Saturday, September 1, 2012

தலைப்பில்லாத கவிதை....!


விழிகள்
உண்ணும்
பூக்களிங்கே...!

கவிதை
தின்னும்
காரிகை இங்கே..!

வதனம்
பேசும்..
வெண்ணிற விழிகள்..!

இதமாய்
இதயம் கொய்து போவதேன்..!

கொஞ்சம்
நேசமும்..!
கொஞ்சும்
சுவாசமும்..!

அள்ளிப்போனதென்..!
அந்தி நேர கவிதைகளை...!

ஒற்றைக் கீற்றோளியாய்
கணகளைச் சிமிட்டினால்..!

வெற்றுப் பாலையையும்
சோலையென்றாக்கினாய்..!

சோலையினுள்
தெரியும் இப்பூவுக்கோ பெயரில்லை..!

காலையினில் எழுதும்
இந்த கவிதைக்குமாய்...! சேர்த்து...!
தலைப்பில்லை...!

-கவிதைக்காரன்

3 comments:

Subasree Mohan said...

அருமை....தலைப்பு இல்லாமல் கூட.

Anonymous said...

Kavithaigalea

Maanu Paris said...

Thalaipaga thalainimeernthu nikirathu