Tuesday, June 7, 2011

முதல் நாட்களில் எனக்கான கவிதைகள் தனிமை என்னும்
கருப்பு பெட்டிக்குள் இறுக்கி பூட்டி வைக்கப்பட்டிருந்தது..
கண்கள் கலங்கி உடைந்து உருகும் வேலையின் போது மட்டும்
அந்த பெட்டியின் பூட்டு அவ்வப்போது உடைக்கப்பட்டு இருக்கும்!

ஆம்..பள்ளிகாலங்களிலிருந்தே என்னோடுகூட பவனிவர
தொடங்கி இருந்தால் கவிதைமகள்..! எப்போது எனக்கும் அவளுக்கும்
ஓர் நட்பின் பேரில் எழுதியதெல்லாம் நட்பின் வரிகளும் -வீட்டைவிட்டு
தனித்திருந்து !  இரண்டடுக்கு கட்டில், தோள்சாய்ந்து அழ  மரஜன்னலும்
தாங்கிய ஹாஸ்டலின் கதவுகளும் தான்..!

தனிமையின் நாட்கள் மெல்ல நடை போட காதல் வந்து மெல்ல குடி கொண்டது
ஆயிரம் வாட் மின்சாரம் தாக்கிய ஒளிப்பார்வை எல்லாம் இல்லை..!
கைக்குள் சிக்காமல் கன்னங்களை மட்டும் வருடிப்போகும் -----மீதி பின்னர் தொடரும்..

No comments: