Friday, June 1, 2012

இசைஞானி இளையராஜா ...!

ராசய்யா... இவரை உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்காது... இதையே நான் இளைய ராஜா என்று சொல்லி இருந்தால் சட்டென புரிந்துகொள்வீர்கள்
ஆம்! அந்த ராசைய்யாதான் பின்னாளில் இந்தியாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா ஆனார்.


அன்னக்கிளி என்ற தமிழ் திரைப்படம் மூலம் திரைத்துரையில் காலடி எடுத்து வைத்தார். அது 1976 ... அதன் பின் நான்கே வருடங்கள் இவரைத் தவிர்த்த எண்பதுகளின் காலம் இல்லையென்றே சொல்லலாம்... வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி எங்கும் இவர் விரல் தீண்டிய தென்றல் வீசாமல் இருந்ததில்லை... 


அற்புதங்களை இசையில் பின்னிப்பிணைத்து இசைப்பேரருவியில் நனைத்து பின் தலைதுவட்ட நெருங்கி வரும் அன்னையின் கரங்கள் போல இசையால் இசைரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்த பண்ணையபுரத்துக்காரர்.. 


இசைஞானி என கலைஞரால் பெயரிடப்பட்ட அன்னைக்கு அன்புசெய் மனம் கொண்ட அற்புத மனிதர். இசைஞானி இளையராஜா...
இதுவரைக்கும் நான்கு முறை தேசிய விருது கலைத்துறையின் படைப்பிற்கான சாரா விருது... பத்மபூஷன் விருதுகளை தமிழ்நாட்டுக்கு அள்ளிக்கொண்டு வந்தவர்...


இதையெல்லாம் விட அதிகம் இளைஞர்களின் , உறக்கத்தை கெடுத்தவர், கொடுத்தவர்,..... ஆம் வரமும் சாபமும் கொடுக்கும் இசைக்கரங்கள் இவருடையது... 


சிறுபொன்மணி இசைக்கும்....!
அன்னக்கிளி உன்னைத்தேடுது...!
மச்சானைப்பார்த்தீங்களா...!
ஜனனி ஜகம் நீ....!


இன்னும் இன்னும் இதமாய் இனிக்கும் கானங்கள்.. 




உங்கள் இசைக்கு யார் வாரிசு என்று கேட்டால் சட்டெனச்சொல்வார் “நீங்கள்” -தானென்று... ஆம்... அவர் பார்வையில் இசை எல்லோருக்கும் பொதுவானது அதற்கு யாரும் வாரிசாக முடியாது என்றவர். ரசிகனைத்தவிர...


எனை உறங்கச்செய்யும் “கல்யாண மாலை” இசைத்தவருக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...! 


 


உண்மையில் அவரதுபிறந்த நாள் நாளைதான்.... ஜூன்- 3
ஆனால் அன்று கலைஞரின் பிறந்த நாள் என்பதால் கொண்டாடுவதில்லை... 
எது எப்படியோ எங்கள் இசையுலக கலைஞன் ரசிகனை வாரிசென்னும் 
ஞானிக்கு மீண்டும் “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!”




அன்பன் -.
.கவிதைக்காரன்!!! 

1 comment:

கற்பகம் said...

'நேற்று இல்லை, நாளை இல்லை, எப்பவும் நீ ராஜா'...