Thursday, April 28, 2011

சகுனமாய் பார்க்கவில்லை...!!!

விடியல் பொழுதுகளில்
ஈரம் சொட்டும்..
காலைப்பனியோடு கொஞ்சம்
காலார நடை கொள்கின்ற
தருணம்..

புலரும் பொழுதுகளில்
மெல்லனே விரிந்து
வெட்கம் சிந்தும்
பொன்னிற பூக்காடு..

குயில்களா?
குருவிகளாவென
தெரியாது..!
கொஞ்சும் குரலில் தூரத்து
கானம் பாடி...!
எதையோ தேடி..

இருள்...மெல்ல
எதிர் வீட்டு இளைஞனை
கண்ட குமரிப்பெண் போல
பார்வை விளக்கி
நாணத்தால்
மிளிர்கிறது..!

இன்னும் எத்தனையோ
செய்திகளை
தாங்கியே எதிரே கடந்து போன..
பேப்பர்காரர்..

பிள்ளைக்கு பால்
வாங்கசெல்லும்
பெண்மணிகள்..
இவர்களை எல்லாம் கடந்து..
அனுபவித்து வந்தேன்

என் காலையை..

அலுவலகம் புறப்படும் போது..
எதிர்வீட்டுக்காரர்
சகுனம் பார்க்கிறாராம் !
வீட்டுக்குள்
முடங்கியே கிடக்கிறாள்
விதவையான அன்னை..!

இயற்கை இதுவரை
என்னை காலை வேளையில்
சகுனமாய் பார்க்கவில்லை..!
மனைவி இழந்த கணவன்!...
-..............................ராஜா

No comments: