Wednesday, November 23, 2011

சின்னஞ்சிறுக்குறும்புக்காரியின் வெள்ளைச்சிரிப்பில்...



அரிதாரம் சூடா அவதானப்பூக்காரி 
கள்ளமில்லை சிரிப்பில்..

கபடமில்லை குறும்பில்
வெள்ளையாடையில்லா 
வெட்கம் சிந்தும் தேவதை...

செல்லநாய்க்குட்டிக்கும் 
முத்தம் சிந்தும் இவளின் 
முகத்தில் தெரிகிறான் 
அத்தனைக்கடவுளும் 

பூக்களை இவள் தலையில் சூடி 
இருக்கிறாளா... பூக்கள் இவளின் 
மேல் பூத்து சிரிக்கிறதா 
வித்யாசம் தெரியாது தவிக்கும் 

வெள்ளைப்பூவிவள்..!
போதும் கொஞ்சம் நிறுத்திக்
கொள்ளத்தான் கூடாதா ..?
உன் புன்னகையாள்  நாளுக்கு நாள்
வானில் நட்ச்சத்திரங்களின் பெருக்கம் 

நீ அமைதியாய் இருந்து 
என்னை ஆர்ப்பரிக்க 
வைக்கிறாய் கவிதைகளால்...

ஆர்ப்பரிப்பாய் எழுகிறது 
அமைதி மறந்த சூழலாய் 
ஒரு ஹைக்கூ...நீ சிரித்து 
விளையாடும் போது...

-கார்த்திக் ராஜா


No comments: