Friday, March 9, 2012

உடைந்த சில்லுகளாய் மனம்..





என் வழித்தடங்கள் எல்லாம்
வெறுமையால் நிரப்பப்பட...

போகும் பாதையெல்லாம் வேண்டா வெறுப்பாய்
நிலவும் கதிருமென்னை அன்னிச்சையாய்

ஆக்கிரமித்துக்கொள்ள
நிழல் என்னை நீங்காத இருள் என்னை பீடித்துக்கொண்டது..!

பெரும் போக்கிடமில்லாதவனாக
நாடியவரோடேயே நட்போடு அண்டிக்கிடப்பதால்

உனதருமையும் தரமிழந்து போகிறதோ!
மற்றான் மணம் புதிதென்பதால் தானோ

உன்னையே கண்முன் எடைபார்க்கவும்
துணியும் அன்போ...இவையெல்லாம்

எதை எதிர்ப்பார்த்து நின்றாய்
ஏமாற்றம் உன்னைச்சாய்த்துப்போட...கலங்காதே...

இல்லாத அருமை இருக்கும் பேருக்கும்
உணரும் வரை நீயும் நானும் மட்டுமில்லை
தனிமைக்கும் நீயே துணையாவாய்...

சில நேரம் சமாதானப்பட்டுக்கொள்ள முனைந்தாலும்
சட்டென உடைந்த கண்ணாடிச்சிதறல்களாக என்னைச் சாய்க்கப்பார்க்கிறதே.. என்செய்வாய்...
**
முள்ளுக்கு வேலி இல்லை என..
முடங்குதல் அழகோ..!

உன் வானம் பின்னால் ஆயிரம் விண்மீன்...
வாழக்கற்றுக்கொள்வதைக் காட்டிலும்

வாழ்ந்துவிடல் நன்றாமே.. குழந்தையாய்
கொஞ்சம் தவழ்ந்து போவது

தாழ்ந்து போவதிலும் நன்றென்பாய்...
வா... ஒரு மின்னல் மழை ரசிக்க...

வெயில்காலம் மழைக்காலம் மாறி வந்த போதும் கவிதைக்கு குறைவா என்ன உன்னிடம்... !

கவலையை கடவாய் மனிதா!
ஏதுமில்லை வெற்றிடம் காற்றோடும் கதை பேசலாம்..!