Thursday, February 9, 2012

அகர முதல என்போம் ... அடிமைத்தனம் கொல்வோம்..!


உயிர்மெய் ஆய்தம்
உயிரளபடை ஒற்றளபடை
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஐகார குறுக்கம் ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கமென
எம் வாழ்க்கை
சார்பு எழுத்துக்கள் போல எவரையேனும்
சார்ந்தே போய்விடுமா!

குறிலும் நெடிலுமாய்
குன்றலினும் நெஞ்சம் நிமிர்த்தி
களத்தில் ஆயுதமாய்

உயிரெழுத்தாய் துடித்த
பொங்கியெழு தமிழ்க்கூட்டம்

மென்மை மறந்து
வன்மமேறிய
இடையினர் துரோகத்தால்

முதன்மையிழந்த தமிழ் யாம்! ...!

விடிந்தெழுமென...!
ஏக்கமாய்...! வேலிக்குள்
விட்டிலாய்..!

-கவிதைக்காரன்..

No comments: