Tuesday, November 29, 2011

மயக்கம் என்ன – விமர்சனம்





படத்தில் ஒரு காட்சி..காட்டு வாழ்க்கையை படம்பிடிக்க செல்லும், தனுஷ் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்போது, அந்த மரத்தில் உள்ள இலை ஒன்று அப்படியே தவழ்ந்து, வந்து அவருடைய முகத்தில் மென்மையாக வருடும். அப்போது கண்ணை மூடிக்கொண்டு அதை அனுபவிப்பார்..அந்த காட்சியைப் பார்க்கும்போது, அந்த மெல்லிய உணர்வு உங்களுக்குள்ளும் இறங்காவிட்டால், தியேட்டரை விட்டு எழுந்து வந்து விடுவது நலம். இருக்கவே இருக்கிறது, வேலாயுதம், குருவி படங்கள்..விசிலுக்கு விசிலுமாச்சு, குத்துப்பாட்டுக்கு குத்துமாச்சு…

மெல்லிய உணர்வுகளை படம்பிடிப்பதில் ஒன்று, இரண்டு இயக்குநர்களே, வெற்றி பெற்றதுண்டு., பாலுமகேந்திரா போல், அவரும், சிலநேரங்களில் அதில் சறுக்கி, காம்பரமைஸ் பண்ணிய படங்கள் இருக்கின்றன. ஆனால் செல்வராகவன், காதல் படங்களை இயக்கும்போது, அந்த உணர்வுகளை அப்படியே கொண்டு வந்துவிடுகிறார்.

படத்தின் கதையை சொல்லி உங்களை போரடிக்கவிரும்பவில்லை. வைல்ட் லைப் போட்டோகிராபராக விரும்பும் தனுஷ்ஷின் வாழ்க்கையில் காதல் குறுக்கிடுவதே கதை. இல்லை, அனுபவங்களின் தொகுப்பே இந்த படம். எந்த ஊருலடா, இப்படி ஆணும் பெண்ணும் ஒன்னா டேட்டிங்க் பண்ணுறாய்ங்க என்று கேட்டால், “சாரி சார்..இதோ பக்கத்தில், பக்கத்து ஊர் பெங்களூரில், நிறைய டேட்டிங்குகள்..சென்னைக்கும் வந்துவிட்டது..கூடிய சீக்கிரம் அதுவும் நம் கலாசாரத்துக்குள் புகுந்துவிடும், நாம் அருவருப்பாக நினைத்தாலும் கூட..

இந்த பயலுக்கு எப்படிடா நேஷனல் அவார்டு கொடுத்தாய்ங்க..ஒருவேளை அரசியலா இருக்குமோ, என்று நினைத்தவர்கள் இந்த படத்தைப் பார்த்தால் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். இதற்கு மேல் என்ன நடிப்பு வேண்டும் ஒரு நடிகனுக்கு..”ஏதோ தப்பா இருக்குதே..” என்று நாயகியை பார்த்துவிட்டு முணங்குவதாக இருக்கட்டும், நண்பன் காதலியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகட்டும்,..”மச்சி, அவ வேணாண்டா..” என்று தண்ணியைப் போட்டு புலம்புவதாகட்டும், மனைவியாய் அமைந்த காதலியை, கொடுமைப்படுத்தவதாகட்டும், பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

நாயகியாக ரிச்சா…மாடர்ன் நாயகியாக திடுக்கிடவைத்தாலும், மனைவியாய் அசத்துகிறார். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நண்பன் “நீ அவனை விட்டுட்டு என் கூட வந்துடு..” என்று சொல்லும்போது, “நீ என்ன பண்ணுவ..நீயும் ஆம்பளைதான” என்று கேட்கும்போது, பலபேருக்கு சுருக்கென்று இருக்கும். எத்தனை பேர், இந்த சந்தர்ப்பத்தில் நல்லவராக இருப்பார்கள் என்று அவரவரர் மனசாட்சியை கேட்டால் தெரியும்..முதல் பாதியில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் தான் எனக்கு புரியவில்லை..ஒருவேளை பின்நவீனத்துவமாக இருக்குமோ…

ஒளிப்பதிவாளர் ராம்ஜியைப் பற்றி சொல்லாவிட்டால் கண்டிப்பாக, கொடுத்த காசுக்கு புண்ணியம் வராது. ஹூரோ, புகைப்பட கலைஞன் என்பதே, ஒளிப்பதிவாளருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..ராம்ஜி மாதிரியான கலைஞனுக்கு சொல்லவா வேண்டும்..காட்டுக்குள் சென்று கேமிரா கவிதை பேசியது போல் இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும்..அட..அட..


பிண்ணனி இசை, மற்றும் பாடல்கள் படத்தின் பெரிய பலம். ஜி.வி பிரகாஷுக்கு அநேகமாக 21 வயதுதான் இருக்கும் என நினைக்கிறேன்..ம்..நம்மெல்லாம், அந்த வயசுல….அநேகமாக, இனிமேல் செல்வா படங்களுக்கு, யுவன் இசை அமைக்கும் வாய்ப்பு கஷ்டம்தான்..”நான் சொன்னதும்.,”, “காதல் என் காதல்..” , “ஓட, ஓட..தூரம்” போன்ற பாடல்கள் ஏற்கனவே ஹிட்..காட்சியமைப்புகளோடு பார்க்கும்போது, இன்னும் ஸ்வீட்..இடைவேளைக்கு பின்வரும் காட்சிகளில் டயலாக்குகளை, பிண்ணனி இசை அழகாக நிரப்புகிறது..அப்படியே மனத்தையும்.

செல்வராகவன்..காதல், நட்பு, போன்ற அழகியல் உணர்வுகளை படம்பிடிப்பதில் முதலிடத்தில்..இந்த படமும் அதற்கு சாட்சி..இவரை தமிழ்சினிமா புறம்தள்ளினால், இது போன்ற உணர்வுகளை சொல்லும் படங்கள் வாய்ப்பது மிகக்கடினம்.

படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. கொஞ்சம் மெதுவாக செல்லும் திரைக்கதை..அண்ணாமலை பட டைப் பல்லி காட்சிகள்,  டேட்டிங்க்னாலும், இது ரொம்ப ஓவரோ, என எண்ணத் தோன்றும் காட்சிகள், செல்வராகவனுக்கேயுரிய சில கிளிஷேக்கள்..என்று ஆங்காங்கே…

இறுதியாக செல்வராகவன் படங்களை பிடிக்காதவர்களுக்கு, வழக்கம் போல, இது “மொக்கைப் படமாக” இருக்கலாம்…ஆனால், அனுபவங்களில் லயிப்பவர்களுக்கு, இது மறக்கமுடியாத படம்..எனக்கும்தான்

Monday, November 28, 2011

கார்த்திகைப் பூ...! விழ விழ எழுவோம்...!


எம் தேச மலர்....!

தமிழீழத்தின் தேசியப்பூ. இது கார்த்திகை மாதத்தில் பூப்பதன் காரணத்தால் இந்த பெயர் பயன் பாட்டில் உள்ளது. சங்க இலக்கியங்களில் இது காந்தள் எனக்குறிப்பிடப்படுகின்றுது. ஆங்கிலத்தில் இது Flame lilly என அழைக்கப்படுகின்றது. இதன் பூர்விகம் ஆசியா, ஆபிரிக்க கண்டங்களின் உலர் பிரதேசம். தாவரவியலில் நமது கார்த்திகைப்பூ குளோரியேஸா சுப்பேபா (gloriosa superba) எனப்படுகின்றது. கார்த்திகைப்பூவில் gloriosa superba, carsonii, simplex verschuuriஆகிய 4 வகைகள் உள்ளன.

எம் தேசியப்பூ gloriosa superbaஎன்ற இனமாகும். கார்த்திகைப்பூ கொடியில் பூக்கும் மலர். ஆங்கிலத்தில் இதன் பெயர் gloriosa என வருவதற்கு gloriosu, என்ற சொல் அடிப்படையாகும். இதன் பொருள் மிக அழகானது என்பதாகும். Superba என்பது மிகவும் அழகான என்ற மேன்மையைக் குறிக்கவாக வைக்கப்பட்டது. கிழங்கில் இருந்து குறித்த காலத்தில் மட்டும் முளைத்துப் பூத்து பின் மடிந்து நிலத்தின் கீழ் கிழங்கில் மட்டும் உயிர்வாழும் செடியும் பூவும்தான் கார்த்திகைப்பூ. அதன் உயிர்வாழ்வு விழவிழ எழுதல் என்ற பொருளையும் கொள்கிறதல்லவா.

இதன் வாழ்வுக்காலம் நவம்பர் முதல் மார்ச் வரையாகும் செப்டம்பரில் நிலத்தின் கீழ் உள்ள கிழங்கு முளைக்கத் தொடங்கும். நவம்பர் பூக்கும். நேரடியாக சூரியனை எதிர்கொண்டதாக இல்லாமல் பற்றைகளின் நிழலில் படரும் கொடி இது. இதற்குசதுப்பு நிலம் தேவை. தமிழர் தாயகம் உள்ளிட்ட இலங்கைத்தீவு, இந்தியா, ஆபிரிக்க நாடுகளான Cape coast, Natal, Swaziland, Northern Province, Botswana, Nambia and Zimbabweஆகிய வற்றில் இந்த வகை கார்த்திகைப்பூச்செடிவாழ்கின்றது. உலகளவில் கார்த்திகைப்பூச் செடி மருத்துவ இரசாயனத் தேவைகளுக்காக பண்ணையாக வளர்க்கப்படுகின்றது. பழங்குடிகள் பாரம்பரிய மருத்துவத்தில் தோல் வியாதி, புளுவியாதி போன்றவற்றுக்கு கார்த்திகைச்செடியைப் பயன்படுத்துகின்றனர்.

இரசாயனப்பகுப்பில் கார்த்திகைச்செடியின் சகல பகுதிகளிலும் நச்சுத்தன்மை இருக்கின்றது. கார்த்திகைச்செடி உடலுக்குள் சென்றால் மயக்கம் ஏற்படும். உயிராபத்தும் ஏற்படும். ஆனால் மருத்துவத்தில் இது பயன்படுகின்றது. கார்த்திகைச்செடி 1.8 மீற்றர் தொடக்கம் 2.4 மீற்றர் வரை வளரும். இதன் வாழ்வுக்கு 15 பாகை செல்சியஸ் முதல் 30 பாகை செல்சியஸ் வரை சூழல் வெப்பம் இருக்க வேண்டும். பூக்கள் செழுமையாக இருக்க வளிமண்டல ஈரப்பதன் அதிகமாக இருக்க வேண்டும். சராசரி அமிலத்தன்மையுடைய ஈரமான மண் இதன் வாழ்வுக்குத் தேவை. செடி இறந்ததும் இதன் கிழங்கு மண்ணின் கீழ் வாழ்வதற்கு 20-25 பாகை செல்சியஸ் வெப்பம் தேவை. இதிலிருக்கும் நச்சுப்பொருள் alkaloid colchicineஆகும். gloriosine என்ற நச்சுப்பொருள


கார்த்திகைப் பூ

அண்ட்ராய்டு போனில் தமிழ்..!



கார்த்திக் ராஜா- 

தமிழ் மென்பொருள் -Tamil fonts in your android phone

Prerequisites:


  1. Need a android rooted phone
  2. need to have some descent file manager (Super manager is good)
  3. (need to super user (SU) access to the file manager.)
  4. download the file and rename it to DroidSansFallback
  5. move to this folder /system/fonts (make sure you are in read / write mode. if you su access then it will ask for r/w mode.)
  6. switch to r/w mode.
  7. replace the font.
  8. reboot.

HOLA.


if nothing woirks try more than once.

it may show not enough memory space to re write the font. then u must understood you didn't correct read write acess. please do the same operation again after restarting.


Thanks to தேட வைத்த நண்பர்கள்..! ஹாஹா! 

download the ttf here: Download ttf

Wednesday, November 23, 2011

சின்னஞ்சிறுக்குறும்புக்காரியின் வெள்ளைச்சிரிப்பில்...



அரிதாரம் சூடா அவதானப்பூக்காரி 
கள்ளமில்லை சிரிப்பில்..

கபடமில்லை குறும்பில்
வெள்ளையாடையில்லா 
வெட்கம் சிந்தும் தேவதை...

செல்லநாய்க்குட்டிக்கும் 
முத்தம் சிந்தும் இவளின் 
முகத்தில் தெரிகிறான் 
அத்தனைக்கடவுளும் 

பூக்களை இவள் தலையில் சூடி 
இருக்கிறாளா... பூக்கள் இவளின் 
மேல் பூத்து சிரிக்கிறதா 
வித்யாசம் தெரியாது தவிக்கும் 

வெள்ளைப்பூவிவள்..!
போதும் கொஞ்சம் நிறுத்திக்
கொள்ளத்தான் கூடாதா ..?
உன் புன்னகையாள்  நாளுக்கு நாள்
வானில் நட்ச்சத்திரங்களின் பெருக்கம் 

நீ அமைதியாய் இருந்து 
என்னை ஆர்ப்பரிக்க 
வைக்கிறாய் கவிதைகளால்...

ஆர்ப்பரிப்பாய் எழுகிறது 
அமைதி மறந்த சூழலாய் 
ஒரு ஹைக்கூ...நீ சிரித்து 
விளையாடும் போது...

-கார்த்திக் ராஜா


காற்றிலேறி கவிதை செய்து....


நெருஞ்சி முள்ளாய் 
வீழ்ச்சியின் கரையிலும் 
குத்துக்கொண்டு நிற்கும் 
உன் நினைவுகளை 
என்னவென்று சொல்ல....!

தொலைவானக் காகம் 
தூக்கி விசிறிய விதையில் 
விளைந்த விருட்சம் போல 

வெகு நாள் முந்தைய உன் 
பிரிவின் வலிகள் புதைந்து 
துளிர்ந்த்து பூக்கள் இல்லா 
நெரிஞ்சிமுள்ளாய் செழித்துக்கிடக்க 

பசுந்தேகம் சிதைக்காகும் 
மரக்கரிக்கு முந்தி இருக்குமா உன் வரவென 
மலையோரம் மருங்கி நிற்கும் 
மரமாகநான் வருவாயோ 

மரம்தானென மறுதலித்துப்போவாயோ 
பதில் சொல்லாய் தென்றலே...!
உன் திசை பார்த்து கிளையசைத்து...!
காத்திருக்கிறேன்...!


Sunday, November 20, 2011

சிரிக்க ... ரசிக்க... சிலிர்க்க...அறுசுவையோடு..!



வா மகனே வா...! ஹாஹா


படிக்குற பசங்களும் இருக்காங்க நம்புங்க பாஸ்..



 இதுல எதுங்க மவுஸ் ..... கன்ஃபூஸ் பண்றாங்கப்பா...!



கூகுள் க்ளாஸிக்...பழைய ஃபிகரை எல்லாம் தேட யூஸ் ஆகுங்களா?


நேனு :வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

நைனா : ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ...


ஹாஹாஹா போதும் கலைஞரே ரயிலே வராதாம்ன்னு ஊருக்கே தெரிஞ்சுபோச்சி..



இயற்கை விவசாயம் தான் பண்ணுவீங்களா? நாங்க இயற்கை ரீசார்ஜ் கூடப்பண்ணுவோம் ...!


தொழில்ல கான்ஸண்ட்ரேஷன் முக்கியம் பாஸ்...!
 



ப்ரேக் தி ரூல்ஸ் ....! ஊருக்கு ஒருநியாயம் நாட்டாமை குடும்பத்துக்கு ஒரு நியாயம்டா... நாராயணா...
 


பாப்புலேஷன் ஜாஸ்தியானா ஏர் இந்தியாலையும் வித் அவுட் போவோம்..

 


ESC- ESCAPE ---- ஹாஹா உஷார் ,,,,
 



ஷ்ர்வான் பவன்... யூ வெல்க்கம் ..


நோ கம்மேண்ட் தலைவரு.... புல்லா ஃபார்ம்ல இருக்காரு ஹாஹா
  


பிட்டடிக்கும் ஃபிகரை விட கட்டடிக்கும் பசங்க நல்லவங்க தானோ...
 


நான் என்னத்த சொல்ல.... பூமி சுத்தும்ன்னு நிறுபிச்சுட்டாங்க...  


மேல போனும்ன்னா மேல அழுத்து கீழ போனும்ன்னா கீழ அழுத்து..
-அட அடா என்னா ஒரு விளக்கம்...


 யாருக்குத்தெரியும் அம்மாவுக்கு அமௌண்ட் சரியா வரலைன்னா அணு உலைகூட ஆஸ்பத்திரி ஆகும்...



தலைவர் மொழி விஷயத்தில் இன்னும் அப்படியே தான் இருக்காருபா ஹாஹா



மூன் -ல ஆரம்பிச்ச முதல் மூண்யாண்டி விலாஸ் நாங்க தான் நைனா


 தாய்ப்பாசம் தந்தைப்பாசம் எது சிறந்ததுன்னு இல்ல சங்கதி ரெண்டுமே
உலகில் உன்னதமானது...




வாழ்க்கை சக்கரம் இவ்ளோதானுங்க...


நான் ஒருதடவ முடிவு பண்ணா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்..


கல்யாணம் பண்றவங்க கார்-ல கார்ல இப்படியாய்யா ஒட்டுவீங்க ஹாஹா ஆனாலும் உண்மையதான் சொல்றாங்க...
 



இதான் மேட்டர்....
ஹாஹாஹாஹா...
 



இங்கே அலைகடலென கூடி இருக்கும் மஹாஜனங்களே...

மைக் செட் காரன் : தலைவரே எப்போ முடிப்பீங்க எவ்ளோ நேரம் குத்தவைச்சு உக்காரனும்...நானு
 


மந்திரிசபையில தாலாட்டுப்பாடுறது யாருங்கோவ்,,,,


நினைவுகள் தாங்கிய நதிக்கரையில்....







நம் சந்திப்பு பொழுதுகளின்
இறுதியில்..
விடைபெற்று நீ சென்றதும்

அடுத்த ஐந்தாறு நிமிடத்தில் 
அழைத்து எங்கே இருக்கிறாய் 
என்கிறாய் ..!

*உன் மனதில் தான் என 
சொல்ல வார்த்தை முட்டும் 
எனக்கு..
அந்த நிமிடம்....!

^^^^^^^^^^
அன்றொரு கடற்கரை 
சந்திப்பில் 
உன்னை அருகில் 
வைத்துகொண்டே 
அலைகள் ரசித்திருந்தவனிடம் 
சரி வா கிளம்பலாமென்றதும் 

அத்தனை ரசனையையும் 
உதறிவிட்டு இன்னும் 
கொஞ்ச நேரம்
எனக் கெஞ்சி நிற்கிறேன் 
உன்னிடம்
அந்த நிமிடம்..!
^^^^^^^^^^

ஒரு மதிய பொழுதினில்.
"பசிக்குது சாப்பிடலாமா ?"
என்று கேட்டால்
"எனக்குப் பசிக்க வில்லை 
என்கிறேன்.
ஏன் ? எனக்காரணம் கேட்டாய்

பார்வையாலே உனை 
மென்று கொண்டிருக்கிறேன் 
இனி எப்படி பசிக்கும் 
என்றதும்,  செல்லமாய் அடிக்க கை 
ஓங்கினாய் அந்த நிமிடம்.

^^^^^^^^^^^

இப்படி தெளிந்த என் வானத்தில் 
என் காதல் பூப்பூத்தது 
மழை நீரில்லாமலே ..!
இன்று நதிக்கரையோரம் 
வட்டக்கல் வீசி 
தனித்து நிற்கிறேன் 
நீயில்லாமலே..! 

அந்த நிமிட நினைவுகள் எல்லாம் 
இன்று என் சில பல 
மணி நேரங்களை 
ஆக்கிரமித்துக்கொள்கிறது 
முழுவதுமாய் ..!

கல் விழுந்த இடம் சுற்றி 
அலை அலையாய் உன் நினைவுகள்..

எழுத்துப்பிழைக்காரன்... 
-கார்த்திக் ராஜா.. 


Saturday, November 19, 2011

எனக்குள் ஒரு மாற்றமாய் வந்தவள்...!

கண்களை திறக்காமல்
தினமும் இறுகிய முகத்தோடு விடியும்
புல்வெளி ரசிக்க நேரமில்லா
அதிகாலைகள் எனக்குச்சொந்தம்...!

புன்னகைகள் பூப்பூத்து
கன்னங்கள் சிரித்ததெல்லாம் மறந்து
போன மௌனபட்சியாய்..!-நான்

மகிழ்ச்சியை துறந்து
கிளைகள் இல்லா மரமாக
நான் உதிர்ந்த சருகுகளும் ஒட்டாமல்..!
வாழ்ந்திருக்க...

தனிமை நிலாவாய் தகிக்கும்
தனலாய் நானிருக்க...! ஒற்றை
விடிவெள்ளியாய் வந்து சேர்ந்தாள்
என் வாழ்வில்...!


நிழல்தேடும் பறவைக்கு
நிலாவே கூடானால்..!
நிலைகொள்ளாமல்
நர்த்தனமாடும்...!

சின்னஞ்சிறு கிளியே வென
செல்ல மொழி பேசும் வண்ண முகில் இவள்
வறண்ட என் நிலத்தினுள் வசந்த விவசாயம்
பார்க்க வந்த கன்னக்குழிச் சிரிப்புக்காரி...!

அடைமழைக்கு குடை பிடிக்க தயங்கி
அடைந்து கிடந்தவனை
கைகள் பற்றி அழைத்து வந்து காகிதக்
கப்பல் செய்து தரச்சொன்னாள்...!

குற்றாலச்சாரல் தெறிப்பது போல
அடங்காமல் அவளது வார்த்தைகள்
மெல்ல அதனில் நனைந்து கொண்டிருக்கும்
சுற்றுலாவாசியாக நான் கண்களால்
ரசித்து நின்றேன் அவளை ...

ஒவ்வொரு திருப்பத்திலும்
வரவேற்க காத்திருக்கும் விளையாட்டு
பொம்மைக்கடை காண்பவள் போல
ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு பார்வைக்கும்
சந்தோசித்து பதில் சேர்க்கிறாள் என்வார்த்தைக்கு...

நாஞ்சில் நாடனின் வாக்குப்பொறுக்கிகள்
கதைகளில் என் நாட்களை தொலைத்தவன்
இந்த குறும்புக்கார சிறுமியின்
வாக்குவாதங்களில் என்னையே தேடுகிறேன்..

நா.முத்துக்குமாரின் அணிலாடும்
முன்றிலில் அமிழ்ந்து கிடந்தவன்..!
இந்த அணில் போல் துள்ளியாடும்
பனிக்காட்டு குறுஞ்சிரிப்புக்காரியின்
அழுகைகளில் அணைந்தே போகிறேன்,,,!

யாரிவள் என்னப்பேரிவள் ஏதும் அறியா
ஒரு மழைக்காலத்தில் ஒற்றைக்குடைக்குள்
கையிலோர் நாய்க்குட்டியோடு
தேம்பிநின்றவள்..! தொலைத்த யாரோ

ஒருவருக்காய் காத்திருந்த ஏக்கம்
வார்த்தைகளில் விம்மலைத்தவிர ஏதுமில்லாத
கபடமில்லாத குழந்தை அவள்..!

வேறேதும் தோன்றாமல்
என்னோடு அழைத்துச்சேர்த்திருந்து
முகவரி கொடுத்தேன்...!

இன்று என்னில் இருக்கும்
என்னையே எனக்கு அடையாளம்
கொடுத்தவள்... என் விடிவெள்ளி
இன்னும் மறையாமல் இருக்க..

ஏக்கத்தோடு மறைந்திடாமல்
காத்து நிற்கிறேன் என் வானத்தை..


மின்னலும் மழையுமாய்..
கொட்டிச்சிரிப்பவள்
அங்கே நட்ச்சத்திரம்
பறித்துக்கொண்டிருக்கிறாள்

நான் புல்வெளியில் அமர்ந்து
அவளை ரசித்துக்கொண்டிருக்கிறேன்..!
-கார்த்திக் ராஜா

Thursday, November 17, 2011

ஆயகலைகள் அறுபத்து நான்கு

அந்த ஆயகலைகள் அறுபத்து நான்கு எது என்று உங்களுக்குத் தெரியுமா?


1. அக்கரவிலக் கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. ஜோதிடம்
9. தர்ம சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்
11. மந்திர சாஸ்திரம்
12. சகுன சாஸ்திரம்
13. சிற்ப சாஸ்திரம்
14. வைத்திய சாஸ்திரம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரு ம்மம்
23. வீணை
24. வேணு (புல்லாங்குழல்)
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம்
27. அத்திரப் பரிட்சை
28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்)
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை
33. பூமிப் பரிட்சை
34. சங்கிராம விலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகருடனம்
37. உச்சாடனம்
38. வித்து வேடனம் (ஏவல்)
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை)
44. பைபீலவாதம் (மிருக பாஷை)
45. கவுத்துவ வாதம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம்
48. நட்டம்
(காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம் பழகுவித்தல்)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக் கும் பொருளைச் சொல்லுதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது)
53. அதிரிசியம்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்)
57. ஜலஸ்தம்பம்
(நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்ப ம்
63. கட்கத்தம்ப ம்
64. அவத்தைப் பிரயோகம்

Tuesday, November 15, 2011

அமேரிக்க ஜனநாயகம்.... ??



நியூயோர்க் ஸூகோட்டி பார்க்கில் முகாமிட்டு வோல் ஸ்ரீட்டை நிரப்புவதற்கான போராட்டங்களை நடத்தியவர்களை நியோர்க் போலிஸ் காடைத் தனமாக வெளியெற்றியது. 15ம் திகதி அதிகாலை தமது நாட்டில் ஜனநாயகம் குறித்தும் கருத்துச் சுந்ததிரம் குறித்தும் பேசும் நியோர்க் நகர மேயரின் உத்தரவின் பேரில் போலீஸ் வெளியேற்றியது.
உலகம் செத்துப் போயிருந்த அதிகாலை ஒரு மணியளவில் நியூயோர்க் போலீஸ் கமிசனர் களத்தில் இறங்க அமைத்தியாக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுக்கு எதிரான தாக்குதல் ஆரம்பமானது. அமரிக்க ஜனநாயகம் உள் நாட்டிலும் தனது கோரத்தைக் காட்டியுள்ளது.
அடிப்படை வாழ்வுரிமைக்காக மட்டுமே இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாம் தான் இந்த உலகின் 99 வீதமானவர்கள் என்று ஆரம்பித்த இந்தப் போராட்டம் நியூசிலாந்து வரை பரவியது குறிப்பிடத்தக்கது.
200 இற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைதின் போது போலிசாரின் தாக்குதலுக்குப் பலர் காயமுற்றனர். 17ம் திகதி செப்டெம்பர் மாதம் ஆரம்பித்த இப்போராட்டத்தின் இதயப் பகுதியை குறுகிய முன்னறிவிப்புடனும் வன்முறையோடும் பொலீசார் அகற்றினர்.
அதிகாலையில் நிலைமையைப் புரிந்துகொண்ட நகரத்தின் மேல் நீதிமன்ற நீதிபதியும் மனித் உரிமைச் செயற்பாட்டாளருமான லூசி பில்லிங்ஸ் போலீசாரை அங்கிருந்து விலகுமாறும், அபகரிக்கப்பட்ட கூடாரங்களை மீளளிக்குமாறும், கைதானவர்களை விடுதலை செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே நீதிமன்ற நிர்வாகிகள் லூரி பில்லிங்க்ஸை தொடர்புகொள்ளாமல் வேறு ஒரு நீதிபதியைத் தெரிவு செய்து போலீசிற்கு ஆதரவான உத்தரவைப் பிறப்பித்தனர்.
அமரிக்க நீதியும் மேற்கின் ஜனநாயகமும் தமது வியாபாரம் பாதிக்கப்படுவதாக பல் தேசியக் கொள்ளைக் காரர்கள் புகார் வழங்கினால் மட்டுமே செயற்படும் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம்.
நடந்த சம்பவங்களை செய்தியாக்கிக் கொண்டிருந்த நியூயோர் டெயிலி செய்தியாளர் போலிசால் தடுக்கப்பட்டார். பின்னதாக செய்திவெளியிட்ட காரணத்தால் கைது செய்ய்யப்பட்டார்.
ஜூலி வோக்கர் என்ற தேசிய பொது வானொலியின் செய்தியாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஏ.பி செய்திச் சேவையைச் சேர்ந்த சீத் வேங் புகைப்படம் பிடித்த காரணத்தால் கைதுசெய்யப்படு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுவரை 9 ஊடகத் துறையைச் சார்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்த தகவல்களின் படி சட்ட ரீதியாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீள ஆரம்பிப்பதற்கான தற்காலிக உத்ரவை நீதமன்றம் பிறப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது.

சர்வதேச இயக்கமாக விரிவடைந்துள்ள இப்போராட்டம் இலகுவில் நிறுத்தப்பட முடியாத இயக்கமாக விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாமாவும் அரசியலும்..!






அம்மாவின் அவசர முடிவு எப்போதுமே தவறாகத் தான் போகும், ஆனால் அதை ஆரம்பத்திலேயே அவர்களிடம் எடுத்து சொல்வது யார்? அப்படியே சொன்னாலும் போடோ. முப்பது வயதில் தாலியறுத்து. நாற்பது வருஷமா வாழ்க்கையோடு மல்லுக்கட்டி நிற்கும் எனக்கு தெரியாதது உனக்கு தெரியுமோ? என்று வாயை அடைத்து விடுவார்கள், அதையும் மீறி பேசினால் அழகை. ஆர்ப்பாட்டம். உண்ணாவிரதம் என்று போராட்டாம் நீண்டு கொண்டே போகும்,

மாமாவை தேர்தலில் நில் என்று சொல்லி வலிய தள்ளி விட்டதும் அம்மா தான், இன்று நல்ல பிள்ளையை கெடுத்துவிட்டேனே என்று அழுது புலம்புவதும் அம்மா தான், இன்றைய தேர்தல். அரசியல் என்பதெல்லாம் மகாத்மாவை கூட வழி தவற செய்துவிடும் என்பது அம்மாவுக்கு தெரிய வாய்ப்பில்லை தான், அதை முன்கூட்டியே தெரிந்தால் தான் மாமாவை தேர்தலில் நிற்க வேண்டாம் என்று தடுத்து பார்த்தேன், நீ நேற்று பிறந்தவன் உனக்கு நமது குடும்பத்தை பற்றி என்ன தெரியும்? உன் தாத்தா சுகந்திரம் பெற்ற பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே நின்று ஜெயித்தவர், நாட்டுக்கே அமைச்சராகவும் இருந்து நல்ல பெயர் எடுத்தவர், அப்பாவுக்கு பிறகு தம்பிக்கு அரசியல் ஆர்வம் இல்லாதினால் வியாபாரம். தொழில். விவசாயம் என்று இருந்து விட்டார், இன்று வாய்ப்பு வந்து வாசலில் நிற்கிறது, தாத்தாவின் செல்வாக்கு வெற்றி மாலை போட காத்திருக்குது அதை வேண்டாம் என்று சொன்னால் அறிவு கெட்டதனமாக போய்விடும், இதற்கு மேலும் அம்மாவிடம் பேசி பயனில்லை என்று எனக்கு தெரியும், இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எல்லோரும் தன் பேச்சை தான் கேட்க வேண்டும் என்ற விரும்புகின்ற மாமா முதல்முறையாக அம்மாவின் பேச்சுக்கு தலையசைத்தார், வெற்றியும் பெற்று
விட்டார்


நான் முன்பெல்லாம் மாமாவை போல் நல்ல மனிதர்கள் கிடைப்பது அரிது என்று அழுத்தமாக நம்பினேன், காரணம் எனது தகப்பனார் காலமாகி அம்மாவை புகுந்து விட்டார் வெளியே போ என்று தள்ளிய போது என் வயது வெறும் மூன்று மாதம் தான், நண்டும். நசும்புமாக ஆறு குழந்தைகளோடு மாமா வீட்டிற்கு அம்மா வந்த போது அவருக்கு கல்யாணமாகி இரண்டு வருடம்தான் ஆகியிருந்தது, தாத்தாவும் உயிரோடு இல்லை, ஊர். உலகத்தில் உள்ள அண்ணன் தம்பிகள் கூட பிறந்தவர்கள் திக்கற்று போய்விட்டால் ஏதோ கடமைக்காக சில உதவிகளை செய்வார்கள், சிலரிடம் அதை எதிர்ப்பார்க்கவும் முடியாது, மாமா அப்படியல்ல, கூட பிறந்த அக்காவை தனது தாயை போல தான் நினைத்தார், நடத்தினார் தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் என்னையோ என் சகோதிரிகளையோ வேற்றுமையாக நடத்தியதே கிடையாது, மாமாவின் மனைவியும் அவரின் மனம் கோணும் வண்ணம் நடந்ததே இல்லை, நான் என் தாயாரை அம்மா என்று கூப்பிடுவதே போல் தான் அத்தையையும் அழைப்பபேன், எங்கள் வீட்டியிலுள்ள குழந்தைகள் எல்லாருக்கும் இரண்டு அம்மாக்கள் என்று தான் நினைத்து கொண்டிருந்தனர்,

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன், என் தகப்பனாருடைய சகோதரர்கள் போனால் போகட்டும் என்று சிறிதளவு சொத்தை அம்மா பெயருக்கு கொடுத்த போது கிடைத்திருக்கும் சொத்தை விற்றோ. குத்தகைக்கு விட்டோ பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்கிறேன், எத்தனை நாள் தான் உனக்கு பாரமாகயிருப்பது என்று மாமாவிடம் அம்மா சொன்னது தான் தாமதம், அவர் கண்களில் நெருப்பு பொறி பறந்ததை முதல் முறையாக பார்த்தேன், ஏன் மைதிலி ஏதாவது சொன்னாளா? என்று கரகரத்த குரலில் கேட்டார், அம்மா ஆடி போய்விட்டார்கள், அய்யய்யோ அப்படி எல்லாம் எதுவுமில்லை, நானாகத்தான் உன்னிடம் கேட்டேன், உன் மனைவியின் மீது குறை சொன்னால் கடவுள் மன்னிக்கவே மாட்டார், தயவு செய்து நீ அப்படியெல்லாம் நினைத்து பெண்களுக்கிடையில் பிளைவை ஏற்படுத்தி விடாதே என்று படப்படபோடு அம்மா சொன்னார், மாமா மௌனமாக எழுந்து போய்விட்டார், அவர் அப்படி எழுந்து போனால் விஷயத்தை அத்தோடு விடு மேலே பேசாதே என்று அர்த்தம்,

எனக்கு தெரிந்து மாமா காலையில் நான்கு மணிக்கே எழுந்து விடுவார், குளித்து முடித்து வெள்ளை வெளேர் என்று சலவை ஆடை உடுத்தி நெற்றி நிறைய விபூதி பூசி அவர் வாசலுக்கு வரவும் ஜீப் வந்து நிற்கும் அதில் ஏறி நஞ்சை. புஞ்சை தோட்டம் துரவு என்று சுற்றி பார்த்து விட்டு ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டு வாசலில் சரியாக ஜீப் வந்து நின்றுவிடும், இந்த முறையும். நேரமும் எப்போதுமே தவறாது, அதன் பிறகுதான் காலை உணவு சாப்பிடுவார், மாமா காலையில் எப்பொழுதுமே இட்லி. தோசை என்று சாப்பிட்டு நான் பார்த்ததே கிடையாது, தட்டு நிறைய பழையசாதம் தொட்டுக்கொள்ள தேங்காய் துவையல். எப்போதாவது ஒரு நாள் துவையலுக்கு பதிலாக பழைய குழம்பு, இதுதான் அவரின் காலை ஆகாரம்,

மீண்டும் பத்து மணிக்கெல்லாம் மாமாவின் ஜீப் புறப்பட்டுவிடும், பன்னிரெண்டு மணிவரை ரைஸ்மில். இரண்டு மணி வரை ஜவுளிக்கடை. மூன்று மணிக்கு மேல் பெட்ரோல் பங்க். ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் வீடு இதுதான் அவரது தினசரி நடவடிக்கைகள், மதிய உணவு. ஜவுளி கடைக்கு அத்தையோ. அம்மாவோ எடுத்து சென்று விடுவார்கள், எப்போதாவது நான் எடுத்து சென்றிருக்கிறேன் ஒரு கையில் சாதத்தை பிசைந்து கொண்டே இன்னொரு கையில் கணக்கு போட்டு வாடிக்கையாளரிடம் இவ்வளவு பணம் வாங்கு என்று பணியாளர்களிடம் அவர் சொல்வதும். அதை எடுத்து வை. இதை ஒழுங்கு பண்ணு என்று கட்டளையிடுவதும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும், ஒரே நேரத்தில் ஒரு மனிதனால் இத்தனை வேலை செய்ய முடியுமா? என்று பிரமித்து போவேன்,

எல்லாத்தையும் நல்லா பாத்துக்கோ தெளிவா நெளிவு சுளிவு கத்துகிட்டாத்தான் நல்லா நிர்வாகம் பண்ண முடியும், என்று என்னை பார்த்து சொல்லும் அதே நேரத்தில் கடை மேனேஜரை பார்த்து கண்ணடித்து இந்த பையன்க எங்கிருந்து தொழிலை கவனிக்க போறாங்க. மீசை முளைக்கின்ற வர பூணக்குட்டி மாதிரி பம்முவான்க, காலேஜ் கிலேஜ் என்று போய் விட்டால் கூட படிக்கின்ற எதாவது ஒரு குட்டிய கூட்டிக்கிட்டு வந்து ஆசிர்வாதம் பண்ணுங்க என்று நிப்பாங்க, என்று தமாஸ் பண்ணுவார், மாமா தமாஸ் பண்ணும் போது வெட்கப்பட்ட மாதிரி நிற்கனும் தப்பி தவறி அதற்கு எதாவது பதிலை நாம் சொல்லி விட்டால். முளச்சி மூணு இலை விடல. வாய் பேசறியா வாய் போடா என்று துரத்தி விடுவார்,

மாலை ஆறு மணி வந்து விட்டாலே எங்களுக்கெல்லாம் ஜாலியாகவிடும், வீட்டுக்கு வந்து கை. கால் அலம்பி விட்டு பிள்ளைகள் எல்லோரையும் வரிசையாக உட்கார வைத்து கடைத்தெருவில் வாங்கி வந்த திண்பண்டத்தை தருவார், என்ன படிச்சிங்க எங்கெல்லாம் போனீங்க என்று விசாரிப்பார், கொஞ்சநேரம் எங்களோடு சரிசமமாக விளையாடுவார், அவர் முதுகில் யானை சவாரி அடிக்கடி நான் செய்து இருக்கிறான், பிள்ளைகளோடு விளையாடும் போது எவ்வளவு பெரிய வேலை வந்தாலும் எத்தனை பெரிய மனிதன் வந்தாலும் கண்டு கொள்ளமாட்டார், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதெல்லாம் ஏழு மணி வரை தான், அதன் பிறகு ஓடி போய் படி என்று துரத்தி விடுவார், ஆனால் பசங்க ஒழுங்காக படிக்கல என்று அத்தை குறை சொன்னால் நீ பெரிய படிப்பாளியோ எல்லா வயசு வந்தால் தானா படிக்கும், வற்புறுத்தி எதையும் குழந்தைகளுக்கிட்ட திணிக்காதே என்று பட்டென்று பேசிவிடுவார்,

ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை ரைஸ்மில் கணக்கு. பெட்ரோல் பங்க் கணக்கு என்று ஒவ்வொன்றாக பணியாளர்கள் வந்து கொடுத்து கொண்டே இருப்பார்கள், அப்போது மட்டும் தான் வீட்டில் மாமா பரப்பரப்போடு இருப்பதை காண முடியும், கணக்கில் சிறிய தவறுகள். குளறுபடிகள் இருந்தால் கூட சகித்து கொள்ள மாட்டார்,

மாமாவிடம் வேலை செய்பவர்கள் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினாலும் வேறு இடத்திற்கு போக மாட்டார்கள், மாதா மாதம் சம்பளம். முதல் சனிக்கிழமை கொடுத்து விடுவார், தீபாவளி. பொங்கல் என்று இல்லாமல் வேலைக்காரர்களின் அவ்வப்போதைய தேவதைகளையும் கணிசமாகவே கவனிப்பார், தாத்தா காலத்திலிருந்தே வேலையில் இன்று வரை இருப்பவர்களும் அவர்களது வாரிசுகளும் மிக அதிகம், ஊரில் இன்னாரிடம் வேலை செய்கிறான் என்றாலே அவனுக்கு தனி மதிப்பு உண்டு,

பல இடங்களில் நான் பார்த்திருக்கிறேன், முதலாளி முன்னால் கையை கட்டுவார்கள் பின்னால் வந்து வாய்க்கு வந்தபடி பேசுவார்கள் ஆனால் மாமா விஷயத்தை பொறுத்தவரை அவரை குறை சொல்லுபவர்களை நான் இதுவரை பார்த்ததேயில்லை, அவருக்கு ஒருநாள் உடம்பு சரியில்லையென்றால் ஏதோ அந்த நோய் தனக்கே வந்து விட்ட மாதிரி பதட்டப்படுவர்கள், ஒரு முறை மலேரியா ஜீரம் அவருக்கு வந்த போது மொட்டை போட்டு கொண்டே தொழிலாளர்கள் நிறையபேர் உண்டு,

எனது பிளஸ்டு தேர்வு முடிவு வந்த போது மேலே படிக்கிறாயா? அல்லது நமது வேலைகளை கவனிக்கிறாயா? என்று மாமா என்னிடம் கேட்டார், நீங்கள் என்ன சொல்கீறீர்களோ அதை நான் செய்கிறேன் என்று சொன்ன போது நம் குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசு நீ தான் எனக்காக பிறகு எல்லாவற்றையும் கவனித்து கொள்ள வேண்டியதும் நீ தான், இந்த வயதிலேயே தொழிலை கவனித்தால் தான் நல்ல அனுபவம் வரும் என்று சொன்னார், ஒரு டிகிரியாவது படித்துவிட்டு தொழிலை கவனித்தால் அனுபவத்தோடு கொஞ்சம் தைரியம் வருமல்லவா? என்று நான் சொன்னவுடன் நான் படிக்க விரும்புவதை சட்டென்று புரிந்து கொண்டு சரிசரி எந்த காலேஜில் சேர வேண்டுமோ சொல் ஏற்பாடு செய்துவிடுகிறேன் என்றார்,

மாமாவிடம் என் மாற்றுகருத்தை சொன்னது அந்த ஒரு முறை மட்டும் தான், ஆனால் அந்த ஒரு முறையிலேயே தன் எண்ணம் மட்டும் தான் நிறைவேற வேண்டும், மற்றவர்களின் விருப்பத்தை பற்றி கவலையில்லை என்று நினைக்கின்ற சர்வதிகாரியல்ல அவர், ஒரு ஜனநயகவாதி தான் என்பதை தெரிந்துகொண்டேன், நான் படிப்பு முடித்து வருவதற்குள் என் அக்காமர்கள் ஐவருக்கம் அவரது மூத்த மகளுக்கும் நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கரை சேர்த்துவிட்டார்,

ஒரு நாள் இரவு ஒன்பது மணியிருக்கும் அம்மா வந்து உன்னை மாமன் எதற்கோ கூப்பிடுகிறான் போ என்று சொல்லவும், அவர் அறைக்கு போனேன் ஒரு வெள்ளைத்தாளை என் முன் நீட்டினார், ஒரு கல்யாண பத்திரிக்கைகாக மாடல் எழுதியிருக்கிறேன், படித்து பார், எந்த அச்சகத்தில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதையும் சொல் என்றார், காகிதத்தை பிரித்து படித்தேன், எனது கல்யாண பத்திரிக்கைக்கான மாடல் தான் அது, மணமகள் என்ற பகுதியில் அவரது கடைசி மகள் பெயர் இருந்தது, எனக்கு சற்று அதிர்ச்சியாகவும் வெட்கமாகவும் கூட இருந்தது, நீங்கள் விரும்புகின்ற அச்சகத்திலேயே கொடுத்தால் நான் தேர்ந்தெடுப்பதை விட நன்றாக இருக்கும் என்றேன், எனது பதிலில் திருமணத்துக்கு சம்மதமும். என் வாழக்கையை தீர்மானிக்க வேண்டியது நீங்கள் தான் என்ற உறுதியும் இருப்பதை அறிந்து கொண்டவர் சந்தோஷமாக என் தோளில் தட்டிக்கொடுத்தார், அதன் பிறகு தான் வீட்டில் உள்ளவர்களுக்கே விஷயம் தெரிந்து சந்தோஷப்பட்டனர், என் திருமணம் நடந்த பிறகு நான் மாமாவுடைய நிழல் மாதிரி ஆகிவிட்டேன். அவர் பேசுவது பிரச்சனைகளை சாதுர்யமாக தீர்ப்பது வம்பர்களைக்கூட லாவகமாக அரவணைத்துக் கொள்வது எந்தத் தொழிலில் எப்போது முதலிடு செய்யலாம் எவ்வளவு லாபம் வரும் தொழிலாளர்கள் எப்படி ஏமாற்றுவார்கள் என்பவைகளை ஒரு குருவி குஞ்சுக்கு இரையூட்டுவதைப்போல் சொல்லிக் கொடுத்தார் அந்த நேரத்தில் தான் பாழாய் போன தேர்தல் வந்து தொலைந்தது எதிர்கட்சி வசமாக இருந்த அந்த தொகுதி உறுப்பினர் மண்டையை போட்டு விட்டதால் வந்த இடைத்தேர்தல்

அது அதில் ஆளும்கட்சி சுலபமாகவும் ஜெயிக்க வேண்டும் என்றால் உள்ளூரில் சகல விதத்திலும் செல்வாக்கு மிக்கவரை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களாம், ஆனால் உண்மையில் தன் கட்சிக்காரர்களை நிறுத்தினால் தோற்பது சர்வ நிச்சயம். யாராவது பொது மனுஷனை ஓரளவாவது நல்ல பெயர் உள்ளவனை நிறுத்தினால் தான் மானத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்த ஆளுங்கட்சி ஒரு நாள் காலை ஒன்பது மணிக்கு எங்கள் வீட்டு முன்னால் திடிர் முகாமிட்டனர்,

வட்டம். மாவட்டம். அமைச்சர் என்று எத்தனையோ கரை வேஷ்டிகள் கூழை கும்பிடுகள். விளம்பர சிரிப்புகள். அமைச்சர் மாமாவிடம் ஏதோ தனியாக பேசினார், அரை மணி நேரமாவது அவர்களின் பேச்சி நீடித்திருக்கும், எல்லோரும் விடைபெற்று போன பிறகு சலிப்போடு மாமா வெளியில் வந்தார், என்னடா வந்து பேசினாங்க என்று அம்மா கேட்டதற்கு அட அவனுங்க கெடக்கிறான், விடு அக்கா. வெட்டிபயலுக என்று சொல்லிவிட்டு ஜீப்பில் அமர்ந்தார், போகும் வழியில் என்னிடம் இடைத்தேர்தலில் நிக்கனுமாம். அரசியலே அயோக்கியபயலுக கூடாரானமான பிறகு எந்த நல்ல மனுஷனாவது அந்த வாசலை மிதிப்பானா. என்றார் என்னிடம் தன் கருத்தை அவர் சொன்ன பிறகு நான் என்ன பேசுவது. மௌனமாக இருந்தேன்,

அன்று இரவு சாப்பிடும் போது அம்மா மெதுவாக பேச்சை துவங்கினார், தம்பி அரசியல் என்பது நம்ம குடும்பத்திற்கு ஒன்றும் புதுசுயில்லையே. அப்பா போட்ட வழியில நீ நடப்பது ஒன்றும் தப்பில்லையே என்றார், அதற்கு மாமா அக்கா நம்ம அப்பா அரசியல் நடந்த காலம் வேற வீட்டில் பெண்டாட்டி பிள்ளைகளுக்கு கஞ்சி காய்ச்ச கால்படி அரிசி இல்லையென்றால் கூட பட்டினி கிடப்பார்களே தவிர பொது ஜனங்களுடைய பொருளை தொட மாட்டார்கள், இன்னிக்கு நிலைமை அப்படியில்லை யார் அதிகமாக பொது சொத்தை கொள்ளையடிக்கிறானோ அவன்தான் தலைவன், அந்த சாக்கடையில் என்னை இறங்க சொல்லிறியா? என்றார்,


ஊரில் இருக்கிறவங்க எல்லோருமே சாக்கடையை பார்த்து மூக்க மூடிட்டு போய்ட்டா சாக்கடையை யார் தான் சுத்தப்படுத்துவது அதற்கு யாராவது ஒருத்தர் துணிச்சலாக வரவேண்டுமல்லவா? அந்த ஒருவர் ஏன் நீனாக இருக்க கூடாது, அம்மா இப்படி சொல்லவும் மாமா யோசனையில் அமைதியானார், நீங்க சொல்வது வாஸ்தவம் தான், நாமே இறங்கி சாக்கடையை சுத்தப்படுத்த வேண்டுமா என்ன? வேறு எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரையாவது ஒருவரை தேர்தலில் நிறுத்தி மாமா ஆதரவு கொடுக்கலாமே என்று நான் சொன்னேன்,

போடா! உனக்கு விவரம் தெரியாது, நாம நிக்க வைக்கிறவன் நாளைக்கு கெட்டவனாயிட்டா நம்ம பேரு தானே கெட்டு போயிடும், நீ சொல்வதெல்லாம் சரிபடாது, என்று என்னை பார்த்து சொன்ன அம்மா தம்பி நீ எதையும் யோசிக்காதே, நான் மூத்தவள் என் அனுபவத்தால் சொல்கிறேன், இன்று நீ நிற்கமாட்டேன் என்று ஒதுங்கி கொண்டால் நம் பேச்சை கேட்கவில்லையே என்று ஆளுங்கட்சிக்காரன் கோவிப்பான், நம் தொழிலுக்கு கூட இடஞ்செல் செய்வான், எதையும் நிதானமாக யோசிச்சு செய் என்று மாமாவிடம் சொன்னார்கள், இந்த உரையாடல்கள் எதிலும் மைதிலி அத்தை கலந்து கொள்ளவேயில்லை, புருஷனும் நாத்தனாரும் பேசும் போது குறுக்கே அவர்கள் பேசி நான் பார்த்ததேயில்லை, என்ன நீங்க அம்மா எது சொன்னாலும் தலையாட்டி பொம்மை மாதிரி தலையை மட்டும் ஆட்டுகிறீர்கள் என்று நான் கேட்டால் பதிலுக்கு சிரிப்பார்கள் அந்த சிரிப்புக்கு அவர்கள் பெரியவர்கள் எனக்கென்ன தெரியும் என்பது பொருளா? நான் ஒன்று சொல்ல போக அது வேறு ஒன்றாக கருதப்பட வீணான தகராறு என்னால் எதற்கு என்பது பொருளா? என்று எனக்கு விளங்கவே விளங்காது, இப்போது மாமா அத்தையை யோசனையுடன் திரும்பி பார்த்தார், பொறியியல் போடவா? கூட்டு வைக்கவா? என்று அத்தை கேட்க அதை சட்டை செய்யாத மாமா என்னிடம் காலையில் வந்த அமைச்சரின் போன் நம்பர் என்ன? என்று கேட்டார், அப்புறமென்ன தேர்தல் திருவிழா எங்கள் வீட்டை மையமாக கொண்டு ஆரவரமாக துவங்கி விட்டது, சரவெடி மத்தாப்பு. வான வேடிக்கை என்று ஊரே அமர்க்களப்பட்டது, எங்கு பார்த்தாலும் சவால்கள் அறைகூவல்கள். வாக்குறுதிகள் என்று ஏகப்பட்ட பேரோசைகள் எல்லாம் அமைதியான போது மாமா வெற்றி பெற்ற செய்தி ஊரெங்கும் மழையாக கொட்டியது,

மாமாவின் அதிர்ஷ்டமா? எங்களின் துரதிஷ்டமா என்பது தெரியவில்லை, எங்கள் மாவட்டத்தை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இல்லையென்பதினால் ஒரே மாதத்தில் மாமா அமைச்சராக்கப்பட்டார், இருபத்தி நான்கு மணி நேரமும் எங்கள் வீடு வெள்ளை வேட்டிகளாலும். காக்கி சட்டைகளாலும் போர்க்களம் போல் காணப்பட்டது, அமைதியும் நிதானமும் அரசியல்அமர்களத்திற்குள் எங்கோயோ ஓடி ஒளிந்து கொண்டது, தொழில் நிர்வாகம் எல்லாம் நான் ஒருவனே பார்க்க வேண்டிய நிலை வந்து விட்டது, மாமா வீட்டில் இருக்கும் காலம் மாதத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ தான், அந்த கூட்டம். இந்த கூட்டம் என்று ஏகமாக அலைந்தார்,


ஒரு நாள் அம்மா என்னை கூப்பிட்டு உன் அத்தை ரொம்ப வருத்தப்படுகிறாள். அவளை நீ ஆறுதல் படுத்து என்று சொன்னார்கள், எனக்கு ஒன்றுமே புரியவில்லை, அத்தைக்கு என்ன திடிர் வருத்தம், புருஷன் ஊரே கொண்டாடுகின்ற அமைச்சர் பிள்ளைகள் எல்லோரும் நல்ல நிலையிலே இருக்கிறார்கள் உடம்புக்கும் ஒன்றும் பெரிதாக இல்லை அதனால் அம்மாவிடம் வீணாக ஏன் அத்தை வருத்தப்டுகிறார்கள், என்ன காரணம் என்று கேட்டேன் உன் மாமா சென்னையில் ஏதோ வீடு வாங்கியிருக்கிறானாம், இதை அவளிடம் சொல்லவும் இல்லையாம் என்றார்கள், இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது ஆயிரம் வேலையில் மறந்து போயிருப்பார் மேலும் மாமா எப்போதுமே எதையும் சொல்லி கொண்டு செய்யமாட்டாரே என்றேன் அதற்கு அம்மா பிரச்சனை வீடு இல்லை, உன் மாமனுக்கு புதியதாக தண்ணிபோடும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறதாம் என்றார், இது நான் எதிர்பார்த்தது தான், உடம்பு முழுக்க சந்தனத்தை பூசிக்கொண்டு கருவாட்டு கடையில் இருந்தாலும் அதன் நாற்றம் நம் மீது ஒட்டாமல் போகுமோ? சட்டையில் சாணி பட்டபிறகு அதற்காக வருத்தப்பட்டு என்ன பயன்?

மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது, ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ள விரும்பவில்லை, அத்தையிடம் ஆறுதல் சொல்ல போனால் மண்ணை கிளறிவிட்டது போல் ஆகிவிட கூடாது என்று சும்மாயிருந்து விட்டேன், மாமாவின் அரசியல் பயணம் கண ஜோராக சென்று கொண்டிருந்தது, அவரிடம் ஒன்றிரண்டு வார்த்தை பேசக்கூட வாய்ப்பு கிடைப்பதில்லை, கட்சிகாரர்களும் அதிகாரிகளும் அவரை சூழ்ந்தே இருந்ததினால் குடும்பத்தனர் கூட நெருங்க முடியவில்லை, ஏறக்குறைய அவர் எங்களிடமிருந்து தனித்தீவாக பிரிந்து போய்விட்டாரோ என்று கூட தோன்றியது, அந்த நேரத்தில் தான் மாமாவின் கட்சிக்காரர் ஒருவர் ஒரு குண்டை தூக்கி போட்டார்,


உங்கள் மாமா பூனையை பிடித்த எலி படத்தினுடைய கதாநாயகியோடு சென்னையில் கண ஜோராக குடும்பம் நடத்துகிறார் போல் இருக்கிறது என்றார், வானம் இடிந்து தலையில் வீழ்ந்தது போல் இருந்தது என்பார்களே அப்படி இருந்தது எனக்கு அடுத்த விநாடியே சொன்னவன் மீது கோபம் கொப்பளிக்க சட்டையை பிடித்து உலுக்கி கண்ணத்தில் ஓங்கி அறைந்து வெளியே போடா என்றேன், ரைஸ்மில் ஊழியர்கள் எல்லோரும் கூடி விட்டார்கள், நான் விரல் அசைத்திருந்தால் அவன் கை. கால்கள் முறிந்து போயிருக்கும், அவன் நடுங்கி விட்டான், பயத்துடன் பின்வாங்கி அவன் வாசலுக்கு சென்று சினிமாகாரியோடு கூத்தடிக்கும் போதே இத்தனை ரோஷமா? என்று நக்கலாக பேசினான்,

முதல் முறையாக மாமாவை பற்றி இப்படியொரு விமர்சனத்தை மற்றவன் சொல்ல கேட்கிறேன், கோபம். மனகொதிப்பு. ஆக்ரோஷம் எல்லாம் வந்தாலும் அளவிட முடியாத அவமான உணர்வு என்னை ஓங்கி தலையில் அடித்தது, விவரம் தெரிந்த நாளிலிருந்து கடவுள் மாதிரி நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை யாரோ தெருவில் போகின்ற ஒருவன் வாய்க்கு வந்ததை பேசினால் அதை கேட்கும் தைரியம் எனக்கில்லை, உடல் நடுநடுங்க நாற்காலியில் விழ்ந்து விட்டேன், ஊழியர்கள் எல்லோரும் ஓடி வந்து என்னை சமாதானப்படுத்தினார்கள், அவனை வெட்ட போவதாக கூச்சல் போட்டார்கள், எல்லோரையும் அமைதிபடுத்திவிட்டு பெட்ரோல் பங்க் கணக்கை பார்க்க புறப்பட்டேன்,

அந்த சம்பவம் நடந்து ஒரு மாதமாகி கூட என்னால் சகஜ நிலைக்கு வரமுடியவில்லை மீண்டும் மீண்டும் அவன் சொன்ன வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது, நடு மண்டையில் ரம்பம் போட்டு அறுத்தது போல் வேதனையை கொடுத்து கொண்டேயிருந்தது, என் மனகுமச்சலை அம்மா எப்படியோ கவனித்துவிட்டார்கள், ஏன் எப்பவும் ஏதோ போல இருக்கிறாய், தொழிலில் ஏதாவது பிரச்சனையா? விவரம் தெரியாமல் எதையாவது நஷ்டப்படுத்தி விட்டாயா? என்று கேட்டார்கள் அவர்களுக்கு எப்போதுமே தம்பியின் பொருட்கள் குறைந்து விட கூடாது, நஷ்டம் வந்துவிட கூடாது, என்று அக்கறை உண்டு, இப்போது குறைவுபட்டு போயிருப்பது பொருளல்ல, தம்பியே தான் என்பதை அவர்களிடம் எப்படி சொல்ல?


அன்றிரவு பத்து மணியிருக்கும், பெட்ரோல் பங்கிற்கு எண்ணெய் லாரி சரியாக வந்து சேரவில்லை, ரைஸ்மில் பெல்ட்டில் தொழிலாளி ஒருவன் கையை விட்டுவிட்டான், என்று காலையிலிருந்தே ஏகப்பட்ட தொந்தரவு படுக்கையில் படுத்து கண்களை மூடு என்று அசதி நச்சரித்தது, சில எழுத்து வேலை வேறு மண்டையை குடைந்தது,

அந்த நேரத்திடல் வாசலில் கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது, படைபட்டாளத்தோடு மாமா வந்துவிட்டார் என்பதை போலிஸ் சைரன் சத்தமும் உறுதிபடுத்தியது, எந்த ராத்திரியானாலும் மாமா வந்தவுடன் எழுந்து போய் அவரை பார்த்து விடுவது என் வழக்கம் என்பதினால் அவசர அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கினேன்,

வழக்கமான கைதடிகளின் கூட்டம் மாமாவோடு வரவில்லை, மாறாக இரண்டு பெண்கள் வந்திருந்தனர், ஒரு பெண்ணிற்கு குறைந்தப்பட்சம் அறுபது வயதாவது இருக்க வேண்டும், ஆனால் செய்திருந்த அலங்காரம் நிச்சயம் அந்த பெண்ணின் ஒழுக்கத்தை சந்தேகப்பட செய்யும், இன்னொரு பெண் முப்பது வயதுக்கு கீழ்தான் இருக்க வேண்டும், அலங்காரம் அவளிடம் குறைவு என்றாலும் மனதை கிறங்கடிக்கும் மயக்கும் அழகு ஒன்று அவளிமிருந்து பளிச்பளிச்சென்று மின்னியது, நான் அடிக்கடி இவளை டி,வியில் சினிமா பாடல்களை பார்க்கும் போது பார்த்திருக்கிறேன், மிக நளினமாக நடனமாடுகிறாள் என்று நானே மனதிற்கள் வியந்தது உண்டு, ஆனால் இவர்களை ஏன் மாமா கூட்டி வந்திருக்கிறார் என்று தெரியவில்லை,


தூக்க கலக்கத்திலிருந்து எழும்பி வந்திருந்த என் மனைவி தகப்பானரை பார்த்து அப்பா யார் இவங்க. சினிமாவில் வரவங்க மாதிரியே இருக்காங்க என்று கேட்டாள், அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மாமா அம்மாவை பார்த்து அக்கா இவர்களுக்கு தங்க ஒரு நல்ல அறையை ஏற்பாடு செய், இவர்கள் இனி இங்கே தான் தங்குவார்கள் என்று சொன்னார், அவர் குரலில் முன் எப்போதும் இருந்திராத ஒரு நடுக்கம் இருந்ததை என்னால் உணர முடிந்தது, பேஷா தங்கட்டும்டா ஆனா இவங்க யார் என்று தெரிய வேண்டாமா? என்று அம்மா கேட்கவும். சொன்னதை பேசாமல் செய் சும்மா சும்மா கேள்வி கேட்டு தொண தொணக்காதே என்றார், அம்மா வாயடைத்து போய் நின்று விட்டார்கள், ஒரே வார்த்தையில் எல்லோரையும் அடக்கி விட்டோம் என்ற திருப்தியில் தனது அறையை நோக்கி நகர முயன்ற மாமாவை முன்வந்து தடுத்தார், மைதிலி அத்தை நில்லுங்க உங்க அக்கா கேட்ட கேள்விக்கு சரியா பதில் சொல்லிட்டு அப்புறமா போங்க இதுவரை நீங்க அக்காகிட்ட இப்படி பேசினதேயில்ல, இன்னைக்கு நீங்க பேசறத பார்த்தா உங்க வார்த்தையில ஏதோ கள்ளத்தனம் தெரியுது என்று சத்தமாகவே கேட்டார்கள்,

அம்மாவிடம் மாமா கோபமாக பேசியதோ. அத்தை மாமாவை நிக்க வைத்து கேள்வி கேட்டதையோ இதுவரை எங்கள் வீடு பார்ததேயில்லை, ஒரு ராஜாவின் ஆனைக்கு அடிபணியும் அரண்மனை ஊழியர்கள் போல தான் வீட்டில் எல்லோருமே நடந்து கொள்வார்கள், அதிகாரமுள்ள அரசனை நிற்க வைத்து பணியாள் கேள்வி கேட்டது போல் இந்த காட்சி எனக்குட்பட்டது, அத்தையின் இந்த திடிர் மாற்றம் மாமாவை நிச்சயம் அதிர்ச்சியடைய செய்திருக்க வேண்டும், கலவரம் அவர் முகத்தில் தெளிவாக தெரிந்தது, ஆனாலும் அவர் அதை மறைக்க முயற்சித்தார், மைதிலி அமைதியாக இரு எல்லாம் காலையில் சொல்கிறேன் என்று சமாளித்து பார்த்தார், அத்தை விடவில்லை இல்லை முடியாது இங்கே. இப்பொழுதே சொல்லியாக வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பேசினார், அம்மா சிலை போல் நின்று கொண்டிருந்தார், மாமா சிறிது நேரம் மௌனமாக நின்றார்,


பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர் போல் உங்களுக்கு இப்போது இவர்கள் யார் என்று தெரிய வேண்டும் அவ்வளவுதானே கவனமாக கேளுங்கள் என்று அந்த இளம் பெண்ணை சுட்டிக் காட்டி இவளை தான் நான் இரண்டாம் தாரமாக கட்டிக்கொள்ள போகிறேன், இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் வைத்து கொள்ள போகிறேன் என்றார்,






அந்த வார்த்தைகள் எல்லோருக்குமே இடியோசையாக கேட்டிருக்க வேண்டும், எல்லோரும் அமைதியாகி விட்டார்கள், புதிதாக வந்த பெண்கள் கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் போல் தோன்றுகிறது, அவர்களும் அதிர்ந்து தான் போய் நின்றார்கள், அம்மா நின்ற நிலையிலிருந்து தலையை கையில் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டர்கள், என் மனைவிக்கு இதயதுடிப்பில் வேகம் ஏற்பட்டிருக்க வேண்டும், மாடி கை பிடியை பிடித்து கொண்டு நின்றவள் அப்படியே சாய்ந்துவிட்டார் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, மனிதர்கள் தவறு செய்தால் கடவுளிடம் போய் முறையிடலாம், இங்கு கடவுளே குற்றவாளியாக நிற்கிறார், நான் யாரிடம் போய் முறையிட,


மைதிலி அத்தை நிதானத்துதக்கு வந்தார் போல் காணப்பட்டார், என் அருகில் வருமாறு அழைத்தார், நீ என் நாத்தனார் மகனாக இருக்கலாம், என் மகளுக்கு தாலி கட்டிய புருஷனாகயிருக்கலாம், ஆனால் நீ எனக்கு மகன் அப்படி தான் நான் உன்னை வளர்த்தேன், இப்போதும் என் நெஞ்சுக்குள் அந்த நினைப்பு தான் நிறைஞ்சி கிடக்கு, புறப்படு என்னையும் கூட்டிக்கிட்டு போ, இங்கிருந்து ஒரு தூசி துரும்ப கூட நாம எடுக்க வேண்டாம், யார் கடையிலாவது கணக்கு எழுதி எனக்கு சோறு போடு முடியலன்னா மூட்டைதூக்கு ஒழுக்க கெட்ட புருஷனோடு வாழ்றவ பேரு பொம்மனாட்டி இல்ல, வெறும் பொணம் இந்த மனுஷன் செஞ்ச தப்புக்கு கொலையே செய்யலாம், ஆனா இவன் உயிரோடுயிருந்து தப்பு பண்ணிட்டோம் என்று நினைச்சி நினைச்சி சாகனும் என்று என் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு வாசலை பார்த்து நடந்தார், அவரது அன்பு பிடியை உதற எனக்கு தைரியமில்லை,


அத்தையின் கண்களில் அழுகை இருந்தது ஆக்ரோஷம் இருந்தது என்னை தர தர வென இழுத்துக் கொண்டு வெளி வாசலுக்கு வந்தார் வாசலில் காவலுக்காக நின்ற ஒரு போலிஸ்காரர் அத்தையை பார்த்து அவசர அவசரமாக சல்யூட் வைத்தார் அவரின் உத்திதியோகத்தில் நல்லவர்க்கு வைத்த முதல் சல்யூட் இதுவாகத்தான் இருக்கும்