Saturday, September 1, 2012

இப்படியோர் இடத்தில்...!


திசைகள் எனக்கு வேண்டாம்...!
தினம் ...இரவு பகல்
எதுவும் வேண்டாம்..!

நீலவானுக்கும்
அலையில்லா கடலுக்கும் நடுவே பச்சையாய்ப்
பூத்திருக்கும்
சிறு மண் மேட்டில்...!

சிறகடித்துத் திரியும்..
சிட்டுக்குருவி கூட்டில்..-வாழ
ஒற்றைக்குரலில்
ஓர் வரம் வேண்டும்..!

பசி தூக்கம்
வேண்டாம்,
 பகை நட்பும்
வேண்டாம்..!

கள்ளம் வைத்துப்
பேசும் உள்ளங்கள்
எப்போதும் வேண்டாம்...!

அன்பும் ஆசையும்
வேண்டாம் ; அவையெல்லாம்
அரவணைக்கிறேன் பேர்வழி -என

என்னைப் பதம் பார்த்துப்போன
காயங்கள் இன்னும்
ரணப்பட்டே கிடக்கின்றன...!!

வேண்டியதெல்லாம் நான் பெருங்குரலெடுத்து
அழும் போது.. வழியும்
அந்த கண்ணீர்த்துளி

இந்தக் கடலுக்குள் விழுந்து
காணாமல் போவது போல்...!

என் கவலையும் எதிரொலியும்
எனக்கே கூட  கேட்காமல் போகவேண்டும்..!
இப்படியோர் இடத்தில்...!

-கவிதைக்காரன்!

No comments: