Tuesday, January 7, 2014

கற்கோவில் கட்டியவராம் தமிழரெல்லாம்...



புற்றுக்
கரையானை
புசித்துண்ட
கருநாகம்
புற்றை
குடியாய்
கொள்வது
போல்
கற்கோவில்
கட்டியவராம்
தமிழரெல்லாம்
காத்திடுவார்
வரிசையிலே
பொற்கோவில்
தனில்
புகுந்த
பூநாகம்
பார்ப்பரிங்கே
பொய்க்கும்
மொழி
புரிகிறதா
கடவுளுக்கு...!

நீக்கமற
நிரைந்துவிட்ட
நீள்சடையோன்
நினை
வணங்க
இடைத்தரகன்
மடைபோல
நிற்கின்றான்

மடை
திறந்த
வெள்ளம்
போல்
மல்கும்
கண்ணீர்
உனைத்தழுவ
மாணிக்க
வாசகரின்
சுவைத்தமிழோ
என்செய்கும்

விடையேறி
இவண்
வருவாய்
இனிதன்மை
விளங்கிடவே
எனதமிழில்
வருதிப்பேன்
வருவாயோ
என் தேவ!

-கவிதைக்காரன்.

நிகழ மறுக்கும் அற்புதம் அவன்

Strong Beauty face detail by Art-of-man
காற்றிலெழுதியவை



நீங்கள்
நண்பனாக்கிக்கொள்ளும்
தகுதிகளற்றவன்
அவன்.
போட்டி
பொறாமையில்
திளைத்தவன்
உங்கள்
உடமை
கவர்பவன்
கச்சிதமாய்
தனக்கேதும்
தெரியாதென்று
நடிப்பவன்
காட்சிகளை
புனைத்து
கதை
விட்டு
உங்களை
நம்பச்செய்ய
வைப்பதில்
கைதேர்ந்தவன்

உற்சாகமான
வார்த்தைகள்
அவனுக்கு
வசதிப்படுவதில்லை
இருண்ட
உலகின்
சுடுகின்ற
வெப்பநதி
அவன்.

தவறி
நட்பில்
விழுந்திடாதீர்
எப்போது
வேண்டுமானாலும்
உங்களை
கவிழ்கவோ
பழிவாங்கவோ
நம்பிக்கைக்கு
ஊறுசெய்யவோ
அவன்
தயங்குவதேயில்லை
அவனோடு
நட்பு
கொள்ளாதீர்

உங்கள்
தோழி
தமையரை
அவனுக்கு
அறிமுகஞ்
செய்யாமலே
விடுங்கள்
அவனுக்கு
சகோதரிகள்
தேவையில்லை

அவன்
குற்றங்களை
மன்னிக்க
துணியாதீர்கள்
குறுவாட்களை
அவன்
இடையிலிருந்து
இறக்கியிருக்க
மாட்டான்
விசுவாசமற்றவன்
முன்பே
சொன்னது
போல்
பொய்
அவனுக்கு
பொங்கல்சுவை

அவனுமென்ன
செய்வான்
இச்சமூகம்
அவனுக்கு
விசத்தை
ஊட்டிவிட்டதன்பேரில்
விசத்தை
தானே
பகிருவான்
அவனிடமெப்படி
கண்ணியம்
கேட்கிறீர்கள்

பணம்
புகழ்
பதவி
பேராசையெல்லாம்
அவனுக்கில்லை
எப்போதாவது
கொஞ்சம்
பேனாக்களின்
வீரியத்தில்
கிறுக்குவான்
எழுத்தென்னும்
போதை.

அவனுக்கு
வழிகாட்டாதீர்
அவனை
தூக்கிசுமக்காதீர்
பின்பற்றாதீர்
அவன்
விழுந்தே
கிடப்பவன்
எப்போது
விழுவான்
எழுவான்
எண்ணிக்கிடப்பதில்
அர்த்தமில்லை
அவனுக்கு
புன்னகைக்க
தெரியும்
அறத்தின்
பெயரால்
மனிதனென்பதற்கு
சிறு
அடையாளம்.

நீங்கள்
புன்னகை
கேட்டால்
கொஞ்சம்
தேடித்துழாவி
உள்ளொன்றும்
புறமொன்றுமாய்
கொஞ்சம்
வழித்து
கொடுப்பான்
எப்போது
வேண்டுமானாலும்
சம்பவித்து
விடக்கூடிய
மரணத்தின்
சுமை
அவன்.

விலகிநில்லுங்கள்
அவனோடு
நட்பு
பாராட்டாமல்
உங்களை
சுமக்கும்
வலிமை
அவனுக்கு
இல்லை
நல்லவனென்ற
வார்த்தை
கண்டுபிடிக்கப்படும்
முன்
பிறந்தவன்
அவன்.


நிகழ
மறுக்கும்
அற்புதம்
அவன்
அற்பன்
என்றாலும்
தாங்கிக்கொள்வான்

இதற்கும்
மேல்
அவனோடு
நட்பு
கொள்வீரென்றால்
ஒரு
கணப்பொழுதில்
உடைந்து
விழும்
கண்ணீர்குமிழி
யொன்றைத்தவிர
உங்களுக்கு
கொடுக்க
அவனிடம்
ஒன்றுமே
இராது
அவன்
நானில்லை
என்று
பிரகடனம்
செய்யும்
துணிவெனக்கு
போதவில்லை
போல

-கவிதைக்காரன்.

எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவனுடையது...


காற்றிலெழுதப்பட்டவை 

என்னை
உங்களுக்கு
அடையாளம்
தெரியாமலிருக்கலாம்
என் புலமென்ன
பிறப்பென்ன
மொழியென்ன
என்
வாழ்வென்ன
இறந்தால்
எரிப்பவரா
புதைப்பவரா
எதுவும்
உங்களுக்குத்
தெரியாது
ஜனசந்தடிகளில்
உங்களில் ஒருவராய்
உங்களோடே
வாழ்ந்திருக்கிறேன்

உங்களிலிருந்து
கிழக்கிலும்
மேற்கிலும்
வடக்கு
தெற்கு
என
எல்லா
திசைகளிலும்
பிறந்திருக்கிறேன்.

பர்மா
ஈழம்
அமிர்தசரசு
லாகூர்
இசுரேல்
பனாமா
இலத்தீன்
ஆப்பிரிக்கா
என
எல்லா
தேசங்களிலும்
என்
பிறப்பு
சம்பவித்திருக்கிறது
புலத்தினை
தாண்டி
புறப்பட்ட
வழியில்
அகதியாகவும்
ஆண்டபரம்பரையாகவும்
என்
வாழ்வு
அமைந்திருக்கிறது

இளைத்தவனை
அடித்து
அவன்
முதுகிலும்
பயணித்திருக்கிறேன்
ஏய்த்தவன்
பூட்சுக்கு
முதுகை
காட்டி
மண்டியிட்டுமிருக்கிறேன்

நாடு
பிடித்த
நாவுகளில்
தோய்ந்த
ரத்தரூசியும்
எனக்குத்தெரியும்
பழுப்பு
கம்பிகள்
பாய்ச்சி
தோலைக்கிழித்து
வழியும்
ரத்தகோரத்தின்
வலியும் எனக்கு
தெரியும்.

கைப்பற்றிய
நிலத்தை
என்னுடையதாக்கி
பெரும்
வரலாற்றையும்
திரித்திருக்கிறேன்

பிறந்த
தேசத்தில்
நீ
அடையாளமற்றவன்
என
விரட்டவும்
பட்டிருக்கிறேன்

எனக்கு
உபதேசிக்கப்பட்டதெல்லாம்
எது
உன்னுடையதோ
அது
நாளை
மற்றொருவனுடையது
மற்றொருநாள்
அது
வேறொருவனுடையது
என்பதே

வேடிக்கை
பாருங்கள்
உபதேசம்
செய்வோர்தான்
அனைத்துக்கும்
சொந்தம்
கொண்டாடுகின்றார்

இதுவரைக்கும்
ஏனென
கேட்டதுமில்லை
கேட்டபோதும்
போலிபகுத்தறிவாதி
என
முத்திரை
குத்தப்பட்டிருக்கிறேன்

தீவிரவாதி
என
சுட்டுத்தள்ளப்பட்டிருக்கிறேன்

துரோகி
என
நாடு
கடத்தப்பட்டிருக்கிறேன்


வீட்டுச்சிறையில்
அடைத்து
வைக்கப்பட்டிருக்கிறேன்

இளமையெல்லாம்
சிறையில்
கழித்திருக்கிறேன்

பயணீத்த
வாகனத்திலே
வெடித்து
உயிர்நீத்திருக்கிறேன்


கடைசி
வரைக்கும்
எந்த
தோட்டாவும்
என்
கேள்விகளை
சுட்டுத்தள்ளமுடிவதில்லை

-கவிதைக்காரன்.