Friday, July 1, 2011

தலைப்பு....???

மெல்ல நகரும் இப்பகலில்
கைகள் மேல் தூக்கி
வானத்தை இடிக்க
சோம்பல் முறித்தேன்
ஈரத்துணி
காற்றில் ஆடி நிற்க
நாசியில் அந்தியின் நெடி
நிழலும் வெயிலும்
வெறிகொண்டோடும் இரண்டு
பூனைகளைப் போல் ஓட
வெண்ணிற, சாம்பல் போர்வைகள் வருடி
வெளிவருகிறது வீடு
அங்கே அப்போது அந்நொடியில்
கவிழ்ந்த பேரமைதியில்
இரவைக் காட்டி
தலைக்குள்ளிருந்து சைகை செய்கிறாள்
கண்ணாடி வளையணிந்த
என் ஊமைப்பெண்
ணானவள்..

இன்னும்...! ஓசை அதிகமாகிறது..

No comments: