Saturday, June 25, 2011

ஒதுக்கப்பட்டவன்:-



நீதியில் புறம்பு சொல்லப்பட்டு
பாதையில் முட்களை கொண்டு
சிறைவாசம் சென்றுவந்தவன்
யாருக்காகவோ ஒரு
தீப்பொறி கோபம்..!
எரியும் நெருப்பாக மாரும் முன்னே
ஆத்திரத்தில்  ஆயுதம் ஏந்தியவன்..
அந்தோ பரிதாபமாய் இன்று
ஊருக்குள் ஒதுக்கப்பட்டவனாய்..
யாரையும் குற்றம் சொல்லதேவை இல்லை
ஆனால் ஆறிடும் ரணமல்ல
அனுபவித்து..
நீதி தேவதை இவனுக்கு மட்டுமென
இல்லாமல் பலருக்கும்
படியளக்கும் போது
கண்ணோடு தேர்த்து இதயத்தையும்
இறுக மூடிக்கொண்டால்
ஆத்திரம் இன்று இவனுக்கு!
ஒதுக்கப்பட்டவன் எனும் பட்டத்தை
அளித்து..! ஏதோ ஒரு வீதியில்..
இறந்து போகும் வரை சீண்டுவார் இல்லாமல்..!

No comments: