Friday, February 17, 2012

கொள்ளை போகும் கனவுகள்





என் கனவுகள்
கொள்ளையடிக்கப்படுகின்றன!
வேண்டி விரும்பி யாராலென
கண்டுபிடிக்க நினைத்து
தூக்கம் வராமல் காத்து
தவிக்கிறேன்...!

அது ஒரு இளமையான முகமாக
இருக்கக்கூடும்  நான் ஆணென்பதால்
அது அநேகமாக பெண்ணொருவளாக
இருக்குமென நினைக்கிறேன்.
அப்படி இல்லாமல்
போனாலும் கூட மனம் அதையே
விரும்புகிறது...

கொஞ்சம் ஆழமாய் யோசித்தால்
யாரோ பழக்கப்பட்ட வீட்டின்
வரவேற்பறையின்  அமர்ந்திருக்கிறேன்.
சம்பிரதாயக்குரல்க்கள்
வழக்கத்துக்குமாறாய் துள்ளலாக
ஒலிக்கிறது...

சற்று தள்ளி இருளான அறைக்கு
வாயில்நிலையில் தொங்கவிடப்பட்ட
சங்குதோரணங்களுக்கு பின்னால்
தெரியும் ஓரு ஜீவனின் தவிப்பை
சப்தமேயில்லாமலும் சம்பந்தமே
இல்லாமலும் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த தருணம் சுகமானதாய் இருந்தாலும்
மனம் அதை ஏற்க மறுத்து பின்வாங்க
விருட்டென எழுந்து வெளியேறுகிறேன்.
இன்னும் கனவுகள் களவு போய்க்கொண்டே இருக்கின்றன!

-கவிதைக்காரன்..

No comments: