Sunday, April 1, 2012

எனக்கென ஓர் வானம் ... இறக்கைகள் விரித்து

நேற்றோடு எதிர்பார்க்கின்றன
என் மாற்றங்களின் சிறகுகள்
தமக்கும் சொந்தமென ஓர் வானம்
வேண்டுமென்று...!

நானெங்கு போவேன்
என் வீதிக்கே விடைகளில்லாத
கேள்விகள் ஆயிரமாயிரமென்னைச்
சூழ்ந்துகிடக்க..

வானத்தை வசப்படுத்த நான்
கனவைத்தான் கடன் வாங்க வேண்டும்
ஆனாலும் துளிர்க்கும் ஓர் நம்பிக்கை...

துப்புறவுப்பணியாளனாய்...
அகந்தைகளை அகற்றிக்கொண்டே
தினம் கடந்து போகின்றது...மனம்...

என்றாவது வானம் வசப்படுமென்ற
நம்பிக்கையில் நான் உறங்கச்செல்கிறேன்
என் மாற்றங்களை மறுபரிசீலனை செய்துகொண்டே...

-கவிதைக்காரன்

1 comment:

Subasree Mohan said...

படித்தேன், ரசித்தேன்.