Thursday, December 19, 2013

ஆட்டோகிராஃப்_2013 @தமிழ் அருவி_(8)

இந்த ஆட்டோகிராஃப் எழுதத்தொடங்கியது முதல் எத்தனை புத்துணர்வான தருணங்களைக் கடந்திருக்கிறேன். பழைய நிகழ்வுகளைக் மீளெழுப்பி அதன் ஆதாரங்களின் ஸ்ருதியினோடு பயணிக்கும் சுகானுபவம் ரம்யம்.

நினைவுநாடாக்களின் சுழற்சியொலியில் இன்றைக்கு எழுதவிருக்கும் நபரை அதிகம் தெரிந்து வைத்திருக்க மாட்டீர்கள் உங்களில் பலரும்...

தெருவிளக்கு என்றொறு முகநூல் குழு!
குழுவுக்கு வெளியேயான நட்புவட்டமெல்லாம் மாமா , மச்சான் சகல-என்ற அளவில் தோளில் கைபோட்டு பயணிக்கும் போது ”தெருவிளக்கு” வேறொரு மாதிரியான உலகம்.

நிறைய அன்பானவர்கள். நட்புமிக்கவர்கள் , தமிழ்பால் காதல் கொண்டவர்கள். வரம்பு மீறிய பேச்சுக்களுக்கு இடம் தராதவர்கள்., நட்பின் அடிப்படையில் பிணைந்திருந்தவர்கள். பிறர் அந்தரங்கங்களில் மூக்கை நுழைக்காதவர்கள். யார் இவரென்ற ஆராய்ச்சிகளுக்கு இடமில்லாது நீங்கள் யாராக இருந்தாலும் அவ்வாறே உங்களை ஏற்றுக்கொள்பவர்கள், நல்ல காரியங்கள் செய்ய கரம் கோர்த்திருந்தவர்கள். இப்படி பலரும் புளங்கிய இடம்தான் ”விளக்கு” .

பெரிய பெரிய விவாதங்கள்! ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பு என்ற சமரசம் உலாவுமிடத்தில் அறிமுகமானவர் இவர்.

எந்த ஊர்? என்ன பெயர்? எதுவும் தெரியாது!

:தமிழ் அருவி!:
அவ்வளவுதான்.

அறிமுகமாகியபோது பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை...
யார் வம்பிற்கும் போகாத சாந்த சொரூபி.
சிலபல மாதங்களுக்குப்பின் தான், அறிமுகப்படலமே...

அப்போல்லாம் அவரை அருவியாரே!ன்னுதான் கூப்பிடுவேன்.
அவரோட எழுத்துப்பிழைகளை சரமாரியாக கலாய்த்துத்தள்ளுவேன்,
அவரோட நட்புவட்டம் ரொம்பச் சின்னது! ஆனாலும் ஆழமானது! அந்த சின்னவட்டத்தில் நானும் உள்ள நுழைந்துவிட்டது அவர் வாங்கி வந்த சாபமா வரமான்னு அவரைத்தான் கேட்கனும்,

அக்காவை- அக்க்ஸ் என்றும் தம்பியை- தம்ஸ் என்றும் அழைத்துக்கொள்ளும் “நவநாகரீக” (ஞே!) முறையை
அறிமுகப்படுத்தி வைத்தது நாங்க தான்!
நாளடைவில் அக்காவாகிப்போன அருவியார்.

குணத்தில் ரொம்பவே சாந்தம். அமைதின்னு
முன்னாடி சொன்னேன்ல....
அதெல்லாம் அப்படியே தண்ணி ஊற்றி அழிச்சுடுங்க...

ஆள் பக்கா சூரி, கோபம் வந்தா ருத்ரதாண்டவம் தான் (ஹாஹா சும்மா).
தமிழ்ல அவருக்கு ரொம்ப புடிச்ச வார்த்தை “யோவ்”.
ரொம்ப பழகினவங்க எல்லாரும் அவருக்கு (ஆண்) யோவ் தான்...

இவரைப்பற்றிய மேலதிக தகவல்கள் விக்கிபீடியாவில் தேடினாலும் கிடைக்காது. பேச்சுவழக்கு இலங்கை மாதிரி இருப்பதால் அநேகமாக இலங்கையைச் சேர்ந்த அயல்தேசத்துக்காரரா இருக்கலாம்
(அடிச்சு கேட்டாலும் நான் சொல்லமாட்டேன்  )

இப்படி என் கையை கட்டிப்போட்டுட்டு ஆட்டோகிராஃப் எழுதுன்னா என்னத்த எழுத? வேறு வழியில்லை..

ஆனால்
அருவி போலொரு அன்பான... நட்புக்கும் திறமைக்கும் மரியாதை கொடுக்கத்தெரிந்த ஒருவரைப் பார்த்ததே இல்லை.
அவரையே பார்த்ததில்லை என்பது கொசுறு தகவல்.
(ஸ்கைப்-தவித்து  ).

தனக்குத் தெரியாத விஷயத்தை
தெரிந்தது போல் காட்டிக்க மாட்டாங்க!
தெரியாதுன்னும் காட்டிக்க மாட்டாங்க ஹாஹா.
அப்படியே ஓரமா உட்கார்ந்து
வேடிக்கை மட்டும் பார்ப்பாங்க..

ஃபேஸ்புக் ஓனர் மார்க் லைக்  போடுபவருக்கு,
ஒரு லைக்குக்கு இவ்வளவுசம்பளம்ன்னு அறிவித்தால்
ஒரே நாளில் விண்டோவ்ஸ் ஓனரை முந்திடுவாங்க
அப்படி ஒரு லைக் சிகாமணி!

தமிழ் அருவி என்றொரு முகநூல் கணக்கிற்கு
அப்பாலான உலகில் அவர் ஒரு பெருமதிப்புடைய பெண்மணி! அது பிறருக்குத் தெரியாமல், வெளிக்காட்டிக்காமல் தன் குழந்தைத்தனங்களோடு இவ்வுலகின் நேசங்களை இணையத்தில்
சின்ன வட்டத்துக்குள் வடிவமைத்து ரசிக்கும் அவரை... அவராகவே ஏற்றுக்கொள்ளும் பிற நட்பினர் சிலரும் இங்குண்டு

அவர்களோடு நானும் ...
தம்பியாக...

(சென்னை வரும் போது ரெண்டுபேரைச் சந்திக்கனும்ன்னு சொல்லியிருக்கார். ரெண்டில் ஒருத்தர் நீங்களும்ன்னு சொல்லியிருக்கார்... பார்ப்போம் காலம் என்ன பதில் எழுதி வைத்திருக்குன்னு...)

தமிழ் அருவி

#ஆட்டோகிராஃப்_2013_(8)


             


  

                                                               




2 comments:

rajamelaiyur said...

அருமையான எழுத்து நடை ...

ஜீவா said...

எனக்கு அதிகமா தெரியாது தான்... ஆனா கார்த்திக் ரொம்ப மதிக்குரவங்கன்னு தெரியும்.... அக்க்ஸ்... ஹஹா அப்போ இதெல்லாம் தொடங்கி வச்சது நீங்க தானா?