Friday, July 1, 2011

நிமிடத்தில் கடந்து செல்கிறேன் என்னை....



நீண்ட நாள்கள் கழித்து

ஒரு மலர்க்கொத்துடன் வந்தாய்
என்றோ பறித்த
மலரொன்றின் சருகுகளை
நான் கொண்டு வந்திருந்தேன்
யாருக்காகவோ காத்திருப்பதான பாவனையில்
நம்மைக் கடந்து சென்றன
நிறைய யோசனைகள்
என்றோ நமக்கான
இக்கவித்தருணத்தை
கவிதையாக எழுதியவன்
நம்மைப் பார்த்திருக்கிறான்
மலர்க்கொத்திலிருந்து
ஒரு மலரைப் பிய்த்து நீ எறிகிறாய்
என் கண்ணுக்கு மட்டுமே தெரிவதான
நட்சத்திரம் அங்கே தோன்றியது

No comments: