Thursday, February 9, 2012

ஒரு விபத்தின் மறுபக்கத்தில்...!? கேள்விகள்


நேற்று இரவு வீட்டுக்குப்போகும் போதே அண்ணன் கொஞ்சம் சோகமாக டி.வி முன் அமர்ந்திருக்க என்ன வழக்கமாக கனாகாணும் காலங்கள் பார்த்துக்கொண்டிருப்பாரென.. கடந்துபோக நினைத்தவனை அந்த செய்திச்சானலின் முதல் ஒளிக்காட்ச்சி கவர்ந்தது...

ஆம் அது ஒரு துயரச்செய்தி..!

தமிழ்நாடு: தூத்துக்குடி டீச்சர்ஸ் காலனியைச்சேர்ந்த சித்திரைவேல் என்ற நபருடைய மகளுக்கு தேனிமாவட்டம் அருகே மணம் செய்து முடித்து மறுநாள் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தன் உறவினர் அக்கம் பக்கம் உள்ளவர்களோடு தூத்துக்குடியில் இருந்து வேன் அமர்த்தி தேனி அருகே உள்ள தேவாரம் சென்று நேற்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடி திரும்பிக்கொண்டிருக்கும் போது ...

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நக்கலக்கோட்டை கிராமம் அருகே 30 அடி அகலச்சாலையில் வேன் வந்து கொண்டிருக்கும் போது “அடையாளம் இல்லாத” ஸ்பீட் ப்ரேக்கரால் சாலையிலிருந்து நிலை தடுமாறிய வேன் அருகே இருந்த முட்புதருக்குள் பாய்ந்திருந்ததாகத் தெரிகிறது...




தூரதிஸ்டவசமாக அந்த முட்புதர் ஒரு கைப்பிடி இல்லாத “60 அடி ஆழக்கிணற்றுவெளி”... அதிர்வில் தூக்கி எறியப்பட்ட 3 ஆண்கள் மட்டும் தண்ணீரில் தத்தளிக்க.. சம்பவத்தை நேரில் கண்டோர் உடனடியாக 108 -க்கு அழைக்க அவசர அவசரமாக குவிந்தனர் மாவட்டத்தின் அனைத்து தரப்பு அதிகாரிகளும் ... கூடவே “புதிய தலைமுறை” செய்திச்சானலும் நேரடி ஒளிபரப்போடு..! அந்த மூன்று பேரை காப்பாற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க... செய்தியாளர் இராமானுஜம் நேரடியாக நிகழ்வுகளை தொகுத்து தந்து கொண்டிருக்க செய்தியாளர் மதி விவரங்களைச்சேகரிக்க கேள்விக்கணைகளை முடுக்கிவிட்டுக்கொண்டிருக்க சானலை கண்டவர்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்தன்ர்.



மூன்று மணிநேர போராட்டத்திற்குப்பின் இரண்டு கிரேன் மூலம் வேன் கட்டி தூக்கப்பட்டது எஞ்சியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் கிராம மக்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சகாயம், காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் ஆகியோர் நேரில் வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

இரவு 11 மணி அளவில் கிணற்றுக்குள் இருந்து வேன் எடுக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டன. இதில் மணமகளின் தந்தை, தாய், சகோதரன், மூத்த சகோதரி, அவரது குழந்தைகள் உட்பட 10 பேர் உயிர் இழந்தனர்.

இந்த துக்கமான செய்தியின் போது கவனிக்கத்தகுந்த செயல்பாடுகள் .. செய்திச்சானலான புதிய தலைமுறையின் அதிவேக செயல்பாடுகள்.. நேரடியாக மக்களுக்கு விசயங்களை கொண்டுசேர்க்கும் முயற்சியின் போதும் ...
ஒரு நடுநிலையான செய்தி தொலைக்காட்சியாக அவர்களது கேள்விகளை கொண்டு சேர்த்த விதம் உண்மையில் மற்ற சுயலாப சுயவிளம்பர சானல்கள் கற்றுக்கொள்ள வேண்டியது

I.சாலை ஓரம் கைப்பிடி சுவரில்லாமல் இருக்கும் கிணற்றை கிராம நிர்வாக அதிகாரி கவனிக்காமல் விட்டது ஏன்? II.வாகனங்கள் இல்லாவிட்டாலும் அந்த பகுதி குழந்தைகள் தவறி விழுந்தால் என்ன செய்வது சுற்றுச்சுவர் இருக்கவேண்டும் என்ற குறைந்த பட்ச விதியைக்கூட கடைபிடிக்காதது ஏன் ?

III.விபத்துப்பகுதி என்ற அடையாள போர்டுகள் வைக்கப்படாதது ஏன் ?

IV. மாவட்ட நிர்வாகம் இந்த அஜாக்கிரதையான மெத்தனப்போக்கை இனியும் தொடருமா?

இப்படி மக்களின் கேள்விகளை சரியான விதத்தில் சரியான இடத்தில் கொண்டு சேர்க்கும் புதிய தலைமுறையின் நகர்வுகள் கவனிக்கப்பட வேண்டியன...!

சலை வரி செலுத்தாத வாகனங்கள், பர்மிட் இல்லாத வாகனம் , இன்ஸ்யூரன்ஸ் இல்லாத வாகனம் , ஹெல்மெட், லைஸன்ஸ், விதிமுறை பின்பற்றாதது, அளவுக்கு அதிகமான ஆட்கள் கேபினில் என விதிக்கும் அத்தனை அபராதங்களுக்குமாக

ஆளாய்ப்பறக்கும் கேஸ் பிடிக்கும் காவல்துறைக்கும் பொதுமக்களாய் எழும் கேள்வி விபத்துக்கு ஆதாரமான சூழல்களை கண்டு கொள்ளாதது.. ஏன்? சாலைகளின் மேம்பாடு குறித்து அரசுத்திட்டங்கள் நடைமுறைக்கு வர காலதாமதப்படுத்துதல் இவையெல்லாம் பலிவாங்கும் உயிர்களின் எண்ணிக்கைக்கு நீங்கள் கொடுக்கும் லட்சங்களை கொண்டு ஈடு செய்துக்கொளவது தானா உங்களால் இயன்றது..!

“அந்த விபத்துக்காலத்தில் பக்க பலமாக இருந்து உதவிய அத்தனைநல் உள்ளங்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் எனது மனதார்ந்த நன்றிகள் ..!”


-கார்த்திக் ராஜா..!

No comments: