Friday, December 20, 2013

ஆட்டோகிராஃப்_2013 @Achi Poorani_(7)

இந்த முகநூல் வட்டாரத்தில் நீண்டநாட்களாக இவரைத் தெரியும்...

இவரது பதிவுகளைப் பார்த்ததும் நாலாங் கிளாஸ் படிக்குற பொண்ணு போட்டோவை ப்ரொஃபைல்ல வைத்துக்கொண்டு என்ன வில்லத்தனமா பேசுறாங்க இவங்க சங்காத்தமே வேணாம்ன்னு unfriend செய்துவுட்டு போய்ட்டேன்.

பின், தெருவிளக்கு-ன்னு ஒரு முகநூல் குழு தொடங்கப்பட்டது.

அன்றைய நாட்கள் மிகுந்த உற்சாகமிகு மனிதர்களையும், நட்பினர்களையும் , மனிதநேயம் மிக்கவர்களையும் எனக்கு அறிமுகப்படுத்திய களம் அது...

அப்துல் வாஹப், பிரபின் ராஜ், ரூபியா அர்ஸா, ராஜ் குமார், இரத்திகா மோகன் ,குமார் ரங்கராஜன், சுதாகர் பாண்டியன் ,மோகனப் ப்ரியா, தமிழ் அருவி, பிரபாகரன் க்ருஷ்ணா , ஷேர்கான் ஹமீது , விமல் ராஜ், வேலுச்சாமி , இப்படி பலர்பலர் ஐக்கியமான இடத்தில் ....

இவரையும்பார்க்க முடிந்தது. பின்னாளில் தான் மீண்டும் நட்பில் இணைந்தேன். ஆச்சி கஜா @ Achi poorani .

ஆச்சியை அம்மான்னு தான் கூப்பிட்டுப்பேன். அவங்க மலேஷியால இருக்கும் போது சுமார் அதுபது, எழுபது வயதுக்காரராக எண்ணி... ஹாஹா

ஆச்சியின் வரலாறு அதிரிபுதிரியானது. நீங்க பெண் , உங்களால் முடியாதுன்னு யாரும் சொன்னா அவ்ளோதான். டின் கட்டி தூக்கிடுவாங்க..

ரொம்ப தைரியம், தன்னம்பிக்கை,போல்ட்னஸ் இதெல்லாமே ஆச்சியின் தற்காப்பு ஆயுதங்கள். கிட்டப்போனா நக்கீரன் மாதிரி கீர் கீர்ர்ர்ர்தான்.

ஆனா இதையெல்லாம் தாண்டிய ஒரு மெல்லிய உணர்வுகளை படம்பிடித்துக்காட்டும் அன்பு அவர்களிடம் இருக்கும்.

அதுதான் அவங்களோடு என்னை, எங்களை நெருக்கமாக்கிச் சேர்த்தது.

எதாவது நிகழ்வுகளில் சந்திக்கும் போது என்னை "என் பையன்"-என்றுதான் அறிமுகப் படுத்துவார். மறுதலிக்கும் ஜனங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை நாங்கள்.

இந்தத் தூய்மையான அன்பை சின்னச் சின்ன வார்த்தைக் கோர்ப்புகளால் சொல்லிவிட முடியாதுதான்.

ஆச்சி வீட்டுக்கு நேரம் கிடைத்தால் அப்பாயிண்மெண்டோடு ஆஜராவோம்.

நான்கு மணி நேரம் முன்னே டீ போடத் தயாராகி விடுவார். வந்து பத்தாவது நிமிடத்தில் தேனீர் கோப்பையைச் சுவைத்துவிட்டு பக்கத்து ஹோட்டலில் வாங்கியது தானேன்னு கிண்டல் அடிப்போம்.

முதல் முறை போனபோது... தோசை தேங்காய் சட்னி சாப்பிட்டுவுட்டு முதல் வேலையாக LIC பாலிசியை புதுப்பித்துக் கொண்டேன். ஹாஹா.... வாழ்க்கை அழகானது...

ஆச்சியோட குட்டிப் பொண்ணு அக்‌ஷிதா... அதாகப்பட்டது அக்‌ஷி -தான் அச்சியாகி ...ஆச்சியாக நிலைத்துவிட்டது.

ஆச்சி ஒரு இண்டர்நேஷனல் லைசன்ஸ் ஹோல்டர். எல்லா கார்களைப் பற்றிய விபரமும் அத்துபடி... கார்களைப் பற்றிப் பேசத்தொடங்கினால் அவர் கண்களில் உற்சாகம் அப்பிக்கொள்ளும்...

பேருக்குத்தான் அம்மாவும் பையனும் ஒருவரை ஒருவர் கலாய்த்து காலி செய்வதில் தடையே கிடையாது..

facebook-ல ஆச்சி போல ஒருத்தர் கிடையாது... அவரை சரியாப் புரிந்து கொண்டவங்க லிஸ்ட் வெகு சொற்பம்.

குதர்கமாகப் பேசி மனதைக் காயப்படுத்தி மன்னிப்புக் கேட்டு அன்பில் இணைந்தவர் லிஸ்ட் ரொம்ப பெருசு...

நேர்மையான அன்போடு இருந்தா அதே அன்பைத் திருப்பித்தரும் சுவறில் எறிந்த பந்து அவர்.

எசகுபிசகு பண்ணா பேட்டை எடுத்து தலையில் போடவும் தயங்க மாட்டார்.

பலர் ரகசியங்களின் பெட்டிச்சாவி... சத்தம் மூச்.

எனக்கு நட்பு ரொம்ப புடிச்சவிசயம்... உறவுகளைத் தாண்டியும் ...

ஆனா உறவாகக் கிடைத்த நல்ல நட்பு ஆச்சியோடிருந்தது...

என்றும் இருக்கும்...

Achi Poorani

#ஆட்டோகிராஃப்_2013_(7)







ஆட்டோகிராஃப்_2013@Karthi Keyan_(9)

மதுரை!
நேசத்தையும் பாசத்தையும் மனசு நிறைய பூசிக்கொண்டு தெற்குச் சீமையிலிருந்து அறிமுகமான நண்பன்.

குணத்திலும் நட்பிலும் கண்ணாடி மாதிரி... நாம் எதைக் காண்பித்தோமோ அதையே பிரதிபலிக்கும் கேரக்டர்.

ரெண்டு மூனு வருஷம் முன்னாடியே இவனைய் தெரியும் ... அதிகம் பேச்சுவார்த்தை இருக்காதுசந்திக்கும் இடத்தில் தித்திப்பாய் பேசிக்கொள்ளும் முகநூல் நண்பன்.

ஆனால் காலம் அத்தனையையும் மாற்றிப் போட்டுவிட்டது...
இன்றைக்கு மதுரைன்னு சொன்னாலே மனசில் முதலில் வந்து நிற்பது கார்த்திதான். கார்த்திகேயன்.
ஆமா! நானும் கார்த்தி , அவனும் கார்த்தி... ஒரு ரகசியம் சொல்லட்டுமா KARTHICK -ன்னு இந்த ஃபேஸ்புக்கில் ஒரு Group -ப்பே இருக்கு சுமார் ஐநூறு பேருக்குமேல் உறுப்பினரா இருக்கோம் யார் நிர்வாகின்னே தெரியாது

ரொம்ப காலமா போன் , முகநூல் தொடர்பிலே இருந்த நண்பன். நிறைய பேசுவோம். பயங்கரமான கலகல பேர்வழி...

ஈவுஇரக்கமே இல்லாமல் கலாய்த்து காலி பண்ணுவான். மதுரை அமேரிக்கன் கல்லூரி மாணவன் கேட்கவா வேணும்...

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பின் நேரில் சந்தித்துக்கொண்டோம்.மதுரையில் ஒரு நண்பர் திருமண்த்தில் கலந்துவிட்டு அப்படியே கார்த்தியோடு மதுரை வீதி உலாதான்.

அந்த ஒருநாள் இயந்திர உலகத்தின் சாவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு நட்பின் கூட்டணியோடு (கார்த்தி,கிரி,நானும்) அரட்டைக் கச்சேரிதான்.

"தோர் 3D" படத்திற்குப் போய் கண்ணாடி போட்டு நானும் கிரியும் தூங்கிட்டோம். "ஹாஹா கொடுத்த காசுக்குப் படம்பார்த்துக் கொண்டிருந்தான். "

வீட்டில் மூணாவது பையன். ஆக ரொம்ப செல்லம்... மதுரை வீதிகளில் கருப்பு பல்சரில்
எதிர்படுவான். கவனித்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் கேட்டால் நெஞ்சம் கொடுப்பான். இதை வேறு மாதிரி கூட சொல்லலாம்...

"உயிர் கொடுப்பான் தோழன்... "

கார்த்திக்கும் என் நட்பில் மிக முக்கியமானவர்க்கும் ஒத்துப்போகாதசூழல்.!

யாரைச் சாந்தம் செய்யன்னு வந்தபோது... விடு மச்சி நீ .....என் தப்பில்லைன்னு நம்புறேல்ல அதுபோதும்ன்னு விலகி நடந்தான். "அங்கே நிற்கிறே மச்சான் நீ... "

மனிதர்களைக் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான அன்பு...

கார்த்திய அந்த கலகலப்போடு ஏத்துகிட்டா... அவன் இன்னொரு தேவராஜ். (தளபதி மம்மூட்டி கேரக்டர்)

நாங்க பலநேரம் தேவராஜ்ன்னுதான் ஒருத்தரை ஒருத்தர் கூப்பிட்டுக்குவோம்

உன் நண்பன் யார்ன்னு சொல்லு உன்னைப் பற்றிச் சொல்கிறேன்னு யாரும் கேட்டா... தயக்கமே இல்லாமல் கார்த்தியை(யும் ) கை காட்டுவேன்.

நண்பேண்டா...

Karthi Keyan

@ஆட்டோகிராஃப்_2013_(9)










     



Thursday, December 19, 2013

ஆட்டோகிராஃப்_2013 @தமிழ் அருவி_(8)

இந்த ஆட்டோகிராஃப் எழுதத்தொடங்கியது முதல் எத்தனை புத்துணர்வான தருணங்களைக் கடந்திருக்கிறேன். பழைய நிகழ்வுகளைக் மீளெழுப்பி அதன் ஆதாரங்களின் ஸ்ருதியினோடு பயணிக்கும் சுகானுபவம் ரம்யம்.

நினைவுநாடாக்களின் சுழற்சியொலியில் இன்றைக்கு எழுதவிருக்கும் நபரை அதிகம் தெரிந்து வைத்திருக்க மாட்டீர்கள் உங்களில் பலரும்...

தெருவிளக்கு என்றொறு முகநூல் குழு!
குழுவுக்கு வெளியேயான நட்புவட்டமெல்லாம் மாமா , மச்சான் சகல-என்ற அளவில் தோளில் கைபோட்டு பயணிக்கும் போது ”தெருவிளக்கு” வேறொரு மாதிரியான உலகம்.

நிறைய அன்பானவர்கள். நட்புமிக்கவர்கள் , தமிழ்பால் காதல் கொண்டவர்கள். வரம்பு மீறிய பேச்சுக்களுக்கு இடம் தராதவர்கள்., நட்பின் அடிப்படையில் பிணைந்திருந்தவர்கள். பிறர் அந்தரங்கங்களில் மூக்கை நுழைக்காதவர்கள். யார் இவரென்ற ஆராய்ச்சிகளுக்கு இடமில்லாது நீங்கள் யாராக இருந்தாலும் அவ்வாறே உங்களை ஏற்றுக்கொள்பவர்கள், நல்ல காரியங்கள் செய்ய கரம் கோர்த்திருந்தவர்கள். இப்படி பலரும் புளங்கிய இடம்தான் ”விளக்கு” .

பெரிய பெரிய விவாதங்கள்! ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பு என்ற சமரசம் உலாவுமிடத்தில் அறிமுகமானவர் இவர்.

எந்த ஊர்? என்ன பெயர்? எதுவும் தெரியாது!

:தமிழ் அருவி!:
அவ்வளவுதான்.

அறிமுகமாகியபோது பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை...
யார் வம்பிற்கும் போகாத சாந்த சொரூபி.
சிலபல மாதங்களுக்குப்பின் தான், அறிமுகப்படலமே...

அப்போல்லாம் அவரை அருவியாரே!ன்னுதான் கூப்பிடுவேன்.
அவரோட எழுத்துப்பிழைகளை சரமாரியாக கலாய்த்துத்தள்ளுவேன்,
அவரோட நட்புவட்டம் ரொம்பச் சின்னது! ஆனாலும் ஆழமானது! அந்த சின்னவட்டத்தில் நானும் உள்ள நுழைந்துவிட்டது அவர் வாங்கி வந்த சாபமா வரமான்னு அவரைத்தான் கேட்கனும்,

அக்காவை- அக்க்ஸ் என்றும் தம்பியை- தம்ஸ் என்றும் அழைத்துக்கொள்ளும் “நவநாகரீக” (ஞே!) முறையை
அறிமுகப்படுத்தி வைத்தது நாங்க தான்!
நாளடைவில் அக்காவாகிப்போன அருவியார்.

குணத்தில் ரொம்பவே சாந்தம். அமைதின்னு
முன்னாடி சொன்னேன்ல....
அதெல்லாம் அப்படியே தண்ணி ஊற்றி அழிச்சுடுங்க...

ஆள் பக்கா சூரி, கோபம் வந்தா ருத்ரதாண்டவம் தான் (ஹாஹா சும்மா).
தமிழ்ல அவருக்கு ரொம்ப புடிச்ச வார்த்தை “யோவ்”.
ரொம்ப பழகினவங்க எல்லாரும் அவருக்கு (ஆண்) யோவ் தான்...

இவரைப்பற்றிய மேலதிக தகவல்கள் விக்கிபீடியாவில் தேடினாலும் கிடைக்காது. பேச்சுவழக்கு இலங்கை மாதிரி இருப்பதால் அநேகமாக இலங்கையைச் சேர்ந்த அயல்தேசத்துக்காரரா இருக்கலாம்
(அடிச்சு கேட்டாலும் நான் சொல்லமாட்டேன்  )

இப்படி என் கையை கட்டிப்போட்டுட்டு ஆட்டோகிராஃப் எழுதுன்னா என்னத்த எழுத? வேறு வழியில்லை..

ஆனால்
அருவி போலொரு அன்பான... நட்புக்கும் திறமைக்கும் மரியாதை கொடுக்கத்தெரிந்த ஒருவரைப் பார்த்ததே இல்லை.
அவரையே பார்த்ததில்லை என்பது கொசுறு தகவல்.
(ஸ்கைப்-தவித்து  ).

தனக்குத் தெரியாத விஷயத்தை
தெரிந்தது போல் காட்டிக்க மாட்டாங்க!
தெரியாதுன்னும் காட்டிக்க மாட்டாங்க ஹாஹா.
அப்படியே ஓரமா உட்கார்ந்து
வேடிக்கை மட்டும் பார்ப்பாங்க..

ஃபேஸ்புக் ஓனர் மார்க் லைக்  போடுபவருக்கு,
ஒரு லைக்குக்கு இவ்வளவுசம்பளம்ன்னு அறிவித்தால்
ஒரே நாளில் விண்டோவ்ஸ் ஓனரை முந்திடுவாங்க
அப்படி ஒரு லைக் சிகாமணி!

தமிழ் அருவி என்றொரு முகநூல் கணக்கிற்கு
அப்பாலான உலகில் அவர் ஒரு பெருமதிப்புடைய பெண்மணி! அது பிறருக்குத் தெரியாமல், வெளிக்காட்டிக்காமல் தன் குழந்தைத்தனங்களோடு இவ்வுலகின் நேசங்களை இணையத்தில்
சின்ன வட்டத்துக்குள் வடிவமைத்து ரசிக்கும் அவரை... அவராகவே ஏற்றுக்கொள்ளும் பிற நட்பினர் சிலரும் இங்குண்டு

அவர்களோடு நானும் ...
தம்பியாக...

(சென்னை வரும் போது ரெண்டுபேரைச் சந்திக்கனும்ன்னு சொல்லியிருக்கார். ரெண்டில் ஒருத்தர் நீங்களும்ன்னு சொல்லியிருக்கார்... பார்ப்போம் காலம் என்ன பதில் எழுதி வைத்திருக்குன்னு...)

தமிழ் அருவி

#ஆட்டோகிராஃப்_2013_(8)


             


  

                                                               




Tuesday, December 17, 2013

ஆட்டோகிராஃப்_2013 @Ivan Saranraj_(6)

நிச்சயமாகச் சொல்வதென்றால் கிரிதரனுக்கு முன்னதாக நேரில் பார்த்த முகநூல் நண்பன் யாரென்றூ கேட்டால் இவனைத்தான் சொல்லனும் 

சென்னைக்கு வந்திருந்தபோது அவனும் ஏதோ தேர்வுக்காக வந்திருந்தான்.

நான் சதீஷ் ரமேஷ் சரண் நால்வரும் தான் முதலில் சந்தித்துக் கொண்ட நன்பர்கள். 

கோவையில் அப்போது பணியில் இருந்தான் சரண். 
எங்க கூட்டத்திலேயே ரொம்ப நல்லவன் யார்ன்னு கேட்டா சரணைச் சொல்லலாம். 

அவ்ளோ கலாய்த்தாலும் சின்ன புன்னகையில் கடந்து போய்டுவான். அக்மார்க் நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அப்படி ஏதும் இருந்தா அது எங்களோடு சேர்ந்ததாகத்தான் இருக்கும்.

சரணும் நானும் சென்னை கோவைன்னு பைக்கில் ஊர்சுத்தியிருக்கோம். அதெல்லாமே கொண்டாட்டமான தருணங்கள். 

பசங்களூக்கு ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கும். அது என்னன்னா 

மாமா,மச்சான்னு கூப்பிட்டுக்குவாங்க ஆனா! இந்த மாப்பிள்ளைன்னு கூப்பிடுவதற்கு கொஞ்சம் சங்கோஜப்படுவாங்க...

எங்க ஜில்லாவுலயே அதை உடைச்சது சரண்தான்.  

"மாப்ள டேய்" -இப்படித்தான் ரொம்ப மரியாதையா கூப்பிடுவான். ரொம்ப மரியாதை தெரிஞ்ச புள்ளையாண்டான். 

முன்னாடில்லாம் அடிக்கடி முட்டிக்குவோம். பத்தாவது நிமிசம் ஒட்டிக்குவோம். 

எங்க friendship எல்லோரிடத்திலும் அதி உன்னதமான நம்பிக்கையும் ஒட்டுதலும் இருக்கும். ஆனா அது அவரவர் வரைக்கும் தான். 

இதை விளக்கமா சொல்லனும்ன்னா போனவாரம் சரண் சென்னை வந்திருந்தப்போ ரூம் புக் பண்ணும் போது நான் தான் அட்ரஸ் ஃபில் பண்ணினேன். அப்போதான் அவன் ஐடி-யில் "பாலக்காடுன்னு" போட்டிருந்தது.

அதுவரைக்கும் அவன் சொந்த ஊர் எதுன்னே தெரியாது... 

சரண் பத்தி ஒரு வார்த்தையில் சொல்லனும்ன்னா ....!

தமிழ், மலையாள, தெலுங்கு கன்னடப் பெண்கள் எல்லாம் தயங்காமல் ராக்கி கட்டக் கூடிய ஒரு அக்மார்க் ஆஞ்சநேயர்.  

எங்களோட என்சைக்கிளோஃபிடியா சரண்தான். எல்லா வீடியோ புகைப்பட ஆதாரங்களும் இவன் டேட்டாபேஸ்ல இருக்கும் 

பேதங்கள் ஏதுமின்றி 
பேரிரைச்சலோடு ஆரவாரம் செய்யும் ஆயிரம் வாரணங்களாய் ஆண்டுகள்
கடந்து நட்போடிருப்போம் ... வா நண்பா... 

Ivan Saranraj

@ஆட்டோகிராஃப்_2013_(6)

கொடைக்கானல் சுற்றுலாவின் போது ...

காதல் தோல்வியில் ரயிலுக்கு முன் பாயும் முன்பு எடுத்த படம்.


(அந்த ரயில் விபத்துக்குள்ளாகி பயன்படுத்த
முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது
லேசான சிராய்ப்புகளோடு
சரண் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்)




                                                          பேதங்கள் ஏதுமின்றி 
                   பேரிரைச்சலோடு ஆரவாரம் செய்யும் ஆயிரம் வாரணங்களாய் 
சரண்ராஜ்

Monday, December 16, 2013

ஆட்டோகிராஃப்_2013 @DrJeya Bharathi_(5)‬

"நான் : பாஸ் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். பெண்கள்கிட்டே எனக்கு பேசவே வராது...
பிரபாகாரன் : அட என்ன சின்னப்புள்ளத்தனமா... போய் கேளுங்க புலவ்ஸ்.:

இப்படித்தான் ஒரு விபரம் தெரிந்து கொள்ள அவரிடம் பேசவே தயங்கி நின்றேன்.
பொதுவாகவே நாமதான் கூச்ச சுபாவமாச்சே
ஒரு விபரம் கேட்பதற்காக அலைப்பேசியிருந்தார் அந்த தோழி.
அது பற்றிய தெளிவிற்காக நேரில் வரமுடியுமா என்றார்.

நேரிலா ...ஆனா நான் திருநெல்வேலியில்லா இருக்கிறேன்னு தயங்க...
அட நான் மட்டும் என்னவாம்! நானும் திருநெல்வேலிலதான் இருக்கேன்.
போஸ்ட் ஆபீஸ்க்கு வாங்கப்பா... கிர்ர்ர்ர்...( இணைப்பு துண்டிக்கப்பட்டது)

ஆனாலும் நான் போஸ்ட் ஆபீஸ் போகவேயில்லை... ஹஹ..
பின் மாலையில் என் கடைக்கு அழைத்திருக்க அங்கே தான் அவரை முதன்முதலில் சந்தித்திருந்தேன்.

சின்ன பயம். நண்பன் வேறு கூட இருந்ததால் வந்தவரிடம் விபரங்களை கொடுத்துவிட்டு
"ஆங்... நன்றி ... பார்க்கலாம்ன்னு ஓடிட்டேன்.ஹஹ..
என்னடா இவன்னு நினைத்த்திருப்பார்... என் அலுவல் ரயில்வே கேட் அருகே அமைந்திருந்தது அப்போது
ரயில்வே ட்ராக் போட்டதால் ரயில் கடக்கும் வரை காத்திருந்தார். அந்த இடைவெளியில்தான்
பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

அவர்தான் . Dr.ஜெயபாரதி. 2012-ம் ஆண்டு தொடக்கமாக இருந்திருக்கும்... அது...
அப்படித்தானே டாக்டர். எனக்கு அப்படித்தான் நினைவு...

சில நாட்கள் கழித்து மீண்டும் சந்தித்தபோது வெறும் கையில் அனுப்பக்கூடாது என்று
மூன்று ஆப்பிள்பழம் வாங்கிக்கொடுத்திருந்தேன்.

மூணு ஆப்பிளை வாங்கிகொடுத்துவிட்டு மூவாயிரம் முறை சொல்லிக்காட்டிட்டான் யா...ன்னு சொன்னாலும் சொல்லியிருப்பாங்க... ஹஹா
ஒரே மாவட்டத்துக்காரர். (தி லி)
கூப்பிடு தூரத்தில் எம் அலுவலகமும். அவர் படிக்கும் மருத்துவமனையும்...

அப்போதிலிருந்து இதோ இன்றைக்கு வரைக்கும் டாக்டர்... டாக்டர்தான்.

முன்னாடியே facebook-ல் அறிமுகமிருந்தும்... நேர் சந்திப்பில் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது... ஹஹ அது ஏன்னே தெரியவில்லை இப்போதுவரைக்கும்...

டாக்டர்கிட்ட பொய் சொல்லக்கூடாதுன்னுவாங்க... நான் இவங்ககிட்ட சொல்லவே மாட்டேன். மீறி சொன்னாலும் மாட்டிக்குவேன். ஒவ்வொரு வார்த்தையையும் கூர்மையா கவனிப்பாங்க தப்பிக்கவே முடியாது...ஆகவே கூடியமட்டும்... மௌனவிரதம் இருந்துடலாம்..ஹஹ..

ரொம்ப அன்பானவங்க..
அதைவிட அக்கறையானவங்க.. நீளமான அறிவுரைகள் நிறைய கேட்டிருக்கேன். கொஞ்சம் திருந்தவும் செய்திருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்.

அவர் திருமணத்தில் நானும் கிரியும், நானும் பிரகாசும் போய் கலந்துவிட்டுவந்தோம்... சொன்னமாதிரியே பிரியாணி போட்டு கொடுத்தவாக்கை காப்பாத்திட்டாங்க..

2012-ஜனவரியில் என் பிறந்தநாளைக்கு " என் படத்தை ஓவியமாக வரைந்து கொடுத்தார். இன்னும் அப்படியே பத்திரமா வைத்‌திருக்கிறேன். சொல்ல மறந்துட்டேனே... பிரமாதமான ஓவியர்.

2014-ஜனவரியில் கூட எனக்குப் பிறந்தநாள் வருது டாக்டர்... ஹாஹா சும்மா ஒரு நினைவுறுத்தல்...

அவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்கு நான் கவிதை எழுதி போஸ்ட் பண்ணிடுவேன்.

போன முறை மறந்துட்டேன். போன் போட்டு திட்டுனாங்க... ஹஹ அடிச்சுபுடிச்சு வந்து எழுதியிருந்தேன்.

எங்க அப்பா மாதிரி ஒரு அக்கறையான கண்டிப்போடு என்னை வழிநடத்துற...
எங்க ராஜி... (ஜெயராஜி என்ற ஜெயபாரதி ) டாக்டரின் அன்பினைச்சுமந்து...
இதோ 2014...ம் ஆண்டை நோக்கி...

DrJeya Bharathi

‪#‎ஆட்டோகிராஃப்_2013_5‬
copy of Ravivarma..Fruit lady -JB 




எனக்குப்பிடித்த ஓவியம் -JB 

முதல் ஓவியம்  -JB  



ஓவியங்களின் ஓனர் ... 

Saturday, December 14, 2013

ஆட்டோகிராஃப்_ 2013 @Subasree Mohan (4)

அது ஒரு பின் மாலைப்பொழுது...
உன் நம்பர் கொடுடா கண்ணா என்ற குறுஞ்செய்தியைப் பார்த்ததும்...  
தயக்கமே இல்லாமல் கொடுத்துவிட்டேன்.  அடுத்த அரை வினாடியில் அழைத்திருந்தார். 

எடுத்துப்பேசிய குரலில் தான் எத்தனை வாஞ்சை...
அன்றைக்கு முன்மாலையில் எழுதியிருந்த ஒரு கவிதை பற்றிய
என்னுடைய கருத்தில் முரண்பட்டு அதை தெளிவுபடுத்தவும்... பின்னே அன்பும் அக்கறையுமான  விசாரிப்புகளையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு... இதெல்லாம் நடந்து 

சில மாதங்கள் கழித்து சென்னை வந்திருக்கிறேன் என்றும்... நீயும் வா கார்த்திக் என்றும் அழைப்பு விட்டிருந்தார். என்னால் அவரைச் சந்திக்க முடியாததின் காரணமாக சென்னையிலிருந்த அண்ணனை அவரைச் சந்தித்துவரச்செய்தேன். 

அதன் பின் நாட்களின் அந்த சந்திப்பை தவறவிட்டதன் வருத்தங்களை பூர்த்தி சேயும் விதமாக இதுவரைக்கும் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் அவரோடு நாங்களெல்லாம் நேரம் செலவிடாமல் இருந்ததில்லை... 

அன்புத்தம்பிகளாய் எங்களை அரவணைத்து அன்புசெய்யும் அந்த நல்லுள்ளம் சுபஸ்ரீ அக்கா.. (சிபி மாம்ஸை... இங்கே பிரித்தெழுதத தேவையில்லை என்றே நினைக்கிறேன்}.

 சில நாட்கள் முன் உடல்நலமின்மையால் அவதியுற்ற பொது அவர்களுக்கு ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அந்த கடிதத்தின் பதில் ஒற்றை வார்த்தையில் முடிந்துவிட்டதுதான் அதனுள் எத்தனை அன்பை புதைத்து வைத்திருப்பார் என்பது எனக்கு மட்டும் வெளிச்சம்...    

அந்த கடிதம்
    
"கடந்த சில நாட்களாகவே கவனித்து வருகிறேன். உடல் நலக்குறைவின் தீவிரத்தில் ரொம்பவும் வருந்திப் போய் காணப்பட்டிருக்கும் உங்களை... அதே நேரத்தில் உங்களைச் சுற்றிஇருப்பவர்கள் எத்தனை பிரயர்த்தனமாய், அன்பினோடு உங்களை கவனித்துக் கொள்கிறார்கள் என்பதையும் கூட உடல் நலம் என்பது பெரிதாய் ஒன்றுமில்லை அக்கா... மனதை இலகுவாக வைத்துக்கொள்ளுங்கள்.
மருந்துகள் செய்யாததை மனிதர்களின் அன்பு சாதித்துவிடும்தானே...
ஒரு மனிதன் மீது எல்லோரும் அன்பு பாராட்டுவதென்பது அத்தனை எளிதாய் சாத்தியமில்லாதது.. நீங்கள் அத்தகைய மனிதர். உள்ளத்தின் பேரில் பொங்கும் அன்பின் ஆர்ப்பரிப்பால் எத்தனை மனிதர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறீர்கள்... 
எளிதில் அன்பை பகிரும் உங்கள் குணம் இங்கு யாருக்கு தாராளம். விரல்விட்டு எண்ணத்தொடங்கினாலும். சுபாவினைப் போல் சுபா ஒருவர்தான்.
உங்களுக்கு கொஞ்சமும் மாற்றில்லாதவர் மோகன் மாமா... அவரைப் பிரித்துப்பார்த்தலரிது.. 
மங்கோலியா சென்று வந்தது முதல் மிகுந்த களைப்பினோடும், வீசிங் தாக்கத்தினோடும்இருக்கும் உங்களை குழந்தைபோலத் தாங்கும்... பலரையும் அப்படித்தான் பார்க்கிறேன். இவர்களை நீங்கள் அடையப் பெற்றதும் அவர்கள் உங்களை அடையாளங்கண்டதும் வரம்... 
இந்த ஓய்வு உங்களுக்கு தேவையானதாக இருக்கட்டும் . அவ்வாறே நானும் நினைக்கிறேன். நதி கிளைகளோடு சங்கமித்து பெரும் ஓட்டமெடுக்கும் போதும் அணைபோட்டுக் கொஞ்சம் தடுப்போமில்லையா..அத்தகையது இந்த ஓய்வு.. 
இந்நேரத்தில் எத்தனை அன்பானவர்களை நீக்கள் பெற்றிருக்கிறீர் எனப் பெருமை பட்டுக்கொள்ளுங்கள் உங்களோடு சேர்ந்து நானும் அதையே சிந்திக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன் ஒரு மனிதன் மீது எல்லோரும் அன்பு பாராட்டுவதென்பது அத்தனை எளிதாய் சாத்தியமில்லாதது. நீங்கள் அற்புதமான அன்பின் குழந்தை ...
இச்சிறு உடல் களைப்பு உங்களை ஒன்றும் செய்திடாது...
மதகுகள் திறக்கும் போதுசீறிப்பாயும் வெள்ளமாய் பிரவாகமெடுத்து வாருங்கள்...
அணைக்கு மறுபுறம் கிடக்கும் களைகள் எல்லாம் வெள்ளத்தின் வேகத்தில் காணாது போகும் .
எப்போதும் உங்கள்  தம்பி..."

      எங்கள் எல்லோரின் மேடைகளையும் எங்களுக்கு முன்னே கட்டமைக்க வலியுறுத்தும் அன்பும், பரிவும்தான் உங்களோடு எங்களை சேர்த்து கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது..  காலத்தின் சுழற்சியில் ஆண்டுகள் நீங்கிபோனாலும் உங்கள் அன்பின் சரணாலயத்தைத் தேடி வரும் வேடந்தாங்கல் பறவைகள் நாங்கள்....

Subasree Mohan

#ஆட்டோகிராஃப்_ 2013





அன்பிற்குண்டோ அடைக்குந் தாழ் 





ஆனந்த தாண்டவம்











பி.சி.ஸ்ரீராம் -கேமிராவை எடை பார்த்த பொழுது க்ளிக்கியது 




சியர்ஸ்.... அக்க்ஸ் 


சீனாவில் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் போது... க்ளிக்
(விசிறி சின்னம் )

ஆட்டோகிராஃப் 2013 @Prakash Sona (3)_

அது ஒரு முகநூல்குழு... சிற்சில விவாதங்களில் அறிமுகமானோம்.

பொருள் பொதிந்த பேச்சு... யாரிவன் என்று கவனிக்கத்தக்க கண்ணியம்.

பெரும் இடைவெளிக்குப்பின் அரட்டையில் பேசிக்கொடோம். அழைப்பு எண்களை பரிமாறிக்கொண்டோம்.

ஒருநாள் திரு.ஷேர்கான் ஹமீது அவர்களோடு சென்னையில் எங்கள் நண்பர்கள் எல்லாருமாய்ச் சந்திப்பதாக திட்டமிட்டுக் கொண்டோம்.

சென்னையில் வசிக்கும் நண்பர்களையும் அழைக்கலாம் என்றதும் முதலில் சுழற்றியது பிரகாஷின் எண்ணைத்தான்.
நட்புவட்டத்தில் என்னோடு மட்டும் அறிமுகமாகி இருந்தவன். (பேச்சளவில்) சந்திப்புக்கு நான் வரும்முன்னே... வந்து கலந்து எல்லோரோடும் ஐக்கியமாகிவிட... வழக்கம் போல நான் லேட்.

அதன் பின் அதிரிபுதிரியான அந்த கலாய்ப்பும்,சந்திப்பும்
எங்களை பிணைத்துவிட... இதோ இன்னும் தொடர்கிறது...

எங்க ஊர்க்காரன் .  (திலி)
பெரும் தமிழ்ச்செருக்கு பிடித்தவன். இலக்கியம் இலக்கணம் எல்லாம் பேசுவோம். முன்பெல்லாம் எந்த புத்தகத்தைப் படித்து முடித்ததும் அதைப்பற்றிய நீண்டதொரு உரையாடல் இருவருக்குமிருக்கும்...

ஒரே தடத்தில் சிந்திப்பவர்களாதலால் இவன் வாதங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும்.

இன்றைக்குவரைக்கும் பெரும் மதிப்புடைய நட்பினுக்கு உரியவன்...

வேறென்ன சொல்ல பிரகதீஷ்வரன்... பெரியகோவில் போல என் நண்பன் பிரகாஷின் உள்ளமும் பெரிது...

இவன் சோகப்பட்டு ஒரே ஒருநாள் மட்டும் உடனிருந்து பார்த்திருந்திருக்கிறேன்.
இனியெப்போதும் அதுபோலொருதருணம் வாய்க்காது நண்பா...

என்றென்றும் நட்புடன்..

பிரகாஷ் சோனா

#ஆட்டோகிராஃப்_2013








ஆதி மற்றும் பிரகதிஷ்வரன் @பிரகாஷ் 


அத்திப்பழம் சிவப்பா? தன்  அத்தமக சிவப்பா? -ஆராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட படம்.




சின்னதா ஒரு ஹைக்கூ...


Friday, December 13, 2013

ஆட்டோகிராஃப்_2013@ Giridaran Giri (2)

அலுவல் வேலைகள் தவிர்த்து விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தேன். சதீஷ் "வா உனக்கு ஒரு நண்பனை அறிமுகப்படுத்துகிறேன் " என்று சொல்லி அமைந்தகரை Amba Skywalk அழைத்துப்போய் இருந்தான் அங்கேதான் கிரிதரனோடு முதல் சந்திப்பு... 

அதற்கும் முன் தொலைப்பேசி உரையாடல்களில் பேசியிருக்கிறோம். நாங்கள் ஒரு பதினெட்டு பேர் இருப்போம். மிக நெருங்கியவட்டத்தில் ஒரு பதினோரு பேர். கான்ஃப்ரன்ஸ் கால் போட்டு அரட்டை அடிக்கத்தொடங்கினால் ஊரே தூங்கும் ஜாமத்தில் தான் போனைக் கட்செய்வோம். 

இதோ இவனோடும் மூன்று வருடம் கடந்து போய்விட்டது. கிரி. அந்த புன்னகை ஒன்று போது முழுசுயவிவரத்திற்கும் ஒற்றை விளக்கம் கொடுக்க. எதிரி என்றாலும் இவன் காட்டும் பொறுமையும், அன்பும் யாரிடமும் பார்த்ததேயில்லை.. 

அப்போ டீம்ல எல்லோரும் மச்சான்ன்னு கூப்பிட்டுகொண்ட போது கிரியை மட்டும் ஒட்டுமொத்தமாய் மாமா என்றழைத்தோம். அதுவே  நிரந்தர உறவுஆகிவிட்டது.அண்ணன் திருமணத்திற்கு ஊருக்கு வந்தவனை ஏரியா சிறுவர் முதற்கொண்டு. உரிமையாக மாமா என்றழைக்க நெகிழ்து போனான். 

கிரி வீட்டிற்குப் போய் அங்கேயும் மாமன் தான். அவங்க அம்மா வித்யாசமா பார்த்து ரசிச்சாங்க..ஹஹ(கிரி அம்மா தோசை வார்த்தாங்கன்னா கணக்கு வழக்கில்லாமல் உள்ளே இறங்கும் அப்படி ஒரு கைப் பக்குவம்) 

நட்பில் இணைந்தபிறகு மதுரை,கொடைக்கானல், பாண்டிச்சேரி,திருச்செந்தூர்,சங்கரன்கோவில்,திருநெல்வேலி, மாமல்லபுரம் சென்னைன்னு ஒன்றாக சுத்தியிருக்கோம். 

நெருக்கடியான தருணங்களில் இரண்டு பேரும் மெரினா கடற்கரை படகில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருப்போம். ஒரு பரிசுத்தமான நட்பு அந்த கடற்கரையின் எல்லா இரைச்சல்களையும் விழுங்கிவிட்டு அமைதியைக் கொடுக்கும். 

கொண்டாட்டங்கள் மிகுந்த இவனின் முகத்தைத் தான் உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்குப் பின்னால் காயங்களை மறைத்துக்கொண்டுகாற்றுக் குதிரையாய் திரியும் இன்னொரு கிரியை எனக்குத் தெரியும். 

உயிர் கொடுக்கும் நண்பன் கிடைப்பது கொஞ்சம் கஷ்ட்டம்தான். உயிர் கொடுக்கத்தகுதியான நண்பன் கிடைப்பது மிக மிக அரிது . கிரி அப்படியானவன் எனக்கு... 
இதோ. அவன் நட்பினையும் சுமந்து நான்காம் ஆண்டுக்கு பயணமாகிறேன்.

Giridaran Giri
ஈடு இணையற்ற மார்பிங் வேடத்தில் கிரிதரன் 


கிரிதரன் 


யானை கிரிதரன் அவர்களுடன் ஆசீர்வாதம்
பெற்றுக்கொண்ட போது எடுத்த படம் 
உலக நாயகனுடன் உள்ளூர் நா யகன்
(மேர்ஜ் செய்யப்படவில்லை என உறுதி அளிக்கிறோம்)
 கடுமையான போட்டோஷாப்
வேலைகளுக்குப்  பின் கிரி .

ஆட்டோகிராஃப் 2013 @Pravin raja (1)


பார்க்கவும் பழகவும் பரம சாது. ரொம்ப அன்பானவன் . ஊரு கன்னியாகுமரி . இதோடு மூன்று வருடம் கடந்து நான்காவது வருடமும் வரப்போகிறது.. 

நல்ல நண்பன். ஏதாச்சும் தப்புப்பண்ணிட்டு சின்னப்புள்ளை மாதிரி முன்னாடி வந்து நிப்பான். தாறுமாறா திட்டுவேன.
நீ திட்டு சகல உன்னைவிட்டா யாருக்கந்த உரிமை இருக்குன்னு சிரிச்சுகிட்டே சொல்வான். 

குணத்திலே தங்கம். நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் பொண்ணு எடுப்போம்ன்னு பேசிக்கொண்டது இன்று வரைக்கும் சகல-ன்னுதான் கூப்பிட்டுப்போம். 

சமீபகாலனா ஆள் அடிக்கடி காணாமல் போய்டுறான். லவ்வுல சிக்கிட்டான் போல...
இவன்கிட்ட உள்ள கெட்டப்பழக்கம் சுமார் நூறு , நூத்திபுப்பத்தஞ்சு லவ்வு பண்ணிட்டு ஃபெயிலியராகிட்டேன்னு பாட்டுப் பாடியே கொல்வான். 

எதையும் தாங்கும் இதயமா மாறி இவன் நட்பை கையிலெடுத்து கடந்து கொண்டிருக்கிறோம்.

வீட்டில் பொண்ணு பார்க்குறாங்க (2013 டிசம்பர்-ல் எழுதுகிறேன்) சீக்கிரமே டும்... டும்.. டும்... இருக்கும்.! வாழ்த்துக்கள் சகல...

Pravin Raja

#ஆட்டோகிராஃப்_2013

வயதுக்கு வந்த
போது  எடுத்த படம் 
Zambia  ( kariba ) -வில் பயணத்தின் போது 


பரத நாட்டிய வகுப்பில்



பிரவின் 
ரொம்ப தேடாதீங்க  இதில் பிரவின் இல்லை... இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுதான்.



Sunday, December 8, 2013

ரௌத்திரம்

சப்தமிடாத ஓர் ஊமை மௌனம்... உள்ளிருந்து எண்ணங்களை உருட்டும்..

போதிமரம் தேடிச்செல்லும் ஞானவாக்குகள் குப்பைத்தொட்டியெங்கும் இரைந்து கிடக்கும்

வேற்றுகிரகம் போலே சுற்றியிருக்கும் தொடர்பில்லாத மனிதனை தற்செயலாயேனும் கவனிக்கத் தோன்றும்

அடுத்தது என்னவென்ற கேள்விகள் தாகத்தைக் கொடுக்ககாலிக்
குடுவைகள் எக்காளமாய்ச் சிரிக்கும்.

கவனமாயிறுவென்னும் கருணைப்பட்டோர் வாக்குகள் போலானதோர் பசி தீர்க்கும் மந்திரம் வேறில்லை...

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

இச்செகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

பாரதி மெல்ல மெல்ல உள்ளிருந்து ரௌத்திரம் விதைக்கிறான்.. கூச்சலிட்டமனம் அமைதிப்பட்ட குளமாகுது!

அதன் கள்ள மவுனத்துக்கடியில் ஏதுகுடியிருக்குதென்று யாரறிவார்.

-கவிதைக்காரன்.