Tuesday, September 4, 2012

ஆசிரியர் தினம் - கவிதைக்காரன்!



  • ஆண்டுகள் தோறும் ஆசிரியர் தினம்
  • வந்து போய்க்
  • கொண்டிருப்பதென்னவோ
  • வாடிக்கை..!
  • அன்றெல்லாம்
  • உங்களை தாழ்ந்து
  • பணிந்து...!
  • கவிதையில் நனைத்து
  • கண்ணீர் மொழி பேசும்
  • முரட்டுக் குழந்தைகள் நாங்கள்..!
  • இந்த முரணை
  • நினைத்துப்பார்க்கையில்
  • எங்களுக்கே வேடிக்கையாகி இருக்கும் 
  • உங்கள் பேரில் கேலிகளும்
  • நாங்கள் செய்ததுண்டு..!
  • அதனை கொஞ்சமும்
  • பொருட்படுத்திக்கொள்ளா
  • பக்குவம் உங்கள் போல
  • யாருக்குண்டு...! 
  • சொன்னதை எப்போதும் 
  • சத்தியமாய்ச் சரியாய்
  • செய்ததில்லை..! 
  • கற்றுக்கொடுக்கும் போதெல்லாம்
  • எங்கள் கவனம்..கடற்கரை
  • தக்கை போல் கவனிப்பற்றுக்
  • கிடந்ததும் உண்டு..!
  • தேர்வென்று வரும் போது
  • மட்டும் மாய்ந்து
  • மாய்ந்து படிக்கும் மேதாவிப்
  • பிள்ளைகள் நாங்கள்..!
  • இன்று மட்டுமாய்
  • மேல்பூச்சுக்காய்
  • உங்களை புகழ்ந்து
  • புகழ்மாலை சூட்டுவிக்க
  • எங்களுக்கும் விருப்பமில்லை..!
  • ஏனென்றால் நாங்கள்
  • உங்களிடம் தானே! இப்படி
  • மனதின் வார்த்தைகளை
  • உண்மையாய்ப் பேசக்
  • கற்றுக்கொண்டோம்! 
  • ஆம்!
  • உண்மையில் நாங்கள்
  • உங்களுக்கு ஒப்பாய்
  • எப்போதும் நடந்ததே
  • இல்லை..! 
  • ஆனால்!
  • வாழ்க்கையின்
  • நீரோட்டத்தில் நதி எல்லா நாளும்
  • தேக்கங்களாய் இருந்திடாதென்பதை.. 
  • சில நேரம் வெள்ளமெடுத்தது
  • போல் உணர்த்திப்போகும்
  • உங்களின் வார்த்தைகள்..! 
  • அந்த வெள்ளத்தில் விழுந்து
  • எதிர்நீச்சல் போட
  • எப்படியும் பயிற்றுவித்து
  • விடுகிறீர்கள்..! 
  • இங்கே வரும் போது
  • நாங்கள் எப்படியெல்லாமோ
  • தான் வந்திருந்தோம்! 
  • மறுத்தாலும் அதுவே
  • உண்மையென்றானது..!
  • ஆயினும் வெறுத்திடாமல்
  • பேதமின்றி அனைவருக்கும்
  • வேதம் கற்பித்தீர்கள் நீங்கள்! 
  • இது...இன்று
  • நேற்றுமட்டுமில்லை
  • நாளையும் எங்களைப்போல்
  • இன்னொருவர்..!
  • மீண்டும்  மற்றொருவரென..!
  • கடந்துகொண்டே போகிறது...! 
  • நாங்கள் உங்களின்
  • நிழலில் நீச்சல் கற்று..
  • நடந்து கொண்டே போய்விடுகிறோம்..
  • எந்த நன்றியுமில்லாமல்..! 
  • எப்போதும்
  • அதை நீங்கள்
  • எதிர்ப்பார்த்ததில்லை..!
  • என்பது இப்போது புரிந்திருந்தோம்! 
  • என்றாவது எங்களின்
  • வருங்கால வசந்தங்களில்
  • உங்கள்
  • நினைவு நாடாக்கள்..! 
  • எங்களின்
  • இசைப்பேழையினில்
  • இசைக்கப்பட்டிருக்கும்.., 
  • அன்றெங்கள் கண்களில்
  • துளிர்த்திருக்கும்
  • அந்த ஒற்றைத்துளி
  • கண்ணீர்தான் உங்களுக்கான
  • நன்றியைச்சுமந்திருக்கும்..! 
  • ஆசிரியர்களே... உங்கள் அன்பிற்கு
  • முன்னால் நாங்கள் நாணல் தான் எப்போதும்..! 

  • என் ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்!  

-கவிதைக்காரன் ! 


2 comments:

ஷேர்கான் said...

நல்ல ஆசான்கள் கிடைக்க பெற்றவர்களே.."பிறந்தவர்களில்...வரம்பெற்றவர்கள்" ஆகிறார்கள்.!

ஷேர்கான் said...

நல்ல ஆசான்கள் கிடைக்க பெற்றவர்களே.."பிறந்தவர்களில்...வரம்பெற்றவர்கள்" ஆகிறார்கள்.!