Monday, May 23, 2011

கடிகார நண்பன்..!

நேரத்தை எனக்காய்
கடத்தியபடியே செல்கிறது..!
அங்கும் இங்குமாய் ஒரு நளின ஆட்டம்
இடையிடையே இசைகோர்வை
வெளியீடு வேறு..!!!

நாள்தோறும்  ஒரே இடத்தை வலம் வந்து.
நேரம் காட்டி செல்பவன்
கடிக்கார  குட்டையில் வீழ்ந்து கிடந்த
என்னை காலம் முந்துவதெப்படிஎன
கற்றுகொடுத்த வித்தைக்காரன்..

என் தாமதத்தையும் கண்டிருக்கிறான்
என் வேகத்தையும் வென்றிருக்கிறான்
எப்போதும் நான் சோர்ந்தால்
ஒலி எழுப்பி அதட்டி சிரிப்பான்!

அந்த ஒலியை ஒழித்து கட்டவே
கடினப்பணிகளையும் விரைந்து
முடிக்க விளைவேன்
யார் கண்பட்டதோ..நேற்றைய இரவில்
விழுந்து கிடக்கிறான் கீழே..

நட்டநடுவே ஓர் கீறல்
என் நெஞ்சிலும் தான்...!
சிதறலாய் போய்விட்டான் என்
கடிகார நண்பன்..!

No comments: