Friday, April 15, 2011

இந்த கவிதை (?) புரியாமல் போன நண்பர்களுக்காக!
நண்பர் ராயபுரம் ரிக்ஸாரவிகிட்ட கொடுத்து சென்னை தமிழில்
மொழிபெயர்ப்பு செய்த இடுகை கிழே.....

சேர வளப் பெருநாட்டின் =நம்ம கேரளா பக்கத்துல
கொற்றைவன் மேலவளக்காட்டின்..=மேற்கு தொடர்ச்சி மலைக்கு அப்பாலிகா
வானுயர்காட்டில் அன்றோர் = கொச கொசன்னு பெரிய காடு
பதிகம் வேட்டைக் = க்ரூப்பா
கணட்டியர் புரவியாலோடி=ஒரு ராசா குதிரைய இஸ்த்துகினு
மாலம் சொற்ற நின்றான் ..=வேட்டைக்கு போய்கினான்

தனித்துவ மானொன்றை = டிப்ப்றேண்டா கீதேன்னு ஒரு மான பார்த்து
தணிக்கையாய் துரத்திட..= சிங்குலா போய் மிங்க்ல் ஆய்கிட்டான்
தடம் மறந்த தலைஞ்சனுமானன்= pathavera மண்டைல புர்ர்யல..
கொற்றவனின் உடைவும் = ராசாவோட வாழும்
மற்றாண்டை புரவியுமாய் = அரேபியால இர்ந்துஇஸ்த்துகினுவந்தகுதுரையுமா

மருதக்காட்டில் தனித்திடலுற்றான் = காட்டுகுள்ள சிக்கிகுனான்

செரப்பைபூ திலுமிய..= இன்னமோ புதுசாகிற பூவா தெரியுற காட்டுல

சோழவளக்காட்டில் தனித்து திரியும் = போம்போது
பொழுதினில் புங்கை மாற வேர்த் = சவுக்கு மரமாண்ட..
திட்டில் விரைவாய் துடித்த சிறகாய் = ரெக்கைய ஆட்டிகினே
நீலாட்டில் குருவியோ ன்றுவேடனொரூ = குருவி ஒன்னு கிடன்துச்சா
துளைத்த அம்போன்றில் = எதோ ஒரு கஸ்மாலம் குருவிக்காரன் அம்புபட்டு

நீர்த்திருந்த உயிரைக் கண்டு உளமதில் = சாவ போற கண்டிசன்ல
துடித்த தலைஞ்சன் தன்க்குறு = மன்சு கேக்காம
வாழ் கொண்டு துளைத்த அம்பை = கைல இருந்த தம்மாதுண்டு கத்திய வச்சி
தழித்தேடுத்து உயிர்த்துடிக் = நெம்பி எடுத்து
கும்பறவையொன்றின் உயிர் காத்த = காப்பாத்தி புட்டான்பா
உயருள்ளலாய் ஆகியதுணர்ந்தே = இன்னாமா வேல செயஞ்சன் தெர்யுமா..

நீர்தாடகை தேடி விரைந்தே..பெயர்ந்தானன் = அப்பாலிகா தண்ணிகாவ
நீரும் கண்டு வழிகாட்டிப்பறவையான = போய் கண்டுக்கினான்
நீலாட்டின் குருவி கொற்றவனின் = அந்த குர்வி சொக்க வலி சொல்லும்பா
உய்வால் நெய்வுரப்பெருகிறது = அத வைசுகினே நம்மாளு எஸ்ஆகிட்டான்போ

அன்டிலோர் கட்டை கடந்திட்ட = அப்பிலருந்து
மன்னான் அன்றிருந்து அம்பேய்திட = மவராசன் உண்டிவில்ல
திடமில்லா தீரனுமாணன். = கைலையே தொடலா
எத்துணையே உயிர் பிரித்து = இத்தன..அனிமல்ஸ கொன்னவன்
விளையான்டிட்ட காட்டில் = தெரியுமா..காட்டுகுள்ள

மனமாற் பெற்றிடவோர் காரணமாய் = மன்சு மாரிடான்பா
அமைந்த அக்குருவி-க்கு மன்னவனின் = அந்த சொக்கா போலச்ச குருவிக்கு
மைந்தைப்போல் ஒற்றைக்கால் இலுப்பை = நம்ம தல-யோட மவன் மாதியே

கால்ல சோர்ஸ் இல்லபா..



-கார்த்திக் ராஜா = இந்த பேஜார் புட்ச்சவந்தான் இத எழுதுனாணமாம்....

No comments: