Saturday, April 16, 2011

லண்டன் 1990

கல்யாணப் பந்தியை,
எட்டிப் பார்க்கும்,
ஏழைச் சிறுவனின்
ஏக்கத்தை
இன்று...
உணர முடிந்தது...!
*வீடு கிடைக்கும் வரை
26 நாட்களை
ஒரு கெஸ்ட் ஹவ்ஸில்,
மகன்,மகளுடன்
ஒண்டுக்குடித்தனத்தில்
முடங்கிக் கிடந்த
வேளையில்
எங்கள் உணவு
காலையில் ரொட்டி ஜாம்
மதியம் ரொட்டி ஸாஸ்
இரவு ரொட்டி சீஸ்
என்று வகை வகையாய்
நளபாகத்தில்..காய்ந்திருந்தேன் என்று*
1990செப்டம்பர்
லண்டன் சென்று வந்த சித்தியின்
வார்த்தைகளை கல்யாணவீட்டில் கேட்டபோது....

No comments: