதவனாக
இருக்க வேண்டும்...
இதுவரைக்கும் என்னால் தூற்றப்படாதவனாக
இருக்க வேண்டும்...
இதுவரைக்கும் நான் புறக்கணித்தவர்களில் ஒருவனாக
இல்லாமலிருக்க வேண்டும்...

ஏனெனில் இவையெதிழும் அவன் முகச்சாயல் தாங்கியவனைக்கண்டதில்லை..

இப்போது என்னை ஒரு பயம்
அப்பிக்கொண்டது கொஞ்சம்
இருள் படர்ந்தது போல
இருந்த அவன் முகம் வெளிச்சம் மெல்ல
படர்ந்ததாய் என் பார்வைக்குப்புலப்பட!

கொஞ்சம் திகிலுறும் போது அது நடந்திருந்தது..
ஆளில்லாத அந்த இரும்புப்பாதை தடத்தை
கடக்க வேகமாய் சென்று இரயிலடிபட்டு
இறந்து போனான்...

கழிவு மீனுக்கு காத்திருக்கும்
காகக்கூட்டம் போலவும்
மாலை நேர இறைச்சிக்கடையில்
வாலாட்டி நிற்கும் நாய்கள் போலவும்

கூட்டம் அவனைச்சூழ்ந்து கொள்ள
இடைவெளிகிடைக்காத இடங்களில்
மெல்ல நிழைந்து அவனை அருகினேன்

வெள்ளைச்சட்டை அணிந்திருந்த
அவன் இரத்தச்சகதியில்
சிவந்து போயிருந்த ஆடைக்குள்
இறந்துகிடந்தான் .!!

அருகாமையிலிருந்ததால்
இப்போது அவன் முகம்
இன்னும் தெளிவாய்ப்பட்டது
ஆம் அது நானாக  இருந்தது...!


எண்ணம் & எழுத்து
-கவிதைக்காரன்

Friday, February 17, 2012

கொள்ளை போகும் கனவுகள்








என் கனவுகள்
கொள்ளையடிக்கப்படுகின்றன!
வேண்டி விரும்பி யாராலென
கண்டுபிடிக்க நினைத்து
தூக்கம் வராமல் காத்து
தவிக்கிறேன்...!


அது ஒரு இளமையான முகமாக
இருக்கக்கூடும் நான் ஆணென்பதால்
அது அநேகமாக பெண்ணொருவளாக
இருக்குமென நினைக்கிறேன்.
அப்படி இல்லாமல்
போனாலும் கூட மனம் அதையே
விரும்புகிறது...


கொஞ்சம் ஆழமாய் யோசித்தால்
யாரோ பழக்கப்பட்ட வீட்டின்
வரவேற்பறையின் அமர்ந்திருக்கிறேன்.
சம்பிரதாயக்குரல்க்கள்
வழக்கத்துக்குமாறாய் துள்ளலாக
ஒலிக்கிறது...


சற்று தள்ளி இருளான அறைக்கு
வாயில்நிலையில் தொங்கவிடப்பட்ட
சங்குதோரணங்களுக்கு பின்னால்
தெரியும் ஓரு ஜீவனின் தவிப்பை
சப்தமேயில்லாமலும் சம்பந்தமே
இல்லாமலும் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.


இந்த தருணம் சுகமானதாய் இருந்தாலும்
மனம் அதை ஏற்க மறுத்து பின்வாங்க
விருட்டென எழுந்து வெளியேறுகிறேன்.
இன்னும் கனவுகள்
களவு போய்க்கொண்டே இருக்கின்றன!



-கவிதைக்காரன்..

Thursday, February 9, 2012

அகர முதல என்போம் ... அடிமைத்தனம் கொல்வோம்..!


உயிர்மெய் ஆய்தம்
உயிரளபடை ஒற்றளபடை
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஐகார குறுக்கம் ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கமென
எம் வாழ்க்கை
சார்பு எழுத்துக்கள் போல எவரையேனும்
சார்ந்தே போய்விடுமா!

குறிலும் நெடிலுமாய்
குன்றலினும் நெஞ்சம் நிமிர்த்தி
களத்தில் ஆயுதமாய்

உயிரெழுத்தாய் துடித்த
பொங்கியெழு தமிழ்க்கூட்டம்

மென்மை மறந்து
வன்மமேறிய
இடையினர் துரோகத்தால்

முதன்மையிழந்த தமிழ் யாம்! ...!

விடிந்தெழுமென...!
ஏக்கமாய்...! வேலிக்குள்
விட்டிலாய்..!

-கவிதைக்காரன்..

Wednesday, February 8, 2012

பெரிதினும் பெரிதாய் பெற சிறிதாய் ஒரு விதை..! செய்வோம்













நிரம்பட்டுமே 
நீர்த் திவலைகளால் 
எம்சம்சாரியின் 
கழநிகள்..! 


இலவச அரிசிக்கு 
இடமில்லாமல் 
போகும் போது..! 


அவன் கண்ணீரின் 
கவலைகள் 
கொய்யப்படுமா!? 


சக மனிதன் 
ஜெகத்தை அழிக்கும் 
முன் பசியால் 
மரித்துக்கொண்டிருப்பதை 


உணராத கண்களுக்கு 
கண்ணீரின் வலி 
தெரிந்திருக்குமென்பது.. 
வாடிக்கையான வேடிக்கை! 


உழவன் மகன் உழவனாய் 
இல்லாத பட்சத்தில் 
விளை நிலங்களை முள்வேலிக்குள் 
முடமாக்கி மலடாக்கிக்
கொண்டிருக்கும் தரகர்கள்...


விலைமாதுவாகிக்கொண்டிருக்கும் 
மண்ணை  மீட்பதிலாகட்டும்...
வீழ்ந்து  கொண்டிருக்கும்
விவசாயம் காப்பதிலாகட்டும் 
தேய்ந்து கொண்டிருக்கும் 
இந்தியாவின் முதுகெலும்பை 
தூக்கி நிறுத்துவதிலாகட்டும்

அத்தனைக்கும் நம் ஒற்றை விதையில் 
பதில் உண்டு..! 


விதைகளை 
மரம் செய்வோம்...! 
பறவைகள் 
வாழ்வாதாரம் காப்போம்...!


-கவிதைக்காரன்..! 

Tuesday, December 6, 2011

தேடல்களின்... தீர்வு எனக்கானதாய்... ஓர் வெற்றிடம்




நாள் எது பொழுதெதுவென
புரியாத
ஒரு வேற்றுகிரக
விடியலில்..

மார்கழிக்குழாம்
பாடி; மாலை வெயில்
இதமாய் பளிர்க்கும்
அந்திமத்தில்...

மிகப்பெரியச் சண்டையின்
முற்றில்
மௌனிக்கும்
வினாடியின் கடைசி
சொட்டில்...

பின்னிரவுகளில்
தூங்காமல்
எழுதும்
இறப்பின் கவிதையின்
இறுதிப்புள்ளியில்....

மகிழ்ச்சிகள் முறிந்து
திடீரென எதிர்கொண்ட
சாலை விபத்தின்
பரிதவிப்பில்...

பொம்மைக்கு அழும்
எதிர்வீட்டுக்
குழந்தையின்
மிட்டாய் கிடைத்த
புன்முறுவலில்...

நட்பிடம்
மறைத்த உண்மையை
வெளிச்சொல்ல முடிவெடுக்கும்
எண்ணத்தின் கடைசி வார்த்தையில்..

உண்மைகளை நிறுபிக்கும்
வரை போராட்டமாய்
செல்லும் பாதையின்
முட்டுக்கட்டைகளில்

காசு பணமில்லாமல்
போனாலும்
பார்த்ததும் சுகம் கேட்கும்
சம்சாரிநண்பனின்
உபசரிப்பில்..

தேடும் பொருளை கண்டெடுக்கும்
போதான மகிழ்ச்சியின் முதல்
உணர்வில்..

மூங்கில் கழியில்
நுழைந்த காற்றாய்..
எப்போதும் நான் என்னைத்
தேடிக்கொண்டே இருக்கிறேன்...!

வெற்றிடம் நிரப்பி...!

-கவிதைக்காரன்..

Monday, December 5, 2011

என் தாத்தன்... இரும்பொறை.....




அய்யனாரு பேரன் போல
ஆறடி உசர மீசைக்காரரு...

பொழுது புலரும் முன்னே
முண்டாசுகட்டிகிட்டு
வயலுக்குள் கால் வைச்சாருன்னா

புலர்ந்தது அடையுமுன்னே
காடெல்லாம் உழுதிருக்கும்
இவரோட ஏர்கலப்பை..!

முத்து முத்தா வேர்த்திருக்கும்
வியர்வை சிந்தி விளைஞ்ச நிலம்
வெள்ளாமை பார்க்கும் வரை
ஓயாது இவர்காலும் ..!

பள்ளிக்கூடம் போனதில்லே
மழைக்கும் வெயிலுக்கும்

ஆனாலும் கண்ணாலே
இவரளந்து சொல்லும் -நெல்லுப்
படிக்கணக்குக்கு மறுத்துச் சொல்ல
பத்து ஊரிலும் ஆளில்லே...!

தென்னமரம் ஏறுவதில்
குரங்கெல்லாம் குப்புறவிழுந்து
தற்கொலை செஞ்சுக்கும் இவரு
ஏறும் வேகம் கண்டு...!

எருதுகளை பூட்டிக்கிட்டு
ரேக்ளாவுக்குப் போனாருன்னா
விருதுகளைச் சுமந்துகிட்டு வாசல்
வந்து நிக்கும் இவரோட வில்லுவண்டி...!

பெரும பேசினது போதும் ராசா
இரும்பொறஆண்டையார் மனச சொல்லு லேசா-ன்னு
முப்பாத்தா கிளவி முணுமுணுக்க..!

தப்பாத தாளத்தோட அடிச்சுபாடுறான் -அவதாரம்
ஊருக்குறி சொல்லும் அய்யரோட
முத தாரத்து மவன் இவன்..என் பள்ளிக்கூட கூட்டாளி

கனடா தேசத்தில் கடன் அட்டைகளைச்சுமந்து
கணிணி முன் அமர்ந்து சிலிக்கான் வேலிக்குள்
மேகக்கணிணியம் கற்பிக்கும் இயந்திர வாழ்மனிதன்
எனக்கு

இராஜராஜன் ஆண்ட தஞ்சை மண்ணில்
கொள்ளிடக்கரை தீண்டும் புனல்வாசல்
பூர்வீகம் படிப்பு உழைப்புன்னு அயல்தேசம்
தாவி வர..
சாண்ட்விச்சுக்கும் பேகனுக்கும்
அடங்கிபோன ஐ.ஆர் எட்டு அரிசி நாக்கு...

அடுத்த வருடம் போகலாமென்று ஆறேழு முறை
நினைத்தும் தாண்டிப்போன வருட இடைவெளியில்
சில தலைமுறை இடைவெளிகளோடு சில
தலைகளும் விழுந்து போனது...!

அப்படி வாழ்ந்த மனிதர் தான் என் தாத்தன்
“இரும்பொறை” ஏழு வயசு முதல் கரும்பு
புழியப்போன முரட்டு தேகம் அவருக்கு
பெயருக்கு ஏத்தது போல இருப்புக்கார உடம்புகாரர்..

சின்னவயசில் மவ வயித்துப்பயலுன்னு
தோள் மேல என்னையும் இரண்டுக்கையில்
பெரியப்பா பெண்ணையும் தூக்கிச்சுமக்கும்
பாசக்கார தாத்தன்...!

சந்தனம் பூசிக்கிட்டு ஜல்லடை கட்டிக்கிட்டு
சுடலமாடன் கோவில் கொடைக்கு
வேட்டைக்கு அவர்ப்போகும் போது -பார்த்த
பயத்திலே காய்ச்சல் பத்திக்கும் எனக்கு...

திருநீறு பூசுய்யா சாமிக்கிட்ட என அம்மா
கிட்டக்க கூட்டுப்போகும் போது
கிடுகிடுத்துப்போகும் என்னை
அடையாளம் கண்டுக்கிட்டு அந்த
நொடி சாமி போய் தாத்தா வந்து
கண்ணில் நிப்பார்...

பெத்த பெள்ளைகள்ளாம் கரையேற
காணி நிலத்தையெல்லாம் காங்ரீட்டுக்காரனுவ
ஆக்கிரமிக்க இரத்தம் சுண்டிப்போனாலும்
என்னப் பெத்தமண்ணக் கொடுக்கமாட்டேன்னு



கொலையா நின்னவரு இன்னைக்கு
சிலையா படுத்திருக்க சுத்தி நின்ன மக்கள் எல்லாம்
தத்தம் ஒப்பாரியில் அழுது நிக்க
எண்பத்தாறு வயசில கண்ணமூடி தூங்குறாரு...
களத்துமேட்டுப்பெரியவரு...:

சனிக்கிழமை சாவுன்னு சேவக்குஞ்சி கூட கட்டி
காட்டுக்குத் தூக்கிப்போக பெரியம்மா அழுது நிக்க
அத்தோடு முடிந்தது தாத்தனின் இறுதிச்சடங்கு வீடியோ...!

நான் கேட்டேன்னு அவதாரத்திட்ட சொல்லிவைச்சு
அரியலூரில் இருந்து வந்த முத்து வீடியோஸ்- பாண்டி
அண்ணன் எடுத்தனுப்பி இருக்காரு...

முத்தம் கொடுக்கும் போது குத்திய
அந்த முரட்டு மீசை மனசோடு குத்துது..இப்போ
காதுக்குள்ல ஒலிக்குது பழம்பெரும்
 நடிகர் கல்யாண்குமாரின் குரலப்போல....
 “கண்ணமூடியும் வரலஏப்பு....ன்னு..”

நெஞ்சம் மறப்பதில்லை பாட்டுன்னா அவருக்கு அம்புட்டு இஸ்டம்...!
இரும்புக்கார தாத்தா.....!


-எழுத்து & கற்பனை
*

கார்த்திக் ராஜா...

Friday, December 2, 2011

தலைகீழ் விதிகள்...!





இழுத்துப்பறித்துக்கொண்டதை
எடுத்துச்சூடிக்கொண்டு
பூக்காரி கட்டிய
மாலையில்
உதிர்ந்தன சில பூக்கள்
அவள் முதிர்கன்னி
என்பதை மறைக்க
முடியாமல்..

இருக்கிக்கட்டிப்போட்ட
கைகளுகளோடு
கட்டுமரம் ஓட்ட தார்சாலைக்
கொடுக்கும்
காங்ரீட் மனிதர்கள்
மத்தியில்..
வெற்றிக்கான ஓட்டப்பந்தயம்
எவ்வித முன்னேற்பாடுமின்றி
கால்கள் இல்லாதவனுக்கு

மழையில்
மின்சார்க்கம்பியில்
அமர நினைத்து
வெகுதூரம் தூக்கி எறியப்பட்ட
காகம் கால்களை
இழந்து நேரம் தப்பி பெய்த மழையின்
கால்வாயில் இறந்து கிடக்க
அடுத்த வினாடி
துண்டிக்க பட்ட மின்சாரம்

தெருவோரம்
மின்காரன் வீசிய கழிவுகளில்
உணவைத்தேடிப்பிடித்த
நாய்களுக்கு
பெடிக்ரீ கிடைக்காத சோகம் இல்லை
எனும் போது முறைத்துத்தான் பார்க்கிறது அல்சேஷன்களின்
அழிச்சாட்டியங்களை..

வெற்றி எல்லாம்
விழுப்புண்களில்
அல்ல ;விழுந்தாலும்
எழுந்து நின்றவனுக்கு என கவிதை எழுதும்
கார்கில் போரில்
கால்களை இழந்ததால் வீட்டுக்கு
அனுப்பப்பட்ட முன்னால்
இராணுவ வீரன்..

எங்கும் நெகட்டிவோடு
திரியும்
பாஸிட்டிவ் திங்கிங்
போட்டோக்காரன்
காமிராவுக்குள்
இதுவரை விழாத
தேசிய விருது
புகைப்படம்
கழவப்படவேண்டிய இருட்டு
அறை இன்னும்
வெளிச்சம் பார்க்காமலே
இருக்கிறது..!

வெற்றிக்கு -
இடையே கடக்கவேண்டியதை
நான் எழுதிவிட்டேன்
பார்க்கும் பார்வையில் அதை
எடுத்துக்கொள்லப்போகும்
உங்களுக்காய்
மிச்சமாய் இருவழிப்பாதை
எந்த திசை காட்டுகிறது
உங்கள் திசைமானி..!

கவிதைக்காரனின்... காலைப்பொழுதின் ஊடல் கூட்டலாய்...



 தூக்கம் விட்டெழுந்து
காகிதப்பூவாய்
நீ உடுத்தி இருந்த
மேக ஆடையில்
சில வானவில்லை
மட்டும் கலைந்து...

வெளிச்சம் விரும்பாத
இரவுபட்சியாய்
கண்கள் கூசும் ஒளியில்
உன் தாமிர தேகம்
நனைந்து..

சட்டென்றொரு
யாரும் பாராமல் சிறு
சோம்பலை முறித்து
நிதானிக்கிறாய்..

உன் ஜன்னலில் வளரும்
க்ரோட்டன்ஸுக்கு
நீரூற்றும் சமயத்தில்
உன்னோடு சேர்ந்து
அதுவும் மொட்டு விட
எத்தனிக்கும்...

எதிர்வீட்டு மரத்தில்
சாளரத்தில் காலை
கீதம் சேர்க்க ஓயாமல்
கீரிச்சிடும் " டேய்ல் ஸ்பேரோ"..
என நீ செல்லமாய்
அழைக்கும் இரட்டைவால் குருவியை

பார்த்த சந்தோசத்தில்
மொட்டும் அகலப் பூத்திருக்கும்
உன் முகத்தில்
கண்களாய்..

சிற்றிடை நெளித்து
ஈரடி நடந்து..
தண்ணீர்க்கோப்பைக்கு
வெளியே
மீனாய்..

கைகளால்
அள்ளி எடுத்த
நீர்த்துளிகள் முகமெல்லாம்
சிதறடிக்கிறாய்..

பட்டெனத்தெரிக்கும்
நீர்த்துளிகளால்
நேற்றைய இரவின்
முத்தங்கள் படர்ந்த
கன்னத்தின்
இதழ் தீண்டலை
சமன் செய்கிறாய்...

இன்றைக்கோர்
சில்மிஷத்தின்
ஒத்திகைக்கு
களைப்பின்
ஒப்பனை
கலைக்கிறாய்..

ஓவியம் உந்தன்
ஒவ்வொரு அசைவையும்
ரசிக்கிறேன்..
கண்கள் திறக்காமல்
கட்டிலில் கிடந்தே..! -நான் *

நீ என்னென்னெ
செய்வாயென
நான் தினமும் காணும்
கனவாய் இவை தானே
என்னுள் தனக்கான
இடங்களை நிரப்பிக்கொள்கின்றன..!

கனவும் நிஜமும்
ஒன்றாகி ஒன்றிப்போனதும்
காலை -யோடு
இன்னோர் எச்சில் முத்தம்
பெற ஏங்க வைக்கிறாய்,,,!

வந்ததும் கேட்பாய்
“பாவி ” இதையெல்லாமாவா
கவிதைல எழுதுவீங்க என்று
கன்னத்தோடு செல்லக்கடி
கொடுப்பாய்..

கற்பனை கலைக்கும்
விதமாய்
அதோ நீ வரும்
சப்தம் கேட்கிறது
நான் மெல்ல தூங்குவது
போல் நடிக்கப்போகிறேன்...!






-கவிதைக்காரன் *GTM*

Thursday, December 1, 2011

வேப்பங்குளத்துக் கிளியே..... என் வயசை உடைச்ச உளியே...


சிட்டான பொட்டுக்காரி
சின்ன சின்னப்பார்வையால
என்னை நெற்றிப்பொட்டில்
அறைஞ்சவளே...!

பட்டான தாவணியில்
பாவி நீ..! தாவித்தாவி
நடக்கையிலே
பாலத்து கரையில் துடிக்கும்
எம்மனசு பாழாப்போகுதடி...

நேராக்க பாரு என்னை-என்று
போறப்போக்கில் சொல்லிப்போகும்
உன் தாவணி தெரப்புக்கு
தானாத்தான் நோகுதடி கண்ணு

நீலவண்ணப்பாவாடக்காரி.. என்கூட
நின்னு கொஞ்சம் பேசிப்போயேன்..
தோதானத் தோழனுங்க என்னை
தொணத்தொணன்னு அரித்தெடுக்க
நீதான பாதையில நிக்காம போறவளே
கொஞ்சம் என்ன சேதி சொல்லிப்போயேன்

ஆடகட்டி வந்த மயில் நீயும்
ஆடுபுலி ஆட்டம் போல
தாண்டிப்போயி வெட்டுறியே என்ன..

மேலோட்டப்பார்வையிலே..!
என்ன மேய்ஞ்சுபுட்டுப்போறவளே
வெள்ளோட்டம் பார்க்கத்தானே
கொஞ்சம் வெக்கம் சிந்தி போடி கண்ணே..

சுக்காகிக்காஞ்சுபோன நெஞ்சம்
மக்காச்சோளம் கதிராட்டம்
வெளைஞ்சு நிக்க கொஞ்சம்
விரசா உம்பேரச் சொல்லிப்போயேன்...

பாதக்கொலுசிட்ட பாதகத்தி நீயுந்தான்
பாரிஜாதம் பூவப்போல பூவாசம் வீசிப்போக
பட்டுப்போன என் பூமியெல்லாம்
பாட்டாகி பொழியுதடி.. கண்ணே,

பொறுத்திருந்து வெயிலில் கருத்திருந்தேன்
கண்னே நீயும் அண்ணன் தம்பி இல்லாத
பிள்ளையின்னு தனித்து நானும் தாவி வந்தேன்

தக்களை பலாக்காட்டில்
அருவா அடிக்கும் ஆறுமகண்ணே மகதான்
நீயின்னு...

அன்னைக்கே சொல்லி இருந்தா..
ஆறுமாசம் வீணாகியிருக்குமாடி..
அடுத்த பிள்ளைக்கு நூலுவிட நானும்
தோவாளைக்கு போயிருப்பேனடி... என் கண்ணு...!

- கார்த்திக் ராஜா ..

Wednesday, November 23, 2011

சின்னஞ்சிறுக்குறும்புக்காரியின் வெள்ளைச்சிரிப்பில்...



அரிதாரம் சூடா அவதானப்பூக்காரி 
கள்ளமில்லை சிரிப்பில்..

கபடமில்லை குறும்பில்
வெள்ளையாடையில்லா 
வெட்கம் சிந்தும் தேவதை...

செல்லநாய்க்குட்டிக்கும் 
முத்தம் சிந்தும் இவளின் 
முகத்தில் தெரிகிறான் 
அத்தனைக்கடவுளும் 

பூக்களை இவள் தலையில் சூடி 
இருக்கிறாளா... பூக்கள் இவளின் 
மேல் பூத்து சிரிக்கிறதா 
வித்யாசம் தெரியாது தவிக்கும் 

வெள்ளைப்பூவிவள்..!
போதும் கொஞ்சம் நிறுத்திக்
கொள்ளத்தான் கூடாதா ..?
உன் புன்னகையாள்  நாளுக்கு நாள்
வானில் நட்ச்சத்திரங்களின் பெருக்கம் 

நீ அமைதியாய் இருந்து 
என்னை ஆர்ப்பரிக்க 
வைக்கிறாய் கவிதைகளால்...

ஆர்ப்பரிப்பாய் எழுகிறது 
அமைதி மறந்த சூழலாய் 
ஒரு ஹைக்கூ...நீ சிரித்து 
விளையாடும் போது...

-கார்த்திக் ராஜா