Tuesday, March 20, 2012

ஆரெனின் கண்டால் சொல்வீர்...



 



செம்பொட்டு புலரும் காலை நிதம்
வானில் பறந்து பாங்காய்..

சிலிர்க்கும் சிட்டே கொஞ்சம்
கேளென் இசைக்கும் நெஞ்சம்...

பெட்டைக்குருவி உன்னை
பேணமறந்து போனோம்..!

முற்றும் அழிந்த பின்னே
இங்கே நினைவுநாளா விளக்குகின்றோம்..

அலைகற்றை எழுப்பும் தாக்கம்
சிதைந்ததெம் மழலை ஏக்கம்..!

உச்சிமிகப்பழுக்கும் வயதில்
காணவோ நீயும் இல்லை...

எத்தனை மரங்கள் கொன்றோம்...!
எத்தனை பறவை தின்றோம்...!

வலைஉலகம் சுமக்கும் பெயரை -எம்மையும்
அறியாமல் வல்லூறாய் வதைத்தே கொன்றோம்..

நெற்றை கொடுக்கும் கைகள் -நிதம்
உன்னை காணாது கண்கள் தேங்கும்...!

ரெட்டை சிறகு போதும் ஆரெனின்
எனக்குத் தாரும்...

பீடித்த மானுடம் வேண்டாம்
நீ வாழ்ந்த வெறுங்கூடெனக்குப் போதும்...

யாரெனில் எனக்குச்சொல்வீர்
ஆங்கோர் குருவி கண்டால்..

-கவிதைக்காரன்

No comments: