Monday, May 23, 2011

குழல் விளக்கு...

விட்டில் பூச்சி ஒன்று
விரட்டி விரட்டி தொட்டு
விளையாடுகிறது குழல்விளக்கை
அதை இறையாக்க ஒரு பட்சி
காத்திருக்கிறது அறியாமலே!

சுடுமென்றறிந்தா..!
வெளிச்சம் கண்டு தன்னை
மறந்தா எத்தகைய நினைவில்.
சுற்றிவரகொண்டது...

இன்னும் சற்று நேரத்தில்
இரையாகியும் போகலாம்
அந்த சுவர் பட்சிக்கு
இல்லை சூட்டில் இறந்தும் போகலாம்

ஆனாலும் எதையுமே அறியாத
மனதையோ இல்லை
எதையும் புரியா அறிவாயோ
அந்த குழல் விளக்கை
சுற்றி வருகிறது விட்டில்...

விடை என்னவென தெரிந்திடாமலே..
செல்ல மனமில்லை
பார்வையாளனான எனக்கு...!!
விளக்கை அணைத்து வாழ்க்கை கொடுக்கவா?
விரட்டி அடித்து சந்தோசம் பறிக்கவா?

எதையுமே அறியாமல் குழல் விளக்கு ஒளிர்கிறது....

No comments: