Friday, February 25, 2011

கவனமாக இருங்கள்....

தேர்தல் நேரம் இது
பஜனை மாறும் நேரம் இது
நமப் பார்வதி பதே என்றவர்கள்
ஓம் நமோ நாராயணா என்பார்கள்
ஓம் நமோ நாராயணாஎன்றவர்கள்
நமப் பார்வதி பதே என்பார்கள்
அவரா இவர் ?இவரா அவர் ?
வியப்பில் ஆழ்த்துவார்கள்
உத்தமபுத்திரன் என்பார்கள்
யோக்கியன் என்பார்கள்
ஊருக்காகவே வாழ்பவன் என்பார்கள்
தியாகத்தின் சின்னம் என்பார்கள்
கேழ்வரகில் நெய் என்பார்கள்
கவனமாக இருங்கள்....

No comments: