Wednesday, February 15, 2012

கடல் இரயில் யானை...!


நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு குறைந்த கால அவகாச இரயில் பயணம் அமையும் வாய்ப்பு கிட்டியது...! வசதியாகப்பட்டபோதும் நேரங்கடந்த சில காத்திருப்புகளைத்தவிர்ப்பதற்காக ரயில் பயணங்களை தவிர்த்து வந்தேன்..!
ஆனால் இன்று எதிர்பாராவிதமாக அமைந்தே விட்டது ..!
 ஓர் “இரயில் பயணம்”

 “கடல்  இரயில்  யானை”  -மூன்றும் ரசனையின் சலிப்புகளுக்கு அப்பாற்பட்டவையென கவியொருவன் வரிகள்  கண்முன் நிழலாடுகின்றது.

                          


     
                         


      
இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு இரயிலில் பயணம்..!  





கடல் இரயில் யானை  - மூன்று சங்கதிகளும் ஒரே நாளில் கிட்டிய  சுகானுபவம்..
சிறுவயதில் யானை பார்த்து சிலிர்த்தவருக்கும் மிரண்டவருக்கும் உள்ளுக்குள் இன்றும்  ஒரு மிரட்சி  தோன்றத்தான் செய்கிறது, கடலிடமும் இருக்கலாம்..! ஆனால் கடல், ரயில் அடிக்கடிப்பார்த்து பழகி  நெருங்கிய அளவுக்கு அவைகள் நெருக்கம் இல்லாமல் போனதால் அஃறிணைகள் கண்டால் அம்மிரட்சி ஆர்வமாய் தலை தூக்குகிறது..!

இந்தவாரம் அமைந்த இரண்டாவது பயணமிது..! ஆம் இருநாள் முன் தென்பொதிகைச்சாரல் இறங்கும் நாகர்கோவில் நகர்வலம்,
சக்கரங்களை காலில் கட்டிப்பறக்கும் மக்களுக்கு இடையே ஓர் அமைதியான பிரதேசம் நாகர்கோவிலுக்கருகே அமைந்துள்ள இயற்கை வளம் சூழ்ந்த விவசாய கிராமம்..அது!..
என்ன இருந்த போதும் பயணங்கள் எனக்கு சலிப்பதே இல்லை!

No comments: