Friday, July 1, 2011

யார் மீது கோபம்?..

யாருக்காகவோ..
உருவாக்கி வைத்திருந்த
வார்த்தைகளை பொறுக்கி எடுத்து
பேசக் கற்றுக்கொள்ளும்
மகன் மீது எரிந்து விழுகிறேன்
 
வார்த்தைகள் தரும் அர்த்தங்கள்
கானகமெங்கும் முள்ளாய் பரவ
கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து
கல்லெறிந்தவன் கண்முன்னே
 
பைக்கில் ஏறி உட்கார்ந்து
உதடு சுளுக்கிச் சிரிக்கிறான்
 
என்னை முறைக்கும்
மனைவியைப் பார்க்காத
 
பாவனையில் வெளியேறும்
என்னை வழி மறிக்கும் மகன்
 
அம்மாவின் வார்த்தைகளை 
 ஒப்புவிக்கிறான்
 
உனக்கு யார் மீது கோபம்?

No comments: