Monday, May 23, 2011

மழையானவள்....

செம்மண் பூமியை புரட்டி போட்டாற்போல்
வானம்...செக்கசிவப்பாய்..
விரைவே மழைக்காரியை
அழைத்து வந்து நனைத்துசெல்வேன்
என மிரட்டும் அந்திப்பொழுது....!!!

யார் இறந்தாரோ தெரியவில்லை..
கண்ணீரோடு..வீசப்பட்ட மனம் இல்லா
பூக்கள் செறிந்த சாலை..
குறுக்கும் நெடுக்குமாய் கட்சி தோரணம்..

கடைவீதிகளேல்லாம் கண்டன ஆர்பாட்டத்தின்
கீழ் அடைத்திருக்க..முதல்முறை வேலை நிமித்தமாய்
கோவை தரிசிக்க வந்த நாள் இப்படியா வைக்கவேண்டுமென..
உள்ளுக்குள் பொருமினேன்..

என் நேரத்திற்கு..பிப்பிரவரி பதிநாலாய் போக..
சாலையெல்லாம் பசுமை தொலைந்திருந்தது..

சொன்னதுபோல் மழைக்காரி மந்தாரமாக வந்து
வேலை கெடுக்க..செல்லுமிடம் செல்லாமல்
ஒதுக்குபுறமாய் ஓரிடத்தில் நான்..

அன்றைய வேலை தொலைத்த பெருமை எனக்கும்
பறித்த பெருமை மழைக்குமாய் போக..
வீதியில் வடிந்த மழையை...காலில் போட்டு
மிதித்தபடியே..நடந்து போக..

எதிரே திறந்திருந்த ஆபத்பாந்தவணான தேநீர்க்கடையில்
கொட்டை எழுத்தில்..*கோவையில் குண்டு வெடிப்பு *
மழைக்காரியை மிதிக்க மனமில்லை....
மன்னிக்க மழைக்காரி இல்லை இனி மழையானவள்.

No comments: