Monday, March 19, 2012

விடைகொடுக்கும் ஈரவிழிகள்...நாங்கள்





எட்டுத்திசைகளும் அடையாளங்கள் 
பல கொண்டு இங்கே சங்கமித்து 
கல்விக் கடலிடம் 
அலைபாயும் படகாய் நாங்கள்...


எங்களின் கலங்கரை விளக்கங்களே 
கொஞ்சம் கலங்கி நிற்கும் எங்கள் சொல் கேளுங்கள்




கிழக்கு காற்றாய் காலங்கள் கடந்தோட இதோ 
முடிந்தே போகிறதுங்களின் நான்காவதாண்டு... 
புன்னகைகளுக்கு மத்தியில் கிளர்ந்தெழும் கண்ணீர்த்துளிகளோடே! 


எங்களின் முன்னோடிகளாய் முன் ஆண்டில் பயின்ற 
மூப்புக்கள் உங்களோடு நாங்கள் எல்லாம்
நட்புக்குள் அல்லவா கலந்திருந்தோம்..


பேதங்கள் பாராமல் 
பேர் சொல்லி அழைக்கும் சகோதரத்துவம் 
உங்களிலின்றி வேறெங்கு நாங்கள் கண்டோம்... 


அன்றில் பறவையாய் மீண்டும் மீண்டும் 
இங்கேயே பிறக்க மனமோ அலைபாய 


காலவெள்ளத்தின் கலங்கிய கண்களோடு 
விடை கொடுக்கவேண்டி கரமசைக்கும் 
உங்களை ...


காணும் போது இடம் மாறித்துடிக்கின்றதெங்கள் 
இதயங்கள் இனி எப்போது காண்போமென... 


செவிக்குணவு இல்லாத போது கொஞ்சம் |
வயிற்றிற்கும் ஈயப்படும்... 


எங்கள் நட்பினுக்குணவாய் உங்கள் 
நினைவுகளை எங்களோடு 
விட்டுச்செல்லுங்களேன்...! 


-கவிதைக்காரன் 

2 comments:

ஜீவா said...

அன்றில் பறவையாய் மீண்டும் மீண்டும்
இங்கேயே பிறக்க மனமோ அலைபாய

Unknown said...

வாழ்த்துக்கள்... மீண்டும் பிறக்க...