Saturday, February 26, 2011

அப்பா விட்டு சென்ற பழைய 
காலத்துஓட்டை காலணாவை..
நண்பர் ஒருவர் நாணய கண்காட்சிக்காக..
கேட்டார்...என தேடும் போது..
என் மகனின் உண்டியலை 
அது நிரப்பி இருந்தது...
எத்தனை கேட்டும் ஓயாத அழுகையால்..
அவ்வெண்ணத்தை கைவிட்டுவிட்டேன்...


பின்பு ஒரு நாள்..
தன் சோட்டுசிறுவர்களுடன்..
என் மகன் விளையாடும்போது ...
'இது எங்க தாத்தா சேர்த்து வைச்சிஇருந்தது..'
என பெருமை பொங்க...!சொல்லும்போது ..


என் தந்தைக்கும் என் மகனுக்குமான தலைமுறை 
இடைவெளி நிரப்பபடுகிறது ...சிறிதளவேனும்..


பழைய ஒரு ரூபாய் தாள்களை...
பத்திர படுத்துகிறேன் நான் ..
என் பேரனுக்காய்...


  .

1 comment:

SathyaSudha said...

enna boss sethu vachitingala