Wednesday, November 23, 2011

காற்றிலேறி கவிதை செய்து....


நெருஞ்சி முள்ளாய் 
வீழ்ச்சியின் கரையிலும் 
குத்துக்கொண்டு நிற்கும் 
உன் நினைவுகளை 
என்னவென்று சொல்ல....!

தொலைவானக் காகம் 
தூக்கி விசிறிய விதையில் 
விளைந்த விருட்சம் போல 

வெகு நாள் முந்தைய உன் 
பிரிவின் வலிகள் புதைந்து 
துளிர்ந்த்து பூக்கள் இல்லா 
நெரிஞ்சிமுள்ளாய் செழித்துக்கிடக்க 

பசுந்தேகம் சிதைக்காகும் 
மரக்கரிக்கு முந்தி இருக்குமா உன் வரவென 
மலையோரம் மருங்கி நிற்கும் 
மரமாகநான் வருவாயோ 

மரம்தானென மறுதலித்துப்போவாயோ 
பதில் சொல்லாய் தென்றலே...!
உன் திசை பார்த்து கிளையசைத்து...!
காத்திருக்கிறேன்...!


No comments: