Saturday, May 26, 2012

அது ஒரு அழகிய ஹைக்கூ.... காலம்! [ மகிழம்பூII ]



***உறங்கிக்கொண்டிருந்தஏரியின்உறக்கத்தை கெடுத்ததுஒற்றை நீர்குமிழ்.
***
தூண்டில்காரனின்தக்கை மேலேதும்பி அமரும்நேரம் ஹைகூவானது...
***
பிரசவம் இலவசம்ஆட்டோவில்இருக்கு ஆஸ்பத்திரியில்இருக்கவேண்டியது..
***
அரளிச்செடிக்குபூ-பூத்த மகிழ்ச்சிபிள்ளை பெற்றெடுத்தாள்மலடி..த்தாய்..
***
வேதம் ஓதும்சாத்தான்கள்கள்ளுக்கடையில்மதுகேடு வாசகம்.
***
மழை கொட்டியதுவிற்ற நிலத்தை நினைத்துவிம்முகின்றான்விவசாயி
***
மழலை சொன்னதெல்லாம்புரிந்ததாய் சிரிக்கிறான்நான் அவன் சிரிப்பதுபுரியாமல் ஏதேதோசொல்கிறேன்
***
கட்டப்பட்ட கண்களோடுதராசின் அடியில் புளிஒட்டப்பட்டதை அறியாநீதிதேவதை...
***
கோடையில்வீதிக்கு வீதிகுயவனின் கைவண்ணம்மண்பாண்டதண்ணீர்பந்தல்..
***
நள்ளிரவுநாய்கள் ஊமையாய்போனால் பகலில்பூட்டை உடைத்ததாய்ஒப்பாரிவைத்திருக்கும்மனிதர்கள்.
***
லெவல்கிராஸிங்கில்எப்போது இரயில்போகுமென தந்தைஎப்போது இரயில்வருமென பிள்ளை
***
கிளைவெட்ட வெட்ட தளிர்க்குதுமரம். துணைவெட்டியதால்உலருது மனிதம்இளம்விதவை
***
நானும் நீயும்நடந்த பாதைசிறு மௌனத்தின் போதும்விளையாடிக்கொண்டணநிழல்கள்
***
மனிதன் மனிதனாய் வாழஎழுதிய மத நூல்கள்குப்பையில் கிடக்கின்றனமதம் சொல்லி...

***
சற்றொரு நிமிடம்இடறி விழுந்தேன்என் காலுக்கு அடியில்வானம்
***

பறந்துவிடாமல் நீயிறுபிடித்துவிடாமல் -நான்இரசிக்கிறேன்வேண்டுகோள்வண்ணத்துபூச்சிக்கு..

***
யானைக்கும் சிறகுமுளைக்குதுகுறும்புசெய்யும்சிறுவ்னை சுமந்துநடக்கும் போது

***

இதுவரை எந்தகவிதையும்எந்த கவிஞனையும்சமாதானப்படுத்தி இருக்கமுடியாது.- இருந்தால்எழுத்துகள் எப்போதோஅழிந்திருக்கும்

***
விலையேறியேப்போவதால்மொத்த தங்கமும் பாதுகாப்பாய்சில வங்கியில்பல அடகுகடையில்

***
மழையில்நனைந்த குடைஜலதோஷம் பிடிக்குமெனஉலரவைக்கும்சிறுமி

***
ஜாதி மதபேதமில்லைகாகக்கூட்டில்குயிலின் முட்டை

***எரியும் மனதைஅணைக்கும்கண்ணீர்

***

வேலிகாக்க கூலிபயிரை மேய்வது

***
துப்பாக்கிக்கு ரவைவாங்கிய தேசத்தில்பசித்தவனுக்கு கஞ்சியில்லைசோமாலியா

***
’விடுதலை’புத்தகம் எழுதுகிறார்சிறைக்குள்ளிருந்து..

***
வாசகனுக்குவிருந்து வைக்கபட்டினியாகத்துணிபவன்படைப்பாளி!!!

***
பம்மிகொண்டேபோகும் அம்மாவின்அழுகைக்குரலுக்குபதில் தேடியேதேய்த்துப்போகும்சீனத்து டெலிபோன்கார்டுகள்

***

விமானப்பணிப்பெண்ணும்வீட்டுவேலைக்காரியும்ஒன்றாகத் தெரிவதில்லைபலபணக்கார கண்களுக்கு

***
சாவிகளைதொலைத்தவர் பட்டியலில்எப்படியும் இடம்பெற்றிருக்கும்ஒவ்வொருவர் பெயரும்

***
கோவிலுக்குபடியளக்கிறான் பக்தன்கடவுளிடம் பிரார்த்தனையில்லட்சம் செய்தேன் கோடி கொடு

***
அறிமுக நாயகனகவேஅடையாளம் தெரியாமல்போன கோடம்பாக்கத்துவரவுகள்

***
மருந்து வாங்ககாசில்லையெனவிஷம் வாங்கும்பேரறிவாளிவாக்காளன்
***
கனவுகண்டுக்கொண்டேதூங்கிவிடுகிறேன்தூங்கிகொண்டே கனவும்கண்டுவிடுகிறேன்மிச்சமாய் பலிக்காத கனவுகள்

***
குப்பையில் எறியப்பட்டகாகித நெரிசலில்கவனிக்கப் படாதபாதி எழுதிய கவிதைகள்

***
எழுத்துபிழைகளைஅடையாளம் காண்போருக்குகவிதை படித்தஅனுபவம்.மற்றவருக்கு கருத்தைரசித்த அனுபவம்
***
முடிக்கவே மனமில்லாமல்எழுதிகொண்டேபோவதால்ஹைக்’’கூ-வென்றானதோ?!

***-கார்த்திக் ராஜா

No comments: