Thursday, June 9, 2011

கொஞ்சம் விஷயம் கொஞ்சம் வழக்கம் போல...ஹிஹி..

வெட்டுக்கிளிகள் சுமார் 13 விதமான சப்தங்களை எழுப்புகின்றன. இந்த சப்தங்களின் மூலம் மற்ற வெட்டுக்கிளிகளுக்கு வெவ்வேறு செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறதாம்.
* (நம்ம பசங்க sms  பண்ணுறாப்போல ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி ..!  )


லாக்கா எனப்படும் பூச்சிகளின் உடலிலிருந்து வெளிப்படும் ஒரு வகைப் பிசின்தான் அரக்கு. உலக அளவில் இது இந்தியாவில்தான் 80 சதவிகிதம் கிடைக்கிறது.


பிராணிகளில் அதிக ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது ராட்சத ஆமைதான். இவை 300 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.
*(கொடூரமா *இராட்சத*  இருந்தாதான் அதிக நாள் வாