Thursday, February 9, 2012

பள்ளி ஆசிரியர் கொலை...!? எங்கே செல்கிறது இளைய சமுதாயம்


சென்னை பாரி முனையில் பள்ளி  வகுப்பறையிலே ஆசிரியர் உமா மஹேஸ்வரி படுகொலை மாணவன் வெறிச்செயல்...!


# அன்று டாக்டரை கொன்னாங்க? இன்று ஆசிரியரை கொல்றாங்க
சட்டம் ஒழுங்கு சீர் குலைவுன்னி எதிர்கட்சியும்
வகுப்பறையிலும் , மருத்துவ மனையிலும் நடந்த கொலைக்கு சட்டம் ஒழுங்கு எவ்விதத்தில் பொறுப்பாகும்ன்னு ஆளுங்கட்சியும் ...


அடிச்சுக்கும்..! ஆசிரியர்கள் போராட்டம் கிளம்பும்...
ஸ்டரைக் நடக்கும் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படும்... பள்ளிக்கு வரும் ஆசிரியர் உயிருக்கே உத்திரவாதம் இல்லை மாணவச்செல்வங்களை எப்படி பள்ளிக்கு அனுப்ப என பெற்றோர்கள் தயக்கத்துக்கும்  ஆளாக தொடர்ச்சங்கிலி போல பாதிக்கப்பட்டுக்கிடக்கிறது...! சமுதாயம்


 சிந்தித்து பார்க்கையில் எங்கே போகிறது இளைய சமுதாயம்..! கொலைகள் இவ்வளவு எளிய விசயமாகவும்.,.. உயிர்கள் கிள்ளூக்கீரையாகவும் கிள்ளி எறியப்பட்டுக்கொண்டிருக்கிறதன் விடிவுகாலம் தான் என்ன?


காம்பஸ் பிடிக்க வேண்டிய கரங்கள் கத்தியைப்பிடிக்கின்றது..
கைகட்டி வேடிக்கை பார்ப்பதினாலோ மறதிகளினாலோ சீர்பட்டுவிடுமா இச்சமுதாயம்! 

No comments: