Saturday, May 26, 2012

அது ஒரு அழகிய ஹைக்கூ.... காலம்! [ மகிழம்பூII ]



***உறங்கிக்கொண்டிருந்தஏரியின்உறக்கத்தை கெடுத்ததுஒற்றை நீர்குமிழ்.
***
தூண்டில்காரனின்தக்கை மேலேதும்பி அமரும்நேரம் ஹைகூவானது...
***
பிரசவம் இலவசம்ஆட்டோவில்இருக்கு ஆஸ்பத்திரியில்இருக்கவேண்டியது..
***
அரளிச்செடிக்குபூ-பூத்த மகிழ்ச்சிபிள்ளை பெற்றெடுத்தாள்மலடி..த்தாய்..
***
வேதம் ஓதும்சாத்தான்கள்கள்ளுக்கடையில்மதுகேடு வாசகம்.
***
மழை கொட்டியதுவிற்ற நிலத்தை நினைத்துவிம்முகின்றான்விவசாயி
***
மழலை சொன்னதெல்லாம்புரிந்ததாய் சிரிக்கிறான்நான் அவன் சிரிப்பதுபுரியாமல் ஏதேதோசொல்கிறேன்
***
கட்டப்பட்ட கண்களோடுதராசின் அடியில் புளிஒட்டப்பட்டதை அறியாநீதிதேவதை...
***
கோடையில்வீதிக்கு வீதிகுயவனின் கைவண்ணம்மண்பாண்டதண்ணீர்பந்தல்..
***
நள்ளிரவுநாய்கள் ஊமையாய்போனால் பகலில்பூட்டை உடைத்ததாய்ஒப்பாரிவைத்திருக்கும்மனிதர்கள்.
***
லெவல்கிராஸிங்கில்எப்போது இரயில்போகுமென தந்தைஎப்போது இரயில்வருமென பிள்ளை
***
கிளைவெட்ட வெட்ட தளிர்க்குதுமரம். துணைவெட்டியதால்உலருது மனிதம்இளம்விதவை
***
நானும் நீயும்நடந்த பாதைசிறு மௌனத்தின் போதும்விளையாடிக்கொண்டணநிழல்கள்
***
மனிதன் மனிதனாய் வாழஎழுதிய மத நூல்கள்குப்பையில் கிடக்கின்றனமதம் சொல்லி...

***
சற்றொரு நிமிடம்இடறி விழுந்தேன்என் காலுக்கு அடியில்வானம்
***

பறந்துவிடாமல் நீயிறுபிடித்துவிடாமல் -நான்இரசிக்கிறேன்வேண்டுகோள்வண்ணத்துபூச்சிக்கு..

***
யானைக்கும் சிறகுமுளைக்குதுகுறும்புசெய்யும்சிறுவ்னை சுமந்துநடக்கும் போது

***

இதுவரை எந்தகவிதையும்எந்த கவிஞனையும்சமாதானப்படுத்தி இருக்கமுடியாது.- இருந்தால்எழுத்துகள் எப்போதோஅழிந்திருக்கும்

