Friday, April 1, 2011

என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்
என்று ஏன் தோழி என்னிடம் கேட்ட போது
என்னவென்று சொல்வதென தெரியாது
திரு திருவென முழிக்கும்
தருணங்களில் செல்லமாய்
தலையில் குட்டி செல்கிறாள்..
ம்ஹும்..அவளிடம் எப்படி சொல்வேன்..
உன்மீதிருக்கும்
நட்பை வார்த்தையில் விளக்கிட ..
இன்னும் நான்கைந்து முறையாவது தமிழ்
செம்மொழி-யாகிவிட்டிருக்க வேண்டுமே..

No comments: