Thursday, April 28, 2011

சகுனமாய் பார்க்கவில்லை...!!!

விடியல் பொழுதுகளில்
ஈரம் சொட்டும்..
காலைப்பனியோடு கொஞ்சம்
காலார நடை கொள்கின்ற
தருணம்..

புலரும் பொழுதுகளில்
மெல்லனே விரிந்து
வெட்கம் சிந்தும்
பொன்னிற பூக்காடு..

குயில்களா?
குருவிகளாவென
தெரியாது..!
கொஞ்சும் குரலில் தூரத்து
கானம் பாடி...!
எதையோ தேடி..

இருள்...மெல்ல
எதிர் வீட்டு இளைஞனை
கண்ட குமரிப்பெண் போல
பார்வை விளக்கி
நாணத்தால்
மிளிர்கிறது..!

இன்னும் எத்தனையோ
செய்திகளை
தாங்கியே எதிரே கடந்து போன..
பேப்பர்காரர்..

பிள்ளைக்கு பால்
வாங்கசெல்லும்
பெண்மணிகள்..
இவர்களை எல்லாம் கடந்து..
அனுபவித்து வந்தேன்

என் காலையை..

அலுவலகம் புறப்படும் போது..
எதிர்வீட்டுக்காரர்
சகுனம் பார்க்கிறாராம் !
வீட்டுக்குள்
முடங்கியே கிடக்கிறாள்
விதவையான அன்னை..!

இயற்கை இதுவரை
என்னை காலை வேளையில்
சகுனமாய் பார்க்கவில்லை..!
மனைவி இழந்த கணவன்!...
-..............................ராஜா

Saturday, April 16, 2011

சென்னையில் மழை... ?!!.

சிங்கார சென்னை சீண்ட ஆளில்லாமல்
கிடந்த சாலைகளாகிப்போனது ஓர் மழை நாள்
அன்று கப்பல் விட்டு விளையாடிக்கொண்டே
இருந்த சிறுவர்களை கடந்து

காததூரம் ரெக்கை விரித்து பறக்க துடிக்கும்
கைகளை பத்திரமாய் விரித்து
வில்லின் அம்பாய்..சீறிபாய்ந்த..
மழைசாலை இருசக்கரவாகனம்
இரண்டும் என்னிடம் ..
ஆனால் கனவினில் மாத்திரம்..
சென்னையில் இதெல்லாம் சாத்தியம்...



லண்டன் 1990

கல்யாணப் பந்தியை,
எட்டிப் பார்க்கும்,
ஏழைச் சிறுவனின்
ஏக்கத்தை
இன்று...
உணர முடிந்தது...!
*வீடு கிடைக்கும் வரை
26 நாட்களை
ஒரு கெஸ்ட் ஹவ்ஸில்,
மகன்,மகளுடன்
ஒண்டுக்குடித்தனத்தில்
முடங்கிக் கிடந்த
வேளையில்
எங்கள் உணவு
காலையில் ரொட்டி ஜாம்
மதியம் ரொட்டி ஸாஸ்
இரவு ரொட்டி சீஸ்
என்று வகை வகையாய்
நளபாகத்தில்..காய்ந்திருந்தேன் என்று*
1990செப்டம்பர்
லண்டன் சென்று வந்த சித்தியின்
வார்த்தைகளை கல்யாணவீட்டில் கேட்டபோது....

மழை மாலை...

செந்தேனை மேற்திசையில் தெளித்தார்
போல்மேகம் சிவந்த மேகம்...
சில்லென்று காற்று..
சிறிது தென்றலை குழைத்து
அலுவலகம் வெளியே
ஆனந்த மாரிக்கு
தயாராகிட உள்ளிருந்து
வெளிமட்டும் காணும் கண்ணாடிமீது
படிந்த நீர்த்திவலைகளை ரசித்தபடியே..
தயாரானது இந்த வரிகள் ......
-கார்த்திக் ராஜா....

Friday, April 15, 2011

இந்த கவிதை (?) புரியாமல் போன நண்பர்களுக்காக!
நண்பர் ராயபுரம் ரிக்ஸாரவிகிட்ட கொடுத்து சென்னை தமிழில்
மொழிபெயர்ப்பு செய்த இடுகை கிழே.....

சேர வளப் பெருநாட்டின் =நம்ம கேரளா பக்கத்துல
கொற்றைவன் மேலவளக்காட்டின்..=மேற்கு தொடர்ச்சி மலைக்கு அப்பாலிகா
வானுயர்காட்டில் அன்றோர் = கொச கொசன்னு பெரிய காடு
பதிகம் வேட்டைக் = க்ரூப்பா
கணட்டியர் புரவியாலோடி=ஒரு ராசா குதிரைய இஸ்த்துகினு
மாலம் சொற்ற நின்றான் ..=வேட்டைக்கு போய்கினான்

தனித்துவ மானொன்றை = டிப்ப்றேண்டா கீதேன்னு ஒரு மான பார்த்து
தணிக்கையாய் துரத்திட..= சிங்குலா போய் மிங்க்ல் ஆய்கிட்டான்
தடம் மறந்த தலைஞ்சனுமானன்= pathavera மண்டைல புர்ர்யல..
கொற்றவனின் உடைவும் = ராசாவோட வாழும்
மற்றாண்டை புரவியுமாய் = அரேபியால இர்ந்துஇஸ்த்துகினுவந்தகுதுரையுமா

மருதக்காட்டில் தனித்திடலுற்றான் = காட்டுகுள்ள சிக்கிகுனான்

செரப்பைபூ திலுமிய..= இன்னமோ புதுசாகிற பூவா தெரியுற காட்டுல

சோழவளக்காட்டில் தனித்து திரியும் = போம்போது
பொழுதினில் புங்கை மாற வேர்த் = சவுக்கு மரமாண்ட..
திட்டில் விரைவாய் துடித்த சிறகாய் = ரெக்கைய ஆட்டிகினே
நீலாட்டில் குருவியோ ன்றுவேடனொரூ = குருவி ஒன்னு கிடன்துச்சா
துளைத்த அம்போன்றில் = எதோ ஒரு கஸ்மாலம் குருவிக்காரன் அம்புபட்டு

நீர்த்திருந்த உயிரைக் கண்டு உளமதில் = சாவ போற கண்டிசன்ல
துடித்த தலைஞ்சன் தன்க்குறு = மன்சு கேக்காம
வாழ் கொண்டு துளைத்த அம்பை = கைல இருந்த தம்மாதுண்டு கத்திய வச்சி
தழித்தேடுத்து உயிர்த்துடிக் = நெம்பி எடுத்து
கும்பறவையொன்றின் உயிர் காத்த = காப்பாத்தி புட்டான்பா
உயருள்ளலாய் ஆகியதுணர்ந்தே = இன்னாமா வேல செயஞ்சன் தெர்யுமா..

நீர்தாடகை தேடி விரைந்தே..பெயர்ந்தானன் = அப்பாலிகா தண்ணிகாவ
நீரும் கண்டு வழிகாட்டிப்பறவையான = போய் கண்டுக்கினான்
நீலாட்டின் குருவி கொற்றவனின் = அந்த குர்வி சொக்க வலி சொல்லும்பா
உய்வால் நெய்வுரப்பெருகிறது = அத வைசுகினே நம்மாளு எஸ்ஆகிட்டான்போ

அன்டிலோர் கட்டை கடந்திட்ட = அப்பிலருந்து
மன்னான் அன்றிருந்து அம்பேய்திட = மவராசன் உண்டிவில்ல
திடமில்லா தீரனுமாணன். = கைலையே தொடலா
எத்துணையே உயிர் பிரித்து = இத்தன..அனிமல்ஸ கொன்னவன்
விளையான்டிட்ட காட்டில் = தெரியுமா..காட்டுகுள்ள

மனமாற் பெற்றிடவோர் காரணமாய் = மன்சு மாரிடான்பா
அமைந்த அக்குருவி-க்கு மன்னவனின் = அந்த சொக்கா போலச்ச குருவிக்கு
மைந்தைப்போல் ஒற்றைக்கால் இலுப்பை = நம்ம தல-யோட மவன் மாதியே

கால்ல சோர்ஸ் இல்லபா..



-கார்த்திக் ராஜா = இந்த பேஜார் புட்ச்சவந்தான் இத எழுதுனாணமாம்....
சேர வளப் பெருநாட்டின்
கொற்றைவன் மேலவளக்காட்டின்..
வானுயர்காட்டில் அன்றோர்
பதிகம் வேட்டைக்
கணட்டியர் புரவியாலோடி
மாலம் சொற்ற நின்றான் ..

தனித்துவ மானொன்றை
தணிக்கையாய் துரத்திட..
தடம் மறந்த தலைஞ்சனுமானன்
கொற்றவனின் உடைவும்
மற்றாண்டை புரவியுமாய்

மருதக்காட்டில் தனித்திடலுற்றான்

செரப்பைபூ திலுமிய..
சேரவளக்காட்டில் தனித்து திரியும்
பொழுதினில் புங்கை மாற வேர்த்
திட்டில் விரைவாய் துடித்த சிறகாய்
நீலாட்டில் குருவியோ ன்றுவேடனொரூ
துளைத்த அம்போன்றில்

நீர்த்திருந்த உயிரைக் கண்டு உளமதில்
துடித்த தலைஞ்சன் தன்க்குறு
வாழ் கொண்டு துளைத்த அம்பை
தழித்தேடுத்து உயிர்த்துடிக்
கும்பறவையொன்றின் உயிர் காத்த
உயருள்ளலாய் ஆகியதுணர்ந்தே..

நீர்தாடகை தேடி விரைந்தே..பெயர்ந்தானன்
நீரும் கண்டு வழிகாட்டிப்பறவையான
நீலாட்டின் குருவி கொற்றவனின்
உய்வால் நெய்வுரப்பெருகிறது

அன்டிலோர் கட்டை கடந்திட்ட
மன்னான் அன்றிருந்து அம்பேய்திட
திடமில்லா தீரனுமாணன்.
எத்துணையே உயிர் பிரித்து
விளையான்டிட்ட காட்டில்



மனமாற் பெற்றிடவோர் காரணமாய்
அமைந்த அக்குருவி-க்கு மன்னவனின்
மைந்தைப்போல் ஒற்றைக்கால் இலுப்பை
-கார்த்திக் ராஜா

எனக்கென ஒரு.............

எனக்கென ஒரு போர்
எனக்கென ஒரு நிழல்
எனக்கென ஒரு நண்பன்

எனக்கென ஒரு காகிதம்
எனக்கென ஒரு கவிதை

எனக்கென ஒரு காதல்...

ஒரு நிராதரவு
ஒரு நிசப்தம்
ஒரு புறக்கணிப்பு
ஒரு கேள்வி
எல்லோரும் கடந்துப்போகி விட்டார்கள்.

விதர்ப்பம்

நேற்று பார்த்த
அதே பிச்சைக்காரன்
நேற்று கால்களை இழந்தவன்
இன்று கரங்களை இழந்திருந்தான்
அவனுடைய போலித்தனத்துக்கும்
சில்லறைகள் விழத்தான் செய்தது...

விதர்ப்பம்

கழைக்கூத்தாடிச் சிறுமிக்கு
கயிற்றினில் நடக்கும் போது
இல்லாத பதட்டம்
தட்டை ஏந்தும் போது இருந்தது...

மரணம்..!

எதிர் வீட்டுக்காரன் இதுவரை
சண்டையிடாத நாளே இல்லை என்னிடம்

ஆனால் அவன் வீட்டு சுவரில்

கட்டப்பட்டிருக்கிறது என் வீட்டு..

பந்தலின் ஒரு முனைக்கயிறு..

காடேரிக்கும்(செத்தாலும்)

உன் முகம் பார்க்க மாட்டேன்

என சண்டையிட்டு போன..

சித்தப்பா வாயிற்படியில் நின்று

இரங்கல் தெரிவித்திருக்க..

என் மனைவி வளர்த்து வந்த

மஞ்சள் கிரேந்திபூ போன்றே..

கூடை கூடையாய் பூக்களை எடுத்து

பின்னறையில் வைக்கிறான்

அண்ணியின் தம்பி..

அப்பாவின் வேஷ்டிகளை நான் உடுத்தி இருக்கிறேன்

இதுவரை வேஷ்டியே கட்டதெரியாத எனக்கு

அண்ணன்தான் கட்டி விட்டான்.

பெண்கள் கூட்டம் கூட்டமாய்

அமர்ந்து அலுத்து பிதற்ற

காதை பொத்திக்கொள்ளாமல்

அலுத்துக்கொண்டேன்..

ஊரெல்லாம் வந்து சேர

மாலை வரை சாப்பிட ஏதுமில்லாமல்

பட்டினியை நான் இருக்க ..எல்லாரும்

தேநீர்மட்டும் குடித்தவர்களாய்

இடுகாட்டுக்கு பயணமானோம்..

வழியெல்லாம் பூத்தூவி

மேளம்பறை முழங்க..மூச்சுமுட்டி

பசங்கல்லாம் அழ..அவர்களை என் தம்பி

தேற்றிகொண்டிருக்க..

எல்லாம் முடித்து

கருக்கலில் கிளம்பி விட்டோம் வீட்டுக்கு..

வரும்போது வண்டியில் வந்தேன்

திரும்பி போகும் போது வண்டிக்காரன் இல்லை

சரி நடந்தே போகலாமென நினைக்கையில்

உரைத்தது ...எதிரே உள்ள சுவற்றின்

மீது ஒட்டிஉள்ள இரங்கல் சுவரொட்டியில் என் படம்..!


(இப்படியாக இருக்குமோ என் மரணம்..! )

கார்த்திக் ராஜா...

Tuesday, April 12, 2011

ஊர்க் காதலை ஊட்டி வளர்த்தா தன் காதல் தானே வளரும்..

காதலிப்பது எப்படி...,????


நமக்கு தான் காதலும் இல்லை. காதலியும் இல்லை. (யாராவது Application போட விரும்பினால் போட்டு கொள்ளலாம். லேட் பண்ணிட்டு பிறகு  பீல் பண்ணினா நான் பொறுப்பு இல்லை) நம்ம பசங்களுக்காவது இது Use ஆகட்டுமே என்று எழுதுறன். (ஏன்னா ஊர்க் காதலை ஊட்டி வளர்த்தா தன் காதல் தானே வளரும் என்று யாரோ ஒரு சித்தர் சொல்லி இருக்கிறாராம்)
காதலர் தினம் வேற வாறதால நம்ம பசங்களும் பொண்ணுங்களும் கையில ஒற்றை ரோஜாவையும் வலன்ரைன் டே கார்ட்டையும் தூக்கி கொண்டு அலையப் போறாங்க.இப்படி அலையுறவங்களில பாதிப் பேருக்கு கூட காதலிப்பது எப்படி என்ற Basic Knowledge கூட இல்லை. இதனால தான் பல காதல் தோற்றுப் போகுது. அவங்களுக்கு ஒரு  Basic Knowledge ஐ கொடுப்பதே இந்தப் பதிவின் நோக்கம்....



பசங்களுக்கு....


முதல்ல :- ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி....???

அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம்.


  • முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது.
  • இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன்.
சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு...!!!



இரண்டாவது:- அந்த பொண்ணு மேல காதல் வரணும்...!!!



இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. சூரிய நிலா கவிதை படிங்க. கண்டிப்பா காதல் மேல  ஒரு ஆசை வரும்.
அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, காதல் மன்னன். இப்படி ... தானா வரும்...


மூன்றாவது:- அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும். 



நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து "நான் உன்னை காதலிக்கின்றேன்" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு
மீடியா அவசியம்.




நான்காவது:- அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய...???




கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது.
காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா,
சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.



ஐந்தாவது:- இது எதுவுமே ஒத்து வரலனா.......

Please go to Step one




சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவது qualification  சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன






பெண்களுக்கு.....



பையனை பார்த்து லேசா சிரியுங்க. அதுக்கு மயங்கல என்றா வேலைக்கு ஆகாது......

ஊர்க் காதலை ஊட்டி வளர்த்தா தன் காதல் தானே வளரும்..

காதலிப்பது எப்படி...,????


நமக்கு தான் காதலும் இல்லை. காதலியும் இல்லை. (யாராவது Application போட விரும்பினால் போட்டு கொள்ளலாம். லேட் பண்ணிட்டு பிறகு  பீல் பண்ணினா நான் பொறுப்பு இல்லை) நம்ம பசங்களுக்காவது இது Use ஆகட்டுமே என்று எழுதுறன். (ஏன்னா ஊர்க் காதலை ஊட்டி வளர்த்தா தன் காதல் தானே வளரும் என்று யாரோ ஒரு சித்தர் சொல்லி இருக்கிறாராம்)
காதலர் தினம் வேற வாறதால நம்ம பசங்களும் பொண்ணுங்களும் கையில ஒற்றை ரோஜாவையும் வலன்ரைன் டே கார்ட்டையும் தூக்கி கொண்டு அலையப் போறாங்க.இப்படி அலையுறவங்களில பாதிப் பேருக்கு கூட காதலிப்பது எப்படி என்ற Basic Knowledge கூட இல்லை. இதனால தான் பல காதல் தோற்றுப் போகுது. அவங்களுக்கு ஒரு  Basic Knowledge ஐ கொடுப்பதே இந்தப் பதிவின் நோக்கம்....



பசங்களுக்கு....


முதல்ல :- ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி....???

அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம்.


  • முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது.
  • இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன்.
சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு...!!!



இரண்டாவது:- அந்த பொண்ணு மேல காதல் வரணும்...!!!



இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. சூரிய நிலா கவிதை படிங்க. கண்டிப்பா காதல் மேல  ஒரு ஆசை வரும்.
அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, காதல் மன்னன். இப்படி ... தானா வரும்...


மூன்றாவது:- அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும். 



நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து "நான் உன்னை காதலிக்கின்றேன்" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு
மீடியா அவசியம்.




நான்காவது:- அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய...???




கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது.
காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா,
சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.



ஐந்தாவது:- இது எதுவுமே ஒத்து வரலனா.......

Please go to Step one




சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவது qualification  சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன






பெண்களுக்கு.....



பையனை பார்த்து லேசா சிரியுங்க. அதுக்கு மயங்கல என்றா வேலைக்கு ஆகாது....

Friday, April 1, 2011

என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்
என்று ஏன் தோழி என்னிடம் கேட்ட போது
என்னவென்று சொல்வதென தெரியாது
திரு திருவென முழிக்கும்
தருணங்களில் செல்லமாய்
தலையில் குட்டி செல்கிறாள்..
ம்ஹும்..அவளிடம் எப்படி சொல்வேன்..
உன்மீதிருக்கும்
நட்பை வார்த்தையில் விளக்கிட ..
இன்னும் நான்கைந்து முறையாவது தமிழ்
செம்மொழி-யாகிவிட்டிருக்க வேண்டுமே..