***
விலையேறியேப்போவதால்மொத்த தங்கமும் பாதுகாப்பாய்சில வங்கியில்பல அடகுகடையில்

***
மழையில்நனைந்த குடைஜலதோஷம் பிடிக்குமெனஉலரவைக்கும்சிறுமி

***
ஜாதி மதபேதமில்லைகாகக்கூட்டில்குயிலின் முட்டை

***எரியும் மனதைஅணைக்கும்கண்ணீர்

***

வேலிகாக்க கூலிபயிரை மேய்வது

***
துப்பாக்கிக்கு ரவைவாங்கிய தேசத்தில்பசித்தவனுக்கு கஞ்சியில்லைசோமாலியா

***
’விடுதலை’புத்தகம் எழுதுகிறார்சிறைக்குள்ளிருந்து..

***
வாசகனுக்குவிருந்து வைக்கபட்டினியாகத்துணிபவன்படைப்பாளி!!!

***
பம்மிகொண்டேபோகும் அம்மாவின்அழுகைக்குரலுக்குபதில் தேடியேதேய்த்துப்போகும்சீனத்து டெலிபோன்கார்டுகள்

***

விமானப்பணிப்பெண்ணும்வீட்டுவேலைக்காரியும்ஒன்றாகத் தெரிவதில்லைபலபணக்கார கண்களுக்கு

***
சாவிகளைதொலைத்தவர் பட்டியலில்எப்படியும் இடம்பெற்றிருக்கும்ஒவ்வொருவர் பெயரும்

***
கோவிலுக்குபடியளக்கிறான் பக்தன்கடவுளிடம் பிரார்த்தனையில்லட்சம் செய்தேன் கோடி கொடு

***
அறிமுக நாயகனகவேஅடையாளம் தெரியாமல்போன கோடம்பாக்கத்துவரவுகள்

***
மருந்து வாங்ககாசில்லையெனவிஷம் வாங்கும்பேரறிவாளிவாக்காளன்
***
கனவுகண்டுக்கொண்டேதூங்கிவிடுகிறேன்தூங்கிகொண்டே கனவும்கண்டுவிடுகிறேன்மிச்சமாய் பலிக்காத கனவுகள்

***
குப்பையில் எறியப்பட்டகாகித நெரிசலில்கவனிக்கப் படாதபாதி எழுதிய கவிதைகள்

***
எழுத்துபிழைகளைஅடையாளம் காண்போருக்குகவிதை படித்தஅனுபவம்.மற்றவருக்கு கருத்தைரசித்த அனுபவம்
***
முடிக்கவே மனமில்லாமல்எழுதிகொண்டேபோவதால்ஹைக்’’கூ-வென்றானதோ?!

***-கார்த்திக் ராஜா

Wednesday, May 23, 2012

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரா.புவன்


பிறந்த நாள் வாழ்த்துன்னு கவிதை எழுதுறது வழக்கமா கஸ்ட்டப்படுறதே இல்ல எனக்கு . 

அந்த நபரோட கேரக்டரையும் என்னோடான அவரது பழக்கத்தையும் புருவத்தின் நடுவில் கொண்டு வந்து சிந்திக்க ஆரம்பிச்சா போதும் வார்த்தைகள் வந்து விரல் நுனியில் தந்தி அடிக்க எதுகை மோனை மேலே கொஞ்சம் ஏறி நின்னு அடிக்க 
கவிதையா கொட்டிடும்.... 

ஆனா இவர் அப்படிச்சாதாரணமானவரில்லையே... 
கிட்டத்தட்ட பாதி முகநூல் முக்கியஸ்தர்களுக்கும் அறிமுகமான முக்கியப்புள்ளி.... ரா. புவன் --- அப்படின்னு சொன்னா யார்ன்னு கேக்குற ஆள் கொஞ்சமே கொஞ்சம் இங்கே 



 

சரி இப்போ என்ன சொல்ல வர்ரேன்னா! எனக்கும் இவருக்குமான பழக்கம் சரியா 8 மாசம் முன்னாடி...  “திசைகாட்டி” -அப்படின்ற குழுவில் இணைத்து விட்ட நாள் முதல்.... 

அட ஆமாங்க ... சும்மா மொறைச்சாலே கம்மெண்ட்ல ஆளை கலாய்ச்சு காலி பண்ணிடுற கேக்ங்ஸ்ட்டரா நான்  திரிஞ்சுக்கிட்டு இருந்த காலக்கட்டத்தில் 

அன்றைக்கு ஒரு நாள்... 
[அட,.... அதாங்க இவரை திசைகாட்டியில இணைத்த அன்று]

இரவு நேரம் கம்மெண்ட்ல எல்லாரையும் ஓட்டிக்கிட்டுஇருக்குறேன் சைட்ல சத்தமே இல்லாம என்னைய  அக்குவேறா ஆணீ வேறான்னு பிரிச்சு தூர்வாரிக்கிட்டு இருக்காரு சார்.... என்னடான்னு பார்த்தா

எங்க கார்த்தியண்ணனை யார்ப்பா கலாய்ச்சதுஅடிங்கடா கேட்ட உடைங்கடா பூட்டைன்னு .. ஏகமாக அமளி துமளி அள்ளி வீசுறாரு சில பல பிட்டுக்களை... 

ஏய்ய்ய்... இந்தாப்பா நில்லு நில்லு யாரு நீயி... 
என்னையவே இந்த ஓட்டு ஓட்டுறன்னு கேட்ட்டா... 
அட நீங்க சும்மா இருங்கன்னே உங்களுக்கு ஒண்ணும் தெரியாது நான் தான் உங்க சிஷ்யன்னு சொல்லி போய்க்கிட்டே இருக்காரு அவர் வேலையில கருத்தா....


இது சரிவராதேன்னு ஒரு நாள் பொறுத்திருந்தா மறுநாள் 
சார் போடுற அத்தனை போஸ்ட்டும் எனக்கு ஆப்பு வைப்பது போல 
என்னை அண்ணனு கூப்பிட்டது கூட பரவால்ல
 

****நான் கஷ்ட்டப்பட்டு கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுறப்பொண்ணையும் போய் அக்கா-ன்னு கூப்பிட்றது ... 

கடைசியா ஒரு முடிவோட இவரு போன் நம்பரைத்தேடி அட யார்பா நீ-ன்னு பேச ஆரம்பிச்சோம் .. பேசியே ஆளைக்கவுத்திட்டார்.... அப்பொறம் இவரு சவுதி கிளம்பும் வரைக்கும் நானும் இவரும் கூடி கும்மியடிச்சு ,,,, பேசாத கதைகள் இல்ல அடிக்காத லூட்டி இல்லை...! 


அப்பவே தலை-க்கு கவிதை எழுதுறது ரொம்ப இஸ்டம்....
 
காதல் கவிதையா அள்ளி வீசுவாரு... என்னோட வால்-ல நான் எழுதும் கவிதைய படிச்சுட்டு அண்ணே அதுக்குள்ள பத்து லைக்கா ? என் கவிதை இன்னும் காத்து வாங்குதுன்னு கடுப்பேத்துவாரு 

[ஏன்னா நான் கவிதை எழுதிக்கொல்ல ஆரம்பிச்ச காலமும் அப்படித்தானே எனக்கும் இருந்தது...]

இரண்டு பேருக்குமிடையே கவிதைப்போட்டி வைச்சுப்போம் ஒரு தலைப்பு கொடுத்து அதில் கவிதை எழுதனும்ன்னு பேசித்தீர்மானிச்சு எழுதி ஒருத்தர் ஒருத்தர்கிட்ட காட்டிப்போம்.

அப்படியும் இப்படியுமா பழகிய நாட்கள் கரைந்து போக 
ஒரு நாள் சவுதிக்கு [அல்-ஜுபைல்] கிளம்பிப்போனபின்னாடி ... தான் இவருக்குள்ள இருக்கும் பவர் ஸ்டார் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சிருப்பார்ன்னு நினைக்கிறேன்.. 

 
இனிமே நான் போற பாதை சிங்கப்பாதைன்னு அப்போத்தான் அல்ஜிபைல் ப்ளாட்பார்த்தில் உக்கார்ந்து ஒர்ரூபா காயினை சுண்டிருப்பார் போல அதுக்கப்புறம் தலைவரு தொட்டதெல்லாம் தூள் பறக்க ஆரம்பிச்சிரிச்சி... 

சும்மாவே திங்கு திங்குன்னு ஆடுவாரு பவர் ஸ்டார் வேற உள்ள புகுந்துட்டாரு கேக்கவா வேணும்... 

தலை முடிய சிலுப்பிக்கிட்டு தமிழ்தாயை வணங்கிக்கிட்டி பேனாவ தலைகீழா திருப்பி பிடிக்க ஆரம்பிச்ச டர்னிங் பாய்ண்ட் அங்க தான்... 
அது மட்டுமில்லாம தன் பெயரை தமிழ்ல “ரா புவன்” அப்படின்னு வேற மாத்திட்டார்.

****இந்த இடத்தில் நீங்க இந்த லிரிக்ஸை முணு முணுக்கவும் :


அடுத்து அண்ணன் ஸ்டேட்டஸ் புலி  
 “அப்துல் வாஹப்” கிட்ட அஸிஸ்டெண்டா சேர்ந்துட்டார் போல... சமுதாயம் , குடும்ப வாழ்க்கைன்னு ஸ்டேட்டஸில் பிரிச்சு மேய ... 


திடீர்ன்னு உலக நியதின்னு கிளம்பிட்டாரு... அடுத்து நம்ம டாஸ்மாக் ஆதீனம் “டிமிட்ரி இவ்னொஸ்கி” 
[ அப்போதைய கார்த்தி கர்னா ] காற்றும் வீச மது கலந்த மசால் வடை விற்க ஆரம்பிச்சுட்டாரு... 


வேல்குமார். தீசன், டெண்டல் எழிலன், சாந்தி ப்ரீஸ் , ரவி நாக், பிரபின் ராஜ் , -ன்னு பெரிய பெரிய ஃபேஸ்புக் “கை”-ங்க கூட  

[லிஸ்ட்டில் இன்னும் பலர் இருக்கலாம் ஆனால் இப்போது எனக்கு மணி நள்ளீரவு 1:47 ஆக தூக்கம் கண்ணைச் சொக்குவதால் மூளைக்கு அதிக வேலை கொடுக்க எண்ணமில்லை ] சேர்ந்து பேஸ்புக்கில் பவனி வர ஆரம்பிச்சுட்டார்... [now 2:17a:m]

ஸ்ருதி சுத்தமா இறங்கி அடிக்கும் போது “திசைகாட்டியில்” **பெண்கள்ன்னு*** ஒரு கவிதைப்போட்டி -ஒண்ணு நடத்தினோம்.... பழைய தொழிலை மீண்டும் கையிலெடுத்து கவிதையில் களமிறங்க...  
 

பெண்கள் தலைப்புக்காக எழுதும் போது அம்மாவை மட்டுமே சுற்றிச் சுற்றி எழுதியதால் ஒற்றை நொடியில் வெற்றி வாய்ப்பை இழக்க .. 
சக கவிஞர் ஒருவரின் கவிதைக்கரு நல்லா இருக்கேன்னு எடுத்து தன் இரண்டாவது கதையை எழுத ஆரம்பிச்சுட்டார்,,, 

ஏற்கனவே முதல் கதையை எழுதி வெளியிட்டு நல்ல பெயர் சம்பாதித்ததால் அடுத்த கதைக்கு ரசிகர் பட்டாளமும் அதிகமாக அடுத்தடுத்து கதைகள்ன்னு களமிறங்கி விளையாட ஆரம்பிச்சார்... 

இவரது கதைகளின் தீவிர விசிறி நானும் , ஷெர்கன் ஹமீது அண்ணனும்...திடீர்ன்னு ஒரு நாள் அண்ணே ஒரு பாட்டு ஒண்ணு எழுதலாம்ன்னு இருக்கேன்னு சொன்னார். அட வாழ்த்துக்கள்பான்னு வழக்கம் போல என்னுடைய வாழ்த்தைச்சொன்னதும் லிரிக்ஸ் காமிச்சார்... 

எப்போதும் வெளியில் இவரது படைப்புகளை புகழ்ந்துவிட்டு தனியா கூட்டிட்டுப்போய் இன்பாக்ஸ்ல தவறுகளை மண்டையில் கொட்டி பழக்கப்பட்டதால் அதிலும் சில கரெக்‌ஷனைக்கொடுக்க.. தன் குரலாலே பாடி தன்னோட முதல் முயற்சியை முதலாவதாக எனக்கு அனுப்பி எப்படி இருக்குன்னு கேட்டார். 

இசையில்லாத அந்த குரல் மெலடிக்கு கொஞ்சம் மிரட்டலாகவே தோன்ற மனதில் பட்டதைச்சொன்னேன் . பின், நண்பர் ஒருவர் பாடி இசையமைத்துக்கொடுத்ததுன்னு  வலைதளத்தின் வீடியோ லிங்கை கொடுத்தார் நிஜமாவே நல்லா இருந்தது...

[உங்களில் பலரும் கேட்டிருப்பீங்களே? ] 

இப்படியே தொட்டதெல்லாம் துலங்கிக்கொண்டிருந்த பாதையில் போய்க்கொண்டிருப்பவனை சிலநாட்களாக காணாமல் போக ... திடீர்ன்னு ஒர் நாள் செல்போன் திரையில்  தலைவர் நம்பர் டிஜிட்டல் எழுத்துக்களில் ஒளிர  எடுத்துகேட்டபோது அடுத்த முயற்சி இசைஆல்பம் பண்ணலாம்ன்னு இருக்கேன்னே...ன்னார்... 

அதில் சில முயற்சிகளையும் எப்படி செயல் வடிவம் கொடுக்குறதுன்ற தன்னோட கருத்துக்களையும் பகிர்ந்துக்கிட்டார் .. முதல் பாட்டுக்கு லிரிக்ஸ் ... வழக்கம் போல உங்க கிட்டதான் முதல்ல அண்ணேன்னு அனுப்பி வைச்சார்.... “பங்காளி பங்காளின்னு ” தொடங்கும் அந்த பாடல் 
அடடே பயபுள்ள டாப் கியரில் போகுதேன்னு சந்தோஷப்பட வைத்தது.


இதோ அடுத்து சிங்கப்பூர்க்கு போலாம்ன்னு இருக்கேன்னு சொல்றார்.... கால்ல சக்கரம் கட்டிட்டுச் சுத்துறார்... 
அல் ஜுபைல் வந்ததுக்கு சம்பாதிச்ச காசுல மனசுக்கு திருப்தியா இந்த ஆல்பத்தை முடிக்கனும்ன்னு நினைச்சிருக்கேன்றார்... 


கொஞ்சம் பெருமையாகவே இருக்கு மனசுக்கு பிடிச்சதை செய்யவும்.. 
மனசுக்கு பிடிக்கலைனா தூக்கி ஒதுக்கவும் ஒரு பக்குவம் வேணுமில்லீங்களா அது ரா. புவன் கிட்ட இருக்கு... 

இந்த பதிவு அவரை [னை] புகழ்ந்து எழுதவோ, இல்ல எனக்கும் அவருக்குமான பிணைப்பை அவனுக்குச்சொல்லவோ இல்லை அவரோட நட்பு வட்டங்களின் பார்வைக்காகவோ இதை எழுதலை.. 

சொந்த வாழ்க்கை கஷ்ட்டங்களை தாண்டி சாதிக்க முடியும்ன்னு நினைகுறவங்கல்ல பாதி பேரு அந்த சோகத்தை தோள்ல தூக்கிப்போட்ட்டுக்கிட்டு சுமை தாங்க முடியாம ...  தேம்பிப்போய்டுறாங்க...   

ஆனா அதையெல்லாம் தாண்டி சாதிக்கனும்ன்னு நினைக்குறவங்க மனசால குழந்தையா இருக்க நினைப்பதே இல்லை புவன் எனக்குத்தெரிஞ்சு ஒரு குழந்தை..  

அவன் சோகப்பட்டு பேசி ஒரே ஒரு முறை பார்த்திருக்கேன் [கேட்டிருக்கேன்] அதுவும் ஒரு மொக்கை பிகருக்காக வருத்தப்பட்டான்னு நினைக்கிறேன்...  
[அப்போதும் நான் அவனை கலாய்கவே செய்தேன்.. ]

அவனால எவ்ளோ சோகத்தையும் தாங்கிக்க முடியும் ஆனா, அது அந்த ஒரு நிமிடம் தான் ... அடுத்த நிமிஷம்  தீபாவளிக்கு எடுத்த சட்டையை ஹேங்கரில் மாட்டிட்டு  வந்தவன் போல  நிப்பான்.. 

[அய்யய்யோ மரியாதையா பதிவு எழுதனும்ன்றதுக்காக வார்த்தைக்கு வார்த்தை அவர் இவர்ன்னு எழுத வேண்டி இருக்கே ..இதுக்கு நான் சின்னதா 20 வரில கவிதையாவது எழுதி இருக்கலாமோ...] 

இப்படி தனக்கு பிடிச்ச வாழ்க்கைய தன்னோட ஸ்டைல்ல  சந்தோஷமா வாழத்தெரிந்தவனுக்கு இன்னைக்கு ஒரு வயசு கூடிப்போச்சு... வாழ்த்துச்சொல்ல எல்லோரையும் கூட்டி வைச்சு கூடி கும்மியடிச்சு ட்ரீட் கேட்க ஆயிரம் பேர் இருப்பாங்க ...

ஆனா எனக்கு அவர்[ன்] கொடுக்குற மரியாதைக்கும் அங்கீகாரத்திற்கும் 
நான் என் உடன்பிறப்புகளுக்கும் மேல அவரை[னை]ப் பார்ப்பதால்... அப்படி முடிக்க முடியலை... எனி வே நல்லா இரு புவன் என்னைக்கும் இதே சந்தோஷத்தோட....!   

ரொம்ப சீரியஸா பேசுறதால நான் ரொம்ப பெரிய மனுஷன்னுல்லாம் ஃபீல் பண்ணிடாதீங்க ...! ஆக்ச்சுவலி  அவன்[ர்]தான் என்னை அண்ணன்னு கூப்பிட்றார்..

நான் அவரை அண்ணார்ந்தும் ஒரு அஞ்சு நிமிஷம் கஸ்டப்பட்டு சுத்து வந்தா தான் முழுஷா பார்க்க முடியும்... ஹாஹ ஒரே ஒரு வருஷம் முந்திட்டேன்... அதனால அண்ணான்னு கூப்பிட்றார்... அவ்வ்வ் 

[நீ அன்னைக்கே அந்த பொண்ணை அக்கான்னும் என்னை அண்ணான்னும் கூப்பிடாம இருந்தா நான் பாட்டுக்கு வேற வழில போயிருப்பேன்ல ஹஹஹ் ]   

இத்தனையும் சொல்லியும் நிறைய சொல்லாமல் விட்டதாக திரும்பி பார்க்கிறேன்., இவ்ளோ பழகிய இந்த பவானிக்காரனை நான் இதுவரை பார்த்ததே இல்லை... அவரும் தான்...! 

முகநூல் - இணையம் கொடுத்த இன்னோர் உறவிவன் [ர்]... 

என்றும் நல்லா இரு புவன்... 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா புவன்...! 

Tuesday, May 22, 2012

12 Results 2012 அறிவுரை சொல்வோம்ல நாங்களும் !


   




ஆல் பெயிலான சங்கத்து புது வரவுகளே
வாலிபச் சிங்கங்களே
மங்கை பின்னால் சுற்றி மார்க்கில் கேப் விழுந்த
பச்சைத்தமிழர்களே...

நமக்கெல்லாம் முன்னோடி அண்ணாத்த பில்கேட்ஸ் என்ன சொல்லி இருக்கார்ன்னு பார்த்தா

“ஓஹ் இங்க்லீஸ்தெரியாதா ” விட்றா விட்றா என் இனமடா நீ!

அதாகப்பட்டது “நான் சில சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆகிட்டேன்
என் நண்பன் எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸ் ஆகிட்டான். இப்போ அவன் மைக்ரோ சாஃப்ட் கம்பேனியில மேனேஜரா இருக்கான்

ஆனா நான் மைக்ரோசாஃப்ட் ஓனர் ”
-பில்கேட்ஸ் சொன்னது !

சோ, வாழ்ந்தா கெத்தா வாழனும் இல்லைன்னா செத்துப்போகனும்ன்ற இட்துப்போன பஞ்ச் டயலாக்கை எல்லாம் தூக்கிப்போடுட்டு செகண்ட் ஷோ சினிமாக்கு போய் இருக்குற லீவின் மிச்ச நாட்களையும் எஞ்சாய் பண்ணூங்க ! கழக கண்மணிகளே!


All is well

Sunday, May 6, 2012

அன்னையர் தின வாழ்த்து..???


நெஞ்சம் எரியுது தனலாய்...
நெருஞ்சி முள்ளின் கீறலாய்..

அன்பைத் தேடி ஏங்கி வழிந்த என் உள்ளம்
சென்ற பாதையெல்லாம் வெறுமை வடிந்த பள்ளம்

அன்னை அன்னையென அன்பை மட்டும் எழுதுவதில்
உடன்பாடில்லை எனக்கு...

அனுதினமும் அன்புக்கு ஏங்கி அடுத்த வேலை
உணவுக்காய் எச்சில் காக்கைகளோடு இடமில்லாமல்
படுத்துக்கிடந்த எனக்கு...
தாலாட்டுப்பாட்டுக்கு கேடில்லை

தாயானவள் தரம்தப்பி என்னை
தவிக்க விட்டுப் போனபோது
ஐயிரண்டு வயது எனக்கு

அடித்து துவைத்த அப்பன் வளர்ப்பில்
அடிவயற்றுக்கும் கஞ்சியில்லை.

பெருநகரத்தின் வீதியில்
பிச்சையெடுக்க கைகள் உயர
தன்மானம் தடை சொன்னதால்

கையேந்தி உணவகத்தின் அர்த்தஜாம நேரத்தில்
பத்துப்பாத்திரம் கழுவி காத்திருந்து
பசி நீர்த்தேன்...

அழுது அழுது கண்ணீரில் உப்பில்லை
ஏன் இப்படி பிறந்தேன்? என் மீது தப்பில்லை

பற்றி எரிகிறது தாயே...
பள்ளி செல்லும் பிள்ளைகள் -எல்லாம்
என்னை பக்கத்தில் தாண்டி
கடந்து போகும் போது...!

அன்னையர் தினமென
ஆங்கோர் விளம்பரநாளிதழில்
கண்டேன்...

அண்ணன்கள் பலரும்
அன்னையென்றாலே புனிதமென
மாண்பையே எழுதும் போது

என்னைப்போலான
இருட்டின் கரையில் வெம்பித்திரியும்
பேரின் கதைகேட்க ஆளில்லைபோல...

என் கண்ணீரையெல்லாம்
திரட்டி உண்மை எழுதுகிறேன்...

நீ நல்லவளா கெட்டவளா தெரியாது
ஆனால் நல்ல தாயாய் நீ இல்லை என்று
மட்டும் எனக்குத் தெரியும்

உன்னை குற்றம் சொல்லப்போவதில்லை
நான் - எங்கிருந்தாலும் நல்லாயிரு..
ஆனால் நான் இங்கு நல்லாவேயில்லை...!

தயவுசெய்து
இனி என்போல் யாரையும்
உருவாக்கிவிட்டுப்போய்விடாதே..!

கற்பனை & எழுத்து
-கவிதைக்காரன்

Thursday, May 3, 2012

அட்ரா சக்க: எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள் சிறப்பு பதிவு ( ஒ...

அட்ரா சக்க: எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள் சிறப்பு பதிவு ( ஒ...: எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள் இன்று... இதையொட்டிய ஒரு நினைவு புகைப்படத் தொகுப்பு+ எனக்குப்பிடித்த ஒரு சிறுகதை அழகியலையும்  அறிவியலை...

மாலை நேரம் .... மனதின் ஓரம்,,, வந்தாள் தோழி..




மாலை நேரம் மனம் அமைதி வேண்டி
கொஞ்சம் வீட்டுத்தோட்டத்துப் பக்கம் 
எட்டிப்பார்த்தது மனம்...

நேற்றைய கவலை மூட்டையின்
முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதால்
அச்சுமைகள் கொஞ்சம் மனதை
இறுக்கிக்கிடக்க..

எதேச்சையாய் கைப்பேசித்திரையில்
தோழியவள் பெயர் மின்ன
தூரல் ஏறியது என் வானம்...

அழைப்பை எடுத்து நலம் விசாரித்து
நாட்களின் இடைவெளியை வார்த்தைகளில்
பகிர்ந்தது மனதை இறகாகப்
பறக்கச்செய்கிறது...

ஏனோ அதுவரை அலைபாய்ந்த மனது
அவளின் பேச்சினால் திசைமாறிப்போனது
வழக்கமாய் இருவரும் பரஸ்பரம் நிகழ்வுகளைப்
பறிமாறிக்கொள்வோம்... இன்று..

நான் வளர்க்கும் நாய்க்குட்டியின்
வளர்ச்சியையும் , மீன்களின் செல்லப்
பெயர்களையும், என் தோட்டத்தின் மரங்களையும் 
மலர்ச்செடிகளையும் அம்மா விதைத்த
கீரைச்செடிகளையும்... பற்றி கலந்துரைடாடும் போது

கொஞ்சம் கிணற்றுப்பக்கம் சென்ற போது 
குதித்துக்குளிக்கும் ஆசை என்னை ஆட்டுவிக்க 
பேச்சைத் துண்டித்து நீருக்குள் மூழ்கினேன்..

இயற்கையும் தோழமையும் என்னுள்
இருந்த அத்தனைக்கவலைகளையும் 
மூழ்கடித்தே போனதை நினைத்து 
சிலிர்த்தேன்... 

அவள் என்மீது கோபித்திருப்பாளா தெரியாது... 
இடையிலே துண்டித்தேனென.. 
ஆனால் அதையே அவளிடம்
நான் எதிர்ப்பார்க்கிறேன்...

நாளை சண்டையிடுவதற்காய்
அழைப்பாளென...!

-கவிதைக்காரன்