Friday, February 25, 2011


நாம் கடைசியாக சந்தித்து பேசிய அந்த மரத்தடிக்கு போயிருந்தேன் பாவம் என்னைப்போல் நீ இல்லாமல் அதுவும் காய்ந்து தனியாகத்தான் காணப்பட்டது ....

அந்த மரத்தடியில் சாய்ந்து நானும் நீயும் பேசியது செல்ல செல்ல சண்டை போட்டது நீ கேட்டதை தரவில்லை என்பதற்காக என்னுடன் கோப பட்டது உன் கோபத்தை போக்க உன்னை சிரிக்க வைக்க நான் பட்ட பாடுகள் என்று இன்னும் எல்லாமே மனதில் ஓடிக்கொண்டே இருக்குதடா ....

மரத்தின் வலியை பொருட்படுத்தாமல் அதில் நமது பெயரை நீ அழகாய் எழுதியது இன்னமும் அழகாய் தெரிகிறது ....

ஒரு இதயம் அதன் ஒரு முனையில் உனது பெயர் மறு முனையில் எனது பெயர் ....

நாம் பிரிந்து விடுவோம் என்பதை முன் கூட்டியே தெரிந்து தான் இடை வெளியுடன் உனது பெயரையும் எனது பெயரையும் சேர்க்காமலே பிரித்து எழுதினாயா ....

மரத்தின் நிழல்களில் அமர்ந்து நாம் மணிக்கணக்கில் நம் உள்ளங்களையும் ஏக்கங்களையும் பகிர்ந்து கொண்டோமே ஏனடா என்னை புரிந்துக்கொள்ளாமல் தனியே விட்டு சென்றாய் ....

இப்போது இலையுதிர் காலமா என்று எனக்கு தெரிய வில்லை ஆனால் என் புலம்பல்களால் மரத்தின் இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கிறது ....

நீ என் அருகில் இருந்த நாட்களில் இந்த மரத்தின் இலைகளில் உனக்கு கவிதை எழுதி சமர்பித்தேன்
ஆனால் என் கவிதைகளையும் என் காதலையும் பொய்யாக்கி போவாய் என்பது எனக்கு அப்போது தெரியாதுடா ....

அன்புள்ள கண்ணாலனே இப்போதும் அதே மரத்தடியில் இருந்து என் புலம்பல்களை எழுதுகிறேன் என் புலம்பல்கள் மக்கிப்போவது இல்லையடா ....


நான் மக்கிப்போனாலும் நாம் வாழ்ந்த இந்த மரத்தடியிலேயே என் உயிர் உரமாய் போகுமடா ....

No comments: