Thursday, February 16, 2012

நட்புக்காலம் நண்பர்கள் சந்திப்பு...!


      ஞாயிறு அதிகாலை மணி 6:00 டிஜிட்டல் எழுத்துக்களில் அலார ஒலியெழும்ப உறங்கிக்கொண்டிருந்த கண்களை மறைக்க  அணிந்திருந்த கண்ணாடியைக்கழட்டிக்கொண்டே கைகளிலிருந்த புதிய தலைமுறை வார இதழின் அவ்வாரத்தின் பதிப்பை அப்புறப்படுத்தினேன். பயணித்துக்கொண்டிருந்த பேரூந்தின்  புஸ்பேக் சீட்டை நேராக நிமிர்த்தி பக்கவாட்டு ஸ்லைடு டைப் ஜன்னலைத் அன்னிச்சையாக திறந்தன கைகள் .
         புறநகர் தார்ச்சாலையில் மித வேகத்தில் பயணிக்கும் ஓர் அரசு விரைவுப்பேரூந்தின் ஜன்னலோர இருக்கை வழியே..எட்டிப்பார்க்கிறேன் நான்.
            கும்மிருட்டும் வெளிச்சமுமில்லாத புலரும் வெளிச்சத்தோடு சில்லென்று முகம் முழுதும் வியாபித்துக்கொண்டிருக்கும் வடக்குக்காற்றை மெல்ல நாசிகள் சுவாசித்து அனுபவிக்க கண்சிமிட்டிய படியே பயணமாகிறேன் சென்னைக்கு..
        இளம்பச்சை நிற பலகை  ஒன்று சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில் வரவேற்கத்தயாராக இருந்தது. என்னை,,,! இந்த ஞாயிறு நாளின் விடியல் எனக்கு தலை நகரத்தில் தானென்பது 7 நாட்களுக்கு முன்னே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது..!
      ஒரு சிறு ரிவர்ஸ் கியர்…!
இன்று சனிக்கிழமை:-
       இரவு மணி 7:00 திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வாசல் இருட்டுக்கடையில் அல்வா தீர்ந்தது என்பதை அங்கே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஊழியர்கள் ஓய்வாக அமர்ந்து இருந்ததிலே கணித்துவிட்டாலும், மனம் உணர்ந்ததை சில வேலைகளில் கேட்காமல் போகும் வார்த்தைகள் “அல்வா இல்லையா பாஸ்“ என்க –
 “முடிஞ்சதுங்க”.. எனப்புன்சிரிப்புடன் வெளிப்பட...
            அடுத்த “வெளிச்சக்கடை”யான சாந்தி ஸ்வீட்ஸில் அல்வா பார்சல்களை வாங்கிக்கொண்டு பைக்கை உதைக்க ரயில் நிலையம் நோக்கி விரைகிறேன். செந்தூர் எக்ஸ்ப்ரஸில் 9:20க்கு சென்னை செல்ல டிக்கெட் வாங்கிவிட்டு ப்ளாட்பாரத்தில் காத்திருக்க செல்போனில் நண்பனிடமிருந்து அழைப்பு..கடந்த ”பொங்கல் அன்று செந்தூர் எக்ஸ்ப்ரஸில் வந்தேன். மதியம் தான் சென்னை வந்தேன்: என்றான்.  
           அடடா! நாளை ஒர் நாள் சந்திப்பிற்காக சென்னை செல்ல இருக்கிறேன் அதில் பாதிநாளை இரயிலிலேயே கழிக்கவா! அவ்வ்வ் யோசனையின் முடிவில் மீண்டும் க்யூவில் நின்று உடனே! டிக்கெட்டை கேன்சல் செய்து வண்ணார்பேட்டை பைபாஸ் சாலைக்கு வந்து மதுரை பேரூந்தை பிடித்து மதுரையிலிருந்து சென்னை விரைவுப்பேரூந்துக்குத் தாவி… ஒரு சிறிய முன்னெச்சரிக்கையற்ற பயண ஏற்பாடுகளின்  பெயரில் இப்போது சென்னை விரைந்து கொண்டிருக்கிறேன்…!   
     இதனை வாசிப்போர் கேட்கலாம் முன்னாடியே டிக்கெட் போட்டு தயாராக இருந்தால் இதெல்லாம் தேவையா என்று, அடப்போங்க பாஸ் அதெல்லாம் செய்துட்டு தான் வந்தேன் அந்த அல்வா வாங்கிய கேப்பில் ஒரு ட்ராபிக் சிக்கலில் சின்னாபின்னமானது...என் அத்தனை ப்ளான்களும்…
 
   சென்னை நெருங்க இன்னும் நேரம் பிடிக்கும் ஏற்கனவே மதுரையில் மிகத்தாமதமாக பேரூந்து ஏறியதால் அதுதான் சாத்யமென்பது முன்னாடியே தெரிந்ததால் இன்னும் கொஞ்சம் கூட உறங்கலாம்.. ஆனால் மடிக்கணிணியில் கொஞ்சம் மேய்ந்துவிட்டு.. மீண்டும் புஸ்பேக்கை தாழ்த்தி உறங்கச் சென்றேன்.
     கொஞ்சம் நினைவுகளை பின்னோக்கி அசைபோடத்துணிந்தேன்… பயப்படாதீங்க ரொம்ப ரம்பமால்லாம் இருக்காது…!
          FACEBOOK – ஒரு மாயவலை மந்திரக்குகை அப்படி இப்படின்னு திட்டுவோர் ஆயிரம் பேர் இருக்க [ லட்சம்,கோடிகளில் இருக்கிறார்கள் நம்ம லிஸ்ட்ல இல்லாதவங்களைபற்றி நமக்கென்ன பேச்சு ஹிஹி அதான் ஆயிரத்தில் முடிச்சுக்கிட்டேன்.]


      முத்தான நண்பர்களா எனக்கு கிடைத்தவர்களில் பலரில் ஒரு குழுவினர் சென்னையில் குழுமுவதன் சந்திப்பே  இந்த ஞாயிறின் நிகழ்ச்சி [நாள் 22/01/2012 ].
   ஆமாங்க… முகநூலில் என் மதிப்பிற்குரிய நண்பர் ஹமீதண்ணா என்றழைக்கப்படும் பட்டுக்கோட்டைக்காரர் திரு,ஷேர்கான் ஹமீது அவர்கள் விடுமுறையில் தாயகம் திரும்பி இருந்த படியால் நட்பின் நிமித்தம் அவரை நான் சந்திக்க ஏற்பாடு. அவர் இருப்பதோ சென்னையில் நான் இருப்பதோ நெல்லையில் பின் சென்னைக்கு ஏனப்பா போறீங்க என கடுப்பாகாதீங்க…. சாதாரணமா நாங்கமட்டும் சந்திக்கவேண்டிய நிகழ்ச்சியை ஏன் முகநூல் வட்டத்தில் ஒன்றி இருக்கும் நண்பர்களோடு நிகழ்த்திவிடக்கூடாதென்று ஒரு சின்னப்பொறி கிளம்ப படைகள் தயாரானது.. எல்லோரும் குழும ஒரு சரியான இடமாக சென்னை தேர்வானது… நகர சந்தடிகளுக்கு மத்த்யிலும் நட்பு வளர்க்கும் சென்னைவாசிகளின் நட்பு முகத்தை ஏற்கனவே சென்னையில் உப்புக்காற்றுக்கு மத்தியில் மனம்குளிர அனுபவித்த முன்னோர் நிகழ்வும் அங்கேயே அமைந்திட்டதால்… பயணம் வணக்கம் வாழ வைக்கும் சென்னைக்கு…!
     வாடா மச்சான் சென்னைக்குன்னதும் என்ன விசயம் என்று கூட கேட்காமல் வண்டி ஏறும் நண்பன் 2 பேர் இருந்தார்கள் என் லிஸ்ட்டில்… அந்த அளவுக்கு உரிமையும் நட்பும் ஒருங்கே சேர்ந்த இரட்டை நண்பன்கள்  தமிழரசனும்,ரமணாவும் பாண்டிச்சேரியில் எம்.ஜி.ஆர் மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் இழுத்து போர்த்தி தூங்கும் [அடடா உண்மைய சொல்லிட்டேனோ?] முழித்துப் படித்துக்கொண்டிருந்த எம்.பி.பி.,எஸ் புக்கை பரண் மேல் போட்டுட்டு இரவோடு இரவா பஸ் ஏறினார்கள் சென்னைக்கு.. பயபுள்ளைங்க ரெண்டு பேரில் தமிழுக்கு காலில் அடிபட்டு ஃப்ராக்சர்.. ஆனாலும் அதைகாட்டிக்காமல் சந்திக்கப்போற சந்தோஷத்தில் வழக்கம் போல எதோ ஒரு பொய் சொல்லிட்டு ஹாஸ்ட்டலைவிட்டு [அநேகமா பாட்டியை கொன்னுறுப்பானுங்க ] கிளம்பிச் சென்னைக்கு வந்தே விட்டார்கள் நடுஇரவு 2 மணிக்கு….

        இந்த சந்திப்பில் மூளையாக செயல் பட்ட மாஸ்ட்டர் ஆஃப் பூஸ்டர் பேக் எங்க கிரி மாமா.!  சும்மா சொல்லக்கூடாது சந்தோஷத்தில் தலைகால் புரியாம மொட்டைத்தலையில் சந்தனம் வைச்சது போல உச்சிக்குளிர்ந்துபோனான். வருவோர் அனைவருக்கும் சென்னையின் பிரம்மாண்டமான வாட்டர் டாங்க் எல்லோருக்கும் தெரியுமே கலைஞரின் புதிய செக்கரட்ரியேட்.. அதன் பின்புறம் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலான  “ஹோட்டல் பிரியதர்ஸிணி இண்டர் நேஷனல்” –ல [ஸ்டாப் ஸ்டாப் பொய் சொல்லுங்கடா ஆனா ஏக்கர் கணக்குல சொல்லாதீங்கன்னு யாரோ திட்றது கேக்குது மச்சான் கதைய உண்மையான ரூட்டுக்கு மாத்து…]  அவ்வ்வ் கண்டு பிடிச்சுட்டீங்களா!


      சரி சரி உண்மைய சொல்லிட்றோம் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பின்னாடி இருக்கும் மேன்ஷன்ல ரூம் புக் பண்ணி எல்லோரையும் ஒருசேர இணைத்து சந்திப்பில் எந்த பிசிறுமில்லாமல் ப்ளான் போட்டமாதிரி [ஆமா தங்க மலைய கொள்ளை அடிக்கப்போறோம் ப்ளான் போட்றதுக்கு… ] நல்லபடியா நடக்க துணையா நின்னான் கிரி என்கின்ற கிரிதரன்.
     அடுத்ததா முக்கியதளபதி இவரைச்சொல்லலைன்னா எப்படி இவருதான் இவருதான் அவரு.,, ஹாஹா! சென்னை அசோக் நகரில் சாதுவா முகத்தை வைச்சுக்கிட்டு திரியும் அம்பி அந்நியன் ரெமோ… எல்லாருமே ஒரூ ரூபத்தில் வந்தவன் …திருநெல்வேலிக்காரன் என் உடன்பிறப்பு.. பேரு சதீஷு…! ஆள் பார்க்க களையா இருக்கான்னு இவன்கிட்ட  “ஸ்பான்ஸர்” என்னும் பெரிய பொறுப்பைக்கொடுக்கலாம்ன்னு பார்த்தோம்… சிரிச்சே மழுப்பிட்டான் பயபுள்ள!

.
            அடுத்த மாஸ்டர் ப்ளாஸ்டர் கோவை சிறுத்தைகுட்டி.. பவர் ஸ்டாரின் க்ளோனிங் எங்க  ஆருயிர் நண்பன் அன்புடன் சரண்  என்றழைக்கப்படும் சரண்ராஜ். கோடி ரூபா கொடுத்தாலும் இப்படி ஒரு நண்பன் கிடைக்க மட்டான்.. நாம் புரிஞ்சுக்க ஆயிரம் பேர் சுற்றி இருந்தாலும் நம்மை புரிஞ்சுக்க ஒரு ஜீவனைத்தான் நிதம் தேடுகிறோம் … இவன் அப்படிப்பட்ட நல்ல நண்பன்.. ஆனா தன் கஸ்டத்தையோ கவலையையோ முகத்தில் 000.0009 % கூட காட்டமாட்டான். அவனுக்கு சனிக்கிழமை சாயங்காலம் போன் போட்டு வர்ரியா மச்சான்னது… எங்க இஸ்கூல்ல லீவெல்லாம் தரமாட்டாங்கன்னு எல்.கே.ஜி பையன் ரைம்ஸ் சொன்னமாதிரி சொன்னவனை கொன்னேபோடுவோம் என்று அன்பு மிரட்டல் விட்டதும் அன்புடன் சரண் அட்டண்டென்ஸில்..

       மேலே சொன்ன ஹிட் லிஸ்ட்டில் சரண்,கிரி, சதீஷ்,நானும் [அதாங்க கார்த்திக் ராஜா-வாகிய நானும் …ஒரு விளம்பரம் தான் ] முன்பே கடந்த மே-யில் சென்னையில் சந்தித்திருந்தோம்…! தமிழ் ரமணா அப்போது வர முடியாததால் இப்போ ஆஜர். சரி நம்ம பார்த்த முகங்களையே பார்த்து சென்னையில் மிரண்டது போதும் புதுஷா யாரையாவது பார்த்து கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கலாம்ன்னு நண்பன் பிரகாஷ் [prakash sona] –க்கு டயல் பண்ணதும் … தலைவர் அண்ணன் கல்யாணம்ன்னு சரணை விட மோஷமா பிஞ்சுக்குழந்தை போல காரணம் சொல்றாரு,.. [ ஆனா பாருங்க இந்த சந்திப்பில் முதல் ஆளா வந்து அவன் தான் காத்துக்கிடக்கப்போறான்னு பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் எனக்கு அது வரை தெரியவே இல்லை ] சிம்புளா ஃபேஸ்புக் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வர்ராங்கன்னு ஒரு பிட்டு போட்டேன்.. அண்ணாச்சி ஆஜர்.
     [ஆனா பாருங்க புதுஷா யாரையாவது பார்த்து சந்தோசப்படலாமேன்ற எண்ணத்தில் மறுபடியும் ஏமாற்றம்… தான் மிச்சம் பயபுள்ள மிசையும் தாடியுமா டி.ஆர் யூத்தா இருந்தது போல எண்ட்ரி கொடுத்தாருன்னு நான் இங்க ஏதும் சொல்லல மச்சான் ]   

                 
      அடுத்ததா… கோயம்புத்தூர்ல இருந்து கிளம்பிய இன்னோர் புயல் சுரேஷ்.. முக்கியப்பெரும்புள்ளி சென்னைக்கு வரமுடியுமா சண்டேன்னு சொல்லுறதுக்காக  சென்னைன்னுதான் சொன்னோம். அதுக்குள்ள சென்னை வந்துட்டு என்ன மேட்டர்ன்றார்… நண்பர்கள் சந்திக்கிறோம் என்றதும் ரொம்பவே சந்தோஷப்பட்ட பெரிய மனுஷர் இவர்.. சந்தோஷங்களின் போது எப்போதும் உடன் இருக்க வேண்டியவர் ஆனால் பலமுறை மிஸ் ஆனதால் இந்த முறை முன்கூட்டியே ஆஜர். இன்னோரு உப செய்தி என்னான்னா இவரு என் மூத்த உடன்பிறப்பு..!
    சரி ….. தொண்டர் படை ரெடி ஆகிட்டு தலைவரை எங்க இன்னும் காணும்ன்னு யாரோ காசு கொடுத்தமாதிரியே கூவுறாப்ல போல அட யாருப்பா அது… [நானில்லீங்கோ நானில்லீங்கோ] அட ஆமால்ல தலைவர் காலை ஆறு மணிக்கு கோயம்பேடு வந்து இறங்கிவிட்டார் ஷேர்கான் ஹமீது. அங்கிருந்து ஒரு மினி பயணம் ஆட்டோவில் தொடர [இன்றைய நாள் முழுதும் ஆட்டோ பயணமாகவே அமையுமென அவர் நினைத்துப்பார்த்திருப்பாரான்னு தெரியலை.. ஹஹ] வாட்டர் டேங்க் [சென்னையின் புதிய[?]  தலைமைச்செயலகம் அமைந்த ஏரியா பெயர் சிம்ஸன் –ன்னு யாரோ சொன்னாங்க ஆனாலும் எனக்கு அதை வாட்டர்டாங்க் என்று சொல்வதே பிடிச்சிருக்கு..ஹிஹி ]  அருகமைந்த சந்துகளில் பிரயாணப்பட்டு காலை களேபரங்களில் இடம் புடிச்சிக்கிடார்.. அவ்வ்வ் இனி நான் மட்டும் தான் மிஸ்ஸீங்….!

         இதுவரை இல்லாத உணர்விது இதயத்தை துண்டாக்கும் நினைவிது மனதினை மண்ணோடு புதைத்திடும் பெண்ணை நம்பாதே….! யுவனில் இசையில் என் மொபைல் இசைக்க… நினைவுகளிலிருந்து விழித்து கால் அட்டண் செய்தால் சதீஷ் “எங்க மக்களே வந்துகிட்டு இருக்க திண்டிவனம் தாண்டிட்டியா”.
 “தெரியலை சிட்டி அவுட்டர்ல தான் இருக்கேன்னு நினைக்குறேன்”.
 “மருவத்தூர் தாண்டினதும் அப்போ போன் செய்”.
 “ம்ம்ம்”. எல்லாரும் வந்துட்டாங்களா?”.
ஹமீதண்ணா,ரமணா தமிழ்-லாம் வந்துட்டாங்க நானும் கிரியும் நைட்டே ரூம்க்கு வந்துட்டோம். தமிழ் ரமணா வரமாட்டானுங்கன்னு நினைச்சேன். நைட் 2 மணிக்கு வந்து ஒரே ஆட்டம் ஸ்கைப்பில் எல்லாருக்கும் பேசினோம். [அயல்நாட்டு பட்டாளம்].
“சரண்,சுரேஷ் வந்தாச்சா?”.
“ரெண்டுபேரும் கோயம்பேடு வந்துட்டான்க.. இப்போ வந்துடுவாங்க”.
“அடப்பாவிகளா எல்லாரும் முந்திக்கிட்டீங்களேடா அவ்வ்வ் சரி சரி நான் சீக்கிரம் வர்ரேன்”.
“சீக்கிரம் வாடா கர்ர்ர்ர்ர்ர் ” மைல்டா கடுப்புடன் போன் கட் ஆகிறது.
     மெல்ல மெல்ல அப்படி இப்படின்னு சென்னைக்குள் நுழைந்துவிட்டேன். கோயம்பேடு வளாகம் பழைய எனது அலுவல் பயணங்களின் நாட்கள் கொடுத்த தைரியத்தில் புதியவன் என்ற அடையாளம் கொடுத்து என்னிடம் வாலாட்ட பயந்து அதே கம்பீரமாக வரவேற்கிறது…     
         ஆட்டோ பிடித்துச்செல்லலாம் என்ற நினைவு அப்போது எழவே இல்லை. அக்வாஃபினாவில் [?] (வெளியூர்பயணங்களில் இந்த அக்வாஃபினா அக்கப்போர் தவிர்க்க முடியாததாகிறது குடிநீரை வீணாக்காதீர்! என எங்கேயோ வாசித்த எழுத்து கண்முன் வந்து போகிறது) முகத்தை கழுவி கொஞ்சம் ஃப்ரெஷ் ஆனது வாட்டர் டேங்கிற்கு அடுத்த பஸ் ஏறும் போது டிஜிட்டல் டைம் 11 – ஆகி இருந்தது… 
     அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் வேதாகமப்புத்தகங்களைச்சுமந்த சென்னை வாசிகளைக்காண முடிந்தது.. பேரூந்தில்… வழக்கமாக பள்ளிக்கூட கல்லூரி இளையோர்களால் பிரசவ காலபெண்ணாகும் பேரூந்து கொஞ்சம் பேப்பர் மூட்டைகல் இல்லாமல் மெல்ல ஊர்ந்து அரையடிக்கு ஒருமுறை வரும் சிக்னல்களை கடந்து என் பொறுமையையும் போன்கால் களையும் சோதிக்க… கடுப்பின் உச்சத்தில் நேரா செம்மொழிப்பூங்காவிற்கே வந்து விடு என்று நண்பர்கள் சொல்ல..
     மச்சான் இன்னும் குளிக்கலைடா எப்டிடா!?  என பஸ்ஸில் பக்கத்தில் இருப்பவரைக்கூட கவனிக்காமல் நானும் சொல்ல [கடுப்பேத்துறார் மை லாற்ட்] சரி நான் வெயிட் பண்ணுறேன் பசங்க போகட்டும் என கிரி சொல்ல எனக்கும் அதுவே சரியாகப்பட்டது…!

    இன்னும் ஐந்து நிமிடங்களில் நிறுத்தம். அதைக்கடந்து சுரங்க நடை பாதையில் சில நிமிடங்களை செலவழிக்க நான் கிரி அலுவலகம் முன்னே
ஒரு சின்ன தொலைப்பேசி உரையாடலுக்குப்பின்… அவசர அவசரமாக கிளம்பி கிரி ஸ்ப்ளெண்டரை உதைக்க அடுத்த சில நிமிடங்களில் சென்னை செம்மொழிப்பூங்கா இன்னும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளினால் வீழ்த்தப்படாமல்… வலுக்கட்டாயமாக காங்ரீட் காட்டுக்குள் இயற்கையின் வேர்களை இறுகப்பிடித்தபடி வரவேற்கிறது… கண்ணாடி கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஆறறிவு ஜீவராசி ஒன்று எத்தனை பேர் என்று குரைத்தது.
    இரண்டு பேர் என நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ல காமிரா இருக்கா? என எக்ஸ்ட்ரா குரைத்தலுக்கு இல்லை என ஹாண்டிக்காமை மறைத்தபடி அரிச்சந்திர அரிதாரம் பூச.. வள்வள் வழிவிட்டது..!
     சென்னை வீதிகளில் சுற்றித்திரிந்த காலத்தில் அதிக பசுமையடர்ந்த சில இடங்களில் வீசும் அதே இளஞ்சூரிய ஒளி இலைதழைகளோடு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் ஓர் வாசம் … சற்று அதிகமாகவே வீச.. [என்னாப்பா ஓவரா ரைமிங்கா பேசிக்கிட்டே போற-ன்னு சத்தம் கேக்குது என்னங்க பண்ண கவிதை எழுதுவான்னு ஃபார்ம் ஆகிட்டோம் பின்ன இப்படில்லாம் எழுதலைன்னா நம்பித்தொலைய மாட்டாங்களே  கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்க ப்ளீஸ் ].  ஒரு இனம்புரியாத உற்சாகத்தில் நானும் கிரியும் கருப்புச்சட்டைகளோடு  கண்களால் நண்பர்க்கூட்டங்களை துலாவ… வழக்கமாக [Chennai chellamz meeting] சந்திப்பு நிகழும் இடத்திலே
மனிதர்களின் முன்னோர்கள் அனைவரும் ரொம்பச்சாந்தமாக அமர்ந்திருக்கிறார்கள்.

           அவ்வளவு அமைதியாக அமர்ந்திருந்ததன் சூட்சமம் அதற்கு முந்தைய நிமிடங்களில் நடத்திய ஏதாவது களிப்பாட்டத்தில் முடிவாக இருக்கலாம் என்பதை நான் கணித்திராமல் இல்லை. தூரத்தில் வரும்போதே அடையாளங்கண்டுகொண்டனர்.  உற்சாகக்குரலெலுப்ப… ஆரம்பமானது எங்களின் சந்திப்பு.
    அடுத்தடுத்து அறிமுகம் கைகுலுக்கள் ஹாய், ஹலோக்கள் … நலம் விசாரிப்புகள் என்று ஆரம்பிக்கும் வழக்கமான ஆட்கள் இல்லையே நாம். ஹாஹா?
         ஆம்.. ஆட்டத்தின் தொடக்கமே கமல் வகையறாக்கள் போல கட்டிப்புடி வைத்தியங்கள். எல்லோரும் ஒருவரை ஒருவர் தளுவி அன்பின் அறிமுகங்களும்  முகநூல் கம்மெண்டுகளும் போலவே அதே அராத்து கேரக்டரை கொஞ்சமும் குறைக்காமல் ஆனந்த கூத்தாடினோம்… ! அந்த மகிழ்ச்சி காமிரா கண்களின் க்ளிக்குகளில் பரிசுத்தமாக படம்பிடிக்கப்பட்டது…
        நான் வரும் முன்பே ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகி இருந்ததால் என் வரவுக்காக காத்திருந்த பொழுதுகளும் அத்துடன் கரையேற… சிரித்து மகிழ்ந்து. செல்போன் சிணுங்கல்கள் துறந்து.. அத்தனை அன்யோன்யமாகிப்போனோம்… ஒன்பது பேரும் அமந்திருக்கும் போடு இடைவெளிகள் எல்லாம் நட்பாலும் பாசத்தாலும் சகோதரத்துவத்தாலும் நிரப்பப்பட்டிருந்தது…


     முகநூல்:-  அந்த கற்பனை மிகுந்த ஜனசந்தடி வீதிகளில் தனியாளாக கணிணி முன் அமர்ந்து கொண்டு எங்கெங்கோ யார்யாரோவாக பிறந்து ஓர் மின்னஞ்சல் முகவரியில் அடையாளப்பட்டுக்கொள்ளும் புரொஃபைல் பிக்சர் மனிதர்களுக்குள் இருந்த உணர்வுகளான நட்பு, பாசம், இன்பம், துன்பம், பகிர்தல், கோபம், வருத்தம், வாடாபோடா-க்கள் எல்லாம்
வெறும் வார்த்தைகளாகவே மரித்துச்சாகாமல் அதற்கு உயிர் கொடுக்க அமைந்த இந்த சந்திப்பினால் என்ன நல்லது நாட்டுக்கு நிகழ்ந்தது என்று யாரும் க்ராஸ் கொஸ்டினோடு படித்துக்கொண்டிருந்தீர்களானால் கண்டிப்பா இது உங்களோடு பகிர்ந்துக்குற, அல்லது நீங்க எதிர்பார்க்கும் விஷயங்கள் அடங்கிய சந்திப்பு குறிப்புகள் அல்ல..
 

        காலை நேரம் மதியம் என அழைக்கப்பட வேண்டிய நிர்பந்தத்தை தொட.. வெயில் இன்னும் கொஞ்சம் மெறுகேற்றி வேனில் ஐந்த ஆரம்பிக்க அனைவரையும் அறிமுகப்படலம் செய்யும் வீடியோ எடுக்கலாம் என்ற எண்ணம் மேலெழும்ப நான் ஒவ்வொருவரையும் முன்னிறுத்தி அவர்களைப்பற்றி ஜாலியா ஒரு விமர்சனம். []அந்த வீடியோ எதிர்பார்த்த அளவு ஒலித்தரமானதாக இல்லாமல் போனதால் பகிரமுடியாமல் போனது [] திருவாளர் ஹமீது ஒரு தேஜஸ் –ஆன மனிதர் இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது இருக்கும் அதே கௌரவமும் மதிப்பும் அவர்மீது எப்போதும் உண்டு. அவரைப்பற்றி ஆரம்பித்து.. அடுத்து ரேபான் கூலரோடு திரியும் கிரி … கோவை சரண் வால்பாறை கருஞ்சிறுத்தை- ஆஸ்ரம சாமியார் தமிழரசன் – சேட்டு வீட்டுப்பையன் சதீஸ்-  வயசுல மூத்தவன் சுரேஸ்- காதல் மன்னன் ப்ரகாஷ் சோனா – டாக்டர் வசூல்ராஜா ரமணா எம்,பி.பி.எஸ் – என வரிசையாக கலாய்த்து தள்ளி பின் என் நேரம் [எல்லாம் நேரம்….டா இந்த மாடுலேஷனில் படிக்கவும் ]. சதீஷால் கலாய்க்கப்பட்டு… செம்மொழிப்பூங்காவே கைகொட்டும் ஆரவாரத்துடன் இளமைக்கூட்டத்தில் கேலிகளும் கலாட்டாக்களுக்குமா பஞ்சம் வரப்ப்போகிறது … [இந்த இளமை கூட்டம் என்ற வார்த்தையை பொத்தாம்பொதுவாக எடுத்துக்கிட்டா அது என் தப்பில்ல ] அங்கிருந்து அடுத்த பயணம் .

        கிரியின் ஸ்ப்ளெண்டரில் நான் அமர்ந்துகொள்ள மற்றவர்கள் இரு ஆட்டோ பிடித்து EA [EXPRESS AVENUE] –வாசலைச்சென்றடைந்தோம். நகரத்தின் பரபரப்பில் அவசர மனிதர்களின் எந்திர வாழ்க்கை இயந்திரங்களை கட்டிக்கொண்டு சந்தோஷமடையும் இடமாக பசுத்தோல் போர்த்திய வானளாவிய அகலக்கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு எதிரே வரிசையாக நிறுத்தப்படும் பைக்குகளின் எண்ணிக்கையில் ஒன்றை அதிகப்படுத்திவிட்டு எல்லோருமாக ஈஏ-வில் குழுமினோம்…!
     சத்தியமா பத்து பைசாவுக்கு ஏதும் வாங்கப்போறதில்லைன்னு எங்களுக்கே தெரிந்தாலும் அத்தனைக்கடைகளுக்கும் ஏறி இறங்கினோம்.  
                     நகரத்தின் பல பரிமாணங்களையும் அடையாளமாக ஏற்றுக்கொண்ட இன்னோர் விசயம். இங்கே காண நேர்வதை தவிர்க்கவே முடிவதில்லை. சென்னை உலகமயமாக்கலால் எவ்வளவு முன்னேறியும் சகமனித நேசத்தில் எவ்வளவு பின்தங்கியும் இருக்கிறது என்பதை பறைசாற்றும் விதத்தில் அத்தனை பேரும் தத்தம் விளையாட்டு, கேளிக்கை, உணவுத்தேவை, விருப்பங்கள், தெரிவுகள் என தன் சார்ந்த மக்களினூடாக மட்டும் சிரித்துப்பேசி மகிழ்ந்து கொண்டார்களே தவிர ஃபுட் கோர்ட்டில் பக்கத்து ப்ளேட் உணவை வாங்கும் நபர்களுக்கிடையேயான பரஸ்பர புன்சிரிப்புகளைக்கூட காசுகொடுத்தால் கார்டில் தேய்த்துக் கொடுப்பார்கள் போல நடந்த் கொண்ட இடமாகப்பட்டது..!
     நமக்கு வந்த வேலைய மட்டும் பார்க்கும் பழக்கம் இல்லாததால் இதையெல்லாம் கூட நோட் பண்ணிக்கிட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்…! எங்களுக்கும் அடுத்த தேவை உணவு என்றாகப்பட… ரமணாவின் EA ப்ளாஸ்ட்டிக் கார்டுகள் ஸ்பான்ஸரின் காகிதநோட்டுக்களால் நிரப்பப்பட.. கொல்லப்பட்ட கோழிகள் விதவிதமாக ஆர்டர் செய்யப்பட்டது… 
      அவசர யுகத்தில் நிகழ்ந்த அருமையான சந்திப்பில் முக்கியத்துவம் வாய்ந்த நேரம் இந்த உணவுப்பறிமாறல் நேரம்…! ஆம் ! உங்கள் ப்ளேட் அன்பானவர்களால் நிரப்பப்படும். உங்கள் கண்களால் பக்கத்திலிருப்பவருடன் நல்லா சாப்பிடுங்க என பேசிக்கொள்வீர்கள். சொந்த பந்தங்கள் திருமணங்களில் முறைப்பெண் இருக்கும் வீட்டில் நம்மை விழுந்து விழுந்து கவனிப்பார்களே அது போல [அதான் வட போச்சே பின்ன என்ன பேட்டா சாங்கு…! அவ்வ்வ் புரியுறவங்களுக்கு புரியும்பா! ஹாஹா]    ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வோம்! இவையெல்லாம் அந்த ராஜ்தானி ப்ளாக் முன்னிறுந்த டைனிங் டேபிளில் அரங்கேறியது…
[இதை எழுதும் போது மணி மதியம் 1.00 அவ்வ்வ் பசிக்குது :’( ] இந்த நாளின் பாதின் நேரம் இத்தனை விரைவாக கடந்து போகுமென்பதை நினைக்கையில் ஒரு பக்கம் வருத்தம் மேலோங்க அட..! இருக்கும் நேரத்தில் இன்னும் சந்தோசமாக இருக்கனும் என்ற எண்ணம் அதை மேலோங்க சாப்பாடு முடித்து. ஒரு ரவுண்ட் அடித்தோம்.


        ஒரு சுற்று முடிக்கும் தருவாயில் ரமணாவின் நண்பர்கள் இருவர் EA-வில் எங்களோடு ஐக்கியமாகிட எஸ்கேப் –அவென்யூவில் அடுத்தகட்டமாக போட்டோக்ளிக்ஸ் முடித்து…! EA- விட்டு வெளியேற.. மாலை நெருங்கி இருந்தது.. மீண்டும் அறைக்கு திரும்பவும் கொஞ்சம் ஓய்வும் [பிரயாணத்தினால் கூட்] தேவையாகி இருந்தது… அட பழமொழில்லாம் மறந்து போகுதே…! ஆங்…உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டாமெ..! ஹஹ்
     இந்த சந்திப்புகளில் மிகவும் முக்கியப்புள்ளி ஒருவர் இல்லாமல் போனது கூட எங்களுக்கு பெருத்த பின்னடைவே…


ஆம் ! நண்பர் பிரபாகரன் கிருஷ்ணா..
     மிக அதீதமாக இந்த சந்திப்பின் பின்புலமாக இருந்தவர் இவர் என்றும்சொல்லலாம்! அடுத்தமுறை ஜமாய்ச்சுடலாம் நாட்ஸ் @நாட்டாமை
      அவரைப்பற்றிய பேச்சுக்களும் இடையிடையே இல்லாமலில்லை.
இன்னுமோர் முக்கியஸ்தன் இருந்தான் ஆனால் இல்லாமல் இருந்தான் எங்களோரு பிரவீன் ராஜா.. எங்கள் அனைவரின் ஆறுயிர் நண்பனென்றவன். வீட்டுக்கு மூத்தபிள்ளைபோல் எங்களுக்கு இவன்..


          பின் ஆட்டோ நகரத்துவங்கியது இம்முறை சதீஸ் கிரியுடன் தொற்றிக்கொள்ள நாங்கள் [நான் ஹமீதண்ணா, சுரேஷ் – ரமணா.சரண்,சோனா,தமிழ்   ] மூன்றுச்சக்கரவாகனத்தில்… முகநூலின் சந்தோசமான பொழுதுகளை அசைபோட்டபடி அறையை அடைந்தோம்..
      அன்று 22-01-21012 நாள் ஞாயிறு மறுநாள் திங்கள் எனக்கு பிறந்த நாளாக அமைந்தது எதேச்சையானது என்பதே உண்மை ஆனால் திட்டமிட்டபடி கொண்டாட்ட களேபரங்களை நிகழ்த்திவிட்டார்கள்… அவ்வ்வ்வ்வ்…
       நண்பர்கள் நாங்கள் கடந்த வருடங்களாக இளைப்பாறும் குழுவான FRIENDZHOOD.CLUB – சார்பாக பிறந்த நாள் கேக் வெட்ட வைத்து ஜமாய்ச்சுட்டாங்க… கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு அண்ணன் தம்பிகளோடு மட்டுமில்லாமல் நண்பன்களோடு இணைந்திருந்த ஆனந்த கண்ணீர் வராமல் சுய கௌரவம் காக்க போராடிய பொழுது அது.. ஹஹ ஆனால் வார்த்தை உடைந்து ஆரத்தளுவிக்கொண்டது உச்சம்.. !
   வாழ்த்துப்பாடலின் சப்ததோடு இருள் சூழந்த அறையில் ஒளி சிந்திக்கொண்டிருந்த மெழுகு தீபங்கள் அணைக்கப்பட அறைமுழுதும் அன்பு நிரம்பியிருந்தது. ஒருவருகொருவர் கேக் ஊட்டிக்கொள்ள ஆரம்பமானது. பயபுள்ளைகளின் வில்லத்தனம் …


         எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒருவருக்கொருவர் கேக்,க்ரீம்கள் பூசிய முகத்துடன் காமிரா கண்களில் சமத்துவமாகினோம்…! ஹமீதண்ணாவையும் விட்டு வைக்கவில்லை என்பது உச்சகட்டம்.
        அடித்து பிடித்து எல்லோரும் ரீஃப்ரெஷ் ஆக நண்பர்கூட்டம் மெல்ல இருப்பிடம் திரும்பும் வேடந்தாங்கல் பறவைகளானோம். கிரி அன்று போட்டொ ஷூட் இருப்பதால் அதோடு விடைபெற திருநெல்வேலி ஷ்பெசல் சமாச்சாரம் பரிமாறப்பட்டது. சரண் நானும் கிளம்புறேன் மாப்ள என்க ஆரத்தளுவி அவனுக்கும் ஒரு டாட்டா..போட்டுவிட்டு … அடுத்ததாக கழண்டுக்கவிருந்த பிரகாஷை மீண்டும் கடத்தி சென்னையின் அடையாளமான மெரினாவிற்கு கூட்டிச்சென்றோம்.
 
    மெரினா… என் அலுவல்சார்ந்த பயண நாட்களிலும் கண்டிப்பாக நேரம் செலவழிக்கும் இடமாக இருப்பதை தவிர்க்க முடிவதே இல்லை… சிறுவயதில் சென்னை என்றதும் கடற்கரையும் ஜார்ஜ்கோட்டையும் தான் தெரிய வந்தது…  மெரினா இருளுக்குள் விட்டில் புச்சிகளின் அணிவகுப்பாய் வெளிச்சம் சிந்திக்கிடக்க… உள்நுழைந்தோம் நாங்கள் நாங்கள் என்றால் இப்போது எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. நான் ஹமீதண்ணா சதீஷ் சுரேஷ் ரமணா தமிழ் பிரகாஷ் என…!
     முதல் எண்ட்ரியிலே ஒரு வினோதமான எண்ணம் அனைவருக்கும் கிளிஜோஸியம் பார்க்க ஏற்பாடு … சில கிளிஜோஸியக்காரர்களை பேரம் பேசுகிறேன் பேர்வழி என வம்பிழுக்கும் சேஷ்டைகளும்  நடந்தது [கிளி பேரு என்னாங்க ? “ஸ்நேகா” அது என்னாங்க எல்லா கிளிக்கும் ஸ்நேகான்னு பேரு வைக்குறீங்க ? என்பது போல ]. எல்லாவற்றையும் தன் குறுஞ்சிரிப்புக்குள் ரசித்தவாரே ஹமீதண்ணா உடனிருந்தார்.,
 இப்படியே நேரம் மெல்ல கரைந்து கொண்டிருக்க மெரினாவின் முக்கிய அடையாளம் மீன் உணவு அதையும் ஒருகை பார்த்துவிட்டு…! [இடையிடையே கலாய்ப்புகளுக்கும் விளையாட்டுகளுக்கும் குறைவெ வைக்கவில்லை] இருளுக்குள் சென்னை மூழ்க அதை வெளிச்சப்படுத்தும் திட்டத்தில்  விளக்கொளி இருளோடு போட்டியிட.. பிரகாஸ் விட்டாபோதும் சாமி என்ற நிலைக்கு வர… நட்புசந்திப்பின் அடையாளமாக அந்த நாளை பதித்த ஒரு அடையாள கீசெயின் பகிரப்பட்டது அனைவருக்கும்..  ரமணாவும் தமிழும் பிரகாசும் கிளம்ப…! இப்போது நான் ஹமீதண்னா சுரேஷ் சதீஸ்…!.
   நேரே அறைக்குச்சென்று ஆயத்தமாகினோம்… அவரவர் ஊருக்குச்செல்லவும் அந்த நாளின் நினைவுகளை சுமந்து கொண்டும்…! மிச்சமிருந்த அந்த இடைவெளி நேரத்தில் இரவு உணவை நால்வரும் சேர்ந்தே ரூஃப்டாஃப் உணவகத்தில் அமர்ந்திருக்க செல்போன் மெல்ல ஒளிர்ந்து இசைக்கிறது…! பிரபாவின் அழைப்பு,… ! அவரோடான உரையாடல்கள் நிகழ்வுப்பகிரலுக்குப்பின்… நால்வர் மூவராக …சதீஸ் சென்னையிலிருக்க நாங்கள் மூவரும்… கோயம்பேடு சென்றடைந்தோம்..!
      புறநகர் பேரூந்து நிலையத்தைன் அமைதியான இருள் வெளியில் உயர்ந்த கூரையின் கீழ் ஒரு மௌனமான அமைதியும் கூச்சலான இரைச்சலும் மனதை கவ்விப்பிடிக்க… எல்லா நண்பர்களுக்கும் போன் போட்டு மீண்டும் விடை கொடுக்க… ஹமீதண்ணா பட்டுக்கோட்டை பஸ்ஸிலும் … நானும் சுரேஷ் அண்ணாவும் கன்னியாகுமரி பேரூந்தில் திருநெல்வேலி பயணிக்க…!
   அந்த குதுகலமான நாள் மெல்ல முடிவுக்கு வந்தது,…! இனி இது போல் ஒரு நாளை மீண்டும் அனுபவிக்க வேண்டும்… இன்னும் கொஞ்சம் அதிகமான கால இடைவெளிக்குள் என உள்ளக்கிடக்கை அடித்துக்கொண்டது…!

 -தொடரும் என்ற நம்பிக்கையில்………..!
       -கார்த்திக் ராஜா 

3 comments:

Ivan Saranraj said...

நல்ல கட்டுரை என் இனிய தோழா............
அருமை,............

Unknown said...

நன்றி சரண் !

கற்பகம் said...

மகிழ்சிக்கு அளவில்லாத..
பயணம் போல...!!
படிக்க படிக்க...-நான்
ஏன் ஆணாக பிறக்கவில்லை..
என்ற எண்ணம் எழுகிறது..!!
ஹாஹாஹா...
nice trip !!