Wednesday, November 9, 2011

நாணல்...


வெள்ளி மலையுருகி
வீழ்ந்து கிடக்குதென் வானம்..!

தண்ணீர்ப்பொய்கையில்
லயித்துப்போகிறேன் நானும்...!

கலைந்த மேகத்துக்கிடையில்
அலைந்து திரியும்
தென்றலுக்கும் எனக்கும்
முகவரி என்று ஏதுமில்லை..!

கரைப்யோரம் முளைவிட்ட
நாணலாய்...!
நானும்

காற்றசைக்கும் திசைக்கெல்லாம்
வளைந்து கொடுக்கிறேன்...!

ஆனாலும் சாயாது நிற்கும்
சிறு வேர்கள்
உதவியில்
எனக்கான திசையாம் வான்
நோக்கியே...!

-இனிய மாலை வணக்கம்..!

ஃஃஃகார்த்திக் ராஜாஃஃ


வெள்ளி மலையுருகி
வீழ்ந்து கிடக்குதென் வானம்..!

தண்ணீர்ப்பொய்கையில்
லயித்துப்போகிறேன் நானும்...!

கலைந்த மேகத்துக்கிடையில்
அலைந்து திரியும்
தென்றலுக்கும் எனக்கும்
முகவரி என்று ஏதுமில்லை..!

கரைப்யோரம் முளைவிட்ட
நாணலாய்...!
நானும்

காற்றசைக்கும் திசைக்கெல்லாம்
வளைந்து கொடுக்கிறேன்...!

ஆனாலும் சாயாது நிற்கும்
சிறு வேர்கள்
உதவியில்
எனக்கான திசையாம் வான்
நோக்கியே...!

சின்னவண்ணப்பூக்கள்
சிந்தும் தேன் அருந்த

தும்பியாய் மாறுகிறேன்..!


கற்கள் மலைப்பாதை
கடந்து நான் போக

காற்றாய் மீளுகிறேன்..!


என் எழுத்தின்
கறைபடாத இடங்களின்
இயற்கை குடியிருப்புகளை
கவிதை தினம் செய்ய

கடந்தே ஓடுகிறேன்..!

ஃஃஃகார்த்திக் ராஜாஃஃ

No comments: