Friday, December 2, 2011

தலைகீழ் விதிகள்...!





இழுத்துப்பறித்துக்கொண்டதை
எடுத்துச்சூடிக்கொண்டு
பூக்காரி கட்டிய
மாலையில்
உதிர்ந்தன சில பூக்கள்
அவள் முதிர்கன்னி
என்பதை மறைக்க
முடியாமல்..

இருக்கிக்கட்டிப்போட்ட
கைகளுகளோடு
கட்டுமரம் ஓட்ட தார்சாலைக்
கொடுக்கும்
காங்ரீட் மனிதர்கள்
மத்தியில்..
வெற்றிக்கான ஓட்டப்பந்தயம்
எவ்வித முன்னேற்பாடுமின்றி
கால்கள் இல்லாதவனுக்கு

மழையில்
மின்சார்க்கம்பியில்
அமர நினைத்து
வெகுதூரம் தூக்கி எறியப்பட்ட
காகம் கால்களை
இழந்து நேரம் தப்பி பெய்த மழையின்
கால்வாயில் இறந்து கிடக்க
அடுத்த வினாடி
துண்டிக்க பட்ட மின்சாரம்

தெருவோரம்
மின்காரன் வீசிய கழிவுகளில்
உணவைத்தேடிப்பிடித்த
நாய்களுக்கு
பெடிக்ரீ கிடைக்காத சோகம் இல்லை
எனும் போது முறைத்துத்தான் பார்க்கிறது அல்சேஷன்களின்
அழிச்சாட்டியங்களை..

வெற்றி எல்லாம்
விழுப்புண்களில்
அல்ல ;விழுந்தாலும்
எழுந்து நின்றவனுக்கு என கவிதை எழுதும்
கார்கில் போரில்
கால்களை இழந்ததால் வீட்டுக்கு
அனுப்பப்பட்ட முன்னால்
இராணுவ வீரன்..

எங்கும் நெகட்டிவோடு
திரியும்
பாஸிட்டிவ் திங்கிங்
போட்டோக்காரன்
காமிராவுக்குள்
இதுவரை விழாத
தேசிய விருது
புகைப்படம்
கழவப்படவேண்டிய இருட்டு
அறை இன்னும்
வெளிச்சம் பார்க்காமலே
இருக்கிறது..!

வெற்றிக்கு -
இடையே கடக்கவேண்டியதை
நான் எழுதிவிட்டேன்
பார்க்கும் பார்வையில் அதை
எடுத்துக்கொள்லப்போகும்
உங்களுக்காய்
மிச்சமாய் இருவழிப்பாதை
எந்த திசை காட்டுகிறது
உங்கள் திசைமானி..!

No comments: