Friday, February 25, 2011

முதல் காதல்!!!

காலப்
பேராழியில்....
கலைந்து
போகிற
உலகம்!!!!

பிறந்தழிந்து
மீண்டும்
கருக்
கொள்கிறது....!!!!

இப்படி
எத்தனை
யுகங்களாய் ......???
தொடர்கிறது
இம்மாற்றம்...????

ஊழிப்
பெரு..
வெள்ளத்தில்....!!!
ஊஞ்சலாடும்
உலக
உயிர்களின்
நடுவில்....!!!

காதல்
தன்னை...
நிலைப்
படுத்திய...
தருணம்
எது?????

ஆகாயப்
பெரு வெளி
தன்...
அணுவளவு...
உயிர்ச்சத்தை...??

அண்டத்தில்
தெளித்தவுடன்
அது
பிண்டமாய்
உருமாற......!!!

பிண்டம்
பிராணனை
சேர்த்துக்
கொள்ள....!!!

பிறந்தது
முதல்
உயிர்...!!!!

உயிர்
என்னும்
ஜீவாத்த்மா...!!!.
இயங்க
ஒரு
கூடு
தேவைப் பட.....!!!!

பஞ்ச
பூதங்களின்
பகிர்வால்....!!!

உருவானது
உடல்
என்னும்
பரமாத்மா...!!!!

உயிரே
உடலானது...!!!
உடலே
உயிரானது...!!!

உடலும்
உயிரும்....
ஒன்றையொன்று....!!!!
ஈர்த்துக்
கொள்ள....
உண்டானது
முதல்
காதல்....!!!!சுகி ஈஸ்வர்(எனது நண்பனின் படைப்பு)

No comments: