Tuesday, June 7, 2011

இத படிக்காதீங்க.. கடுப்பாய்டுவீங்க...






“ஆபீஸ்ல ஒரு சின்ன மீட்டிங். நான் வீட்டுக்க வர லேட் ஆகும். நீ சாப்ட்டு தூங்கு“.. கிருஷ்ணா போனில் சொன்னதும் வசந்திக்கு கோபம் வந்துவிட்டது. “என்னங்க திடீருனு இப்டி சொல்றீங்க?? இப்பவே மணி 10.30 ஆய்டுச்சு. தனியா இருந்தா நா பயப்புடுவேனு உங்களுக்கு தெரியாதா??? ப்ளீஸ் சீக்கிரம் வந்துடுங்க“னு அழுகாத குறையாக கணவனிடம் கெஞ்சினாள். “வந்துட்றேன் செல்லம். முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வந்துட்றேன்டா. நீ கதவெல்லாம் பூட்டிட்டு லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கு. நா வந்துட்றேன்“னு சொல்லி மனைவியை ஒருவழியாக சமாதானப்படுத்திவிட்டு மீட்டிங்கை தொடர்ந்தான்.
இங்கு..... வசந்தி வாட்ச்சைக் கவலையோடு பார்த்துவிட்டு எழுந்து மெதுவாக நடந்தாள்.. நடந்தாள்.. வாசலுக்கு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரே இருட்டு. வலதுபுறம் இடதுபுறம் முன்புறம் எல்லா பகுதியும் ஒரே இருட்டாக இருந்தது. அக்கம்பக்க வீடுகள் அதிகமில்லாத ஏரியா அது. இனம்புரியாத பயம் அவளைப் பிடித்துக்கொண்டது. மெதுவாய் உள்ளே சென்று வாசற்கதவைப் பூட்டி தாழ் போட்டாள். மேல் தாழ், நடுத்தாழ் இரண்டையும் போட்டுவிட்டு திரும்பி நடந்தாள்.. நடந்தாள்..
அங்கு..... அலுவலகத்தில் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. கிருஷ்ணா அவர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தான்.
இங்கு..... திரும்பி நடந்த வசந்தி கிச்சனுக்குள் சென்றாள். சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டுக்கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்று உட்கார்ந்தாள். சாதத்தைப் பிசைந்தாள். வாயருகே கொண்டு சென்றாள்.. திடீரென அப்படியே அசையாமல் இருந்தாள்.. அப்படியே இருந்தாள்.. இன்னும்.. இன்னும்... பிறகு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். பெருமூச்சு விட்டுக்கொண்டபடியே சாப்பிடாமல் அதிலேயே கை கழுவினாள்.
அங்கு..... ஒரு வழியாக மீட்டிங் முடிந்தது. கிருஷ்ணா அலுவலகத்திலிருந்து புறப்பட்டான். மெதுவாக தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
இங்கு..... சாப்பிடாமல் எழுந்த வசந்தி டிவி ஆன் செய்தாள். சோபாவில் உட்கார்ந்து சேனல் மாற்ற ஆரம்பித்தாள். மாற்றினாள்.. மாற்றினாள்.. அடுத்த சேனல்.. அதற்கடுத்த சேனல்.....
“........னங்..........“ திடீரென மாடியில் ஏதோ சத்தம் கேட்க அதிர்ந்தாள். பயத்துடனே மெதுவாக எழுந்தாள். டிவிஐ ஆஃப் செய்துவிட்டு மாடிப்படி அருகே வந்தாள். மெதுவாக எட்டிப் பார்த்துவிட்டு படிகளில் ஏறினாள்......... ஏறினாள்......... ஏறினாள்..
அங்கு........ கிருஷ்ணா பைக்கில் வந்துகொண்டிருந்தான். வேகமாக வந்துகொண்டிருந்தான். வாகனங்களைத் தாண்டி படு வேகமாக வந்துகொண்டிருந்தான்.
இங்கு....... மாடி ஏறிய வசந்தி சத்தம் வந்த திசையில் பார்த்தாள். அங்கே........ அங்கே......... அங்கே............
“மியாவ்.“. ஒரு கருப்புப் பூனை. பயம் தெளிந்து மீண்டும் மாடியிலிருந்து இறங்கினாள். இறங்கினாள். மெதுவாக.. மெதுவாக.. இறங்கினாள்.
அங்கு...... கிருஷ்ணா இன்னும் வந்துகொண்டிருந்தான்.. வந்துகொண்டிருந்தான். வேகமாக வந்துகொண்டிருந்தான்.
இங்கு..... வசந்தி படிகளில் மெதுவாக இன்னும் இறங்கிக் கொண்டிருந்தாள்..
அங்கு.... பைக்கில் கிருஷ்ணா வந்துகொண்டிருந்தான்.
இங்கு....... கடைசிப் படியில் கால் வைத்தாள் வசந்தி... பட்டென கரெண்ட் போனது. எதிர்பாராத அந்த நொடியினால் அவளுக்கு பயத்தால் உடல் வியர்த்து நடுங்கியது. எங்கும் ஒரே அமைதி....... அமைதி.......... அமைதி..
அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது...
“டொக் டொக்“ கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் வசந்தி உரைந்துவிட்டாள். தைரியத்தை வரவழைத்து “யாரது“ என்று கேட்டாள். பதிலில்லை. மறுபடியும் தட்டும் ஓசை... “யாருனு கேக்குறேன்ல“ வசந்தியின் குரல் நடுக்கத்துடன் வந்தது. பதிலேதுமில்லை. அந்த இருட்டுக்குள்ளும் அவளுடைய கண்கள் பயத்தில் மின்னியது. “டொக் டொக்“ கதவு தட்டப்பட்டது.. வசந்தி பயத்துடன் உள்ளே நின்றுகொண்டிருந்தாள்.
“டொக் டொக்“...... “டொக் டொக்“....
மெதுவாக கதவருகே சென்றாள் வசந்தி.. கதவின் தாழ்ப்பாளை விளக்கும் நோக்கத்தில் அதன் அருகே கையை கொண்டுசென்றாள். கைகள் நடுங்கியது.
இப்போது கதவு பலமாக தட்டப்பட்டது. “டொக் டொக் டொக்“.. வசந்தியின் கைகள் நடுங்கியது.... “டொக் டொக்“... நடுக்கம்.. “டொக் டொக்“.. நடுக்கம்..
மெதுவாக கதவின் தாழ்ப்பாள் நீக்கித் திறந்தாள். அங்கே.. அங்கே... அங்ங்ங்ங்கே..
தொடரும்“னு கொட்ட எழுத்துல போட்டுட்டாய்ங்க..
என்ன முறைக்குறீங்க??? அதான் படிக்காதீங்கனு சொன்னோம்ல... படிச்சு முடிக்கிறதுக்குள்ள கடுப்பாய்ருப்பீங்களே.. படிச்சதுக்கே இப்டினா டிவில பாத்த எனக்கு எப்டி இருக்கும். அட ஆமாங்க.. இது ஒரு மெகா தொடரோட ஒரு அத்தியாயம்.
சத்தியமா சொல்றேங்க.. எனக்கு சீரியல் பாக்குற பழக்கமே இல்ல. ஆனா மத்தவங்க அதுல வர்ற கதையப் பத்தி பேசும்போது அப்டி என்னதான் இருக்குனு நேத்து ஒரு சீரியல் பாக்கலாம்னு உக்காந்தேன்.
ஐய்யயோ... இனிமே மறந்துகூட சீரியல் பாக்க கூடாதுடா சாமி.. நா மேல சொன்ன காட்சி தான் ஒரு அத்தியாயம் முழுதும் ஓட்டினாய்ங்க. அந்த வசந்தி நிக்கிறது, நடக்குறது, பாக்குறது எல்லாமே ஸ்லோ மோசன்ல் காட்டி கொன்னுட்டானுக. அவ மெதுவா மாடிப்படி ஏறுனத மட்டும் விடாம அஞ்சு நிமிசம் காட்றாங்க. பத்தாததுக்கு பேக்ரவுண்ட் மியூசிக் வேற.. அதோட எட்டு கோணல்ல கேமராவ சுத்த விட்டு விளையாட்றாய்ங்க.
எப்டியும் கதவை திறந்ததும் கிருஷ்ணா தான் நிப்பான்னு நமக்கே தெரியும்.. இந்த லட்சணத்துல பெருசா ட்விஸ்ட் வைக்கிறதா நெனச்சு “தொடரும்“னு வேற போட்டுட்டாங்க. அந்த கிருஷ்ணா பைக் ஓட்றதையும், வசந்தி வாட்ச்சப் பாக்குறதையும் வச்சே ஒரு அத்தியாயம் முடிச்சுட்டாங்க. இந்த மாதிரி சீரியல்ல, மோஷன் போறத தவிற மத்த எல்லாத்தையும் ஸ்லோ மோசன்ல காட்டி நம்ம பொறுமைய ரொம்பவே சோதிக்கிறாங்க.
இதுல எட்டு நிமிசத்துக்கு ஒரு தடவை விளம்பர இடைவேளை வேற. முப்பது நிமிச நாடகத்துல பதினொரு நிமிசம் விளம்பரம். விளங்குமா இது??? இவனுக காசு சம்பாதிக்கிறதுக்காக இப்டி மொக்கையான தொடர்கள வருஷக்கணக்கா ஒளிபரப்பி நம்ம உசுர வாங்குறாய்ங்க. இத, ஒரு நாள்கூட விடாம டெய்லி எப்டிதான் பாக்குறாங்களோ தெரில. இதுல, பாக்காம மிஸ் பண்ணிட்டோம்னு அடுத்தநாள் வந்து, கதைய வேற கேப்பாங்க பாருங்க... பக்கத்துல இருக்குற நமக்கு கடுப்பு தான் வருது. இதுல யார தப்பு சொல்றதுனே புரிய மாட்டீங்குது..
இதுல என்ன கொடுமைனா எந்த சீரியல் பெஸ்ட்டுனு அவார்டு வேற குடுத்துப் பாராட்டுவாங்களாம். ஹய்யோ.. ஹய்ய்ய்யோ..
சரி சரி.. டைம் ஆய்டுச்சு. அவங்கவங்க பாக்குற சீரியல போய்ப் பாருங்க..
அடுத்த பதிவுல சந்திக்கலாம்.

No comments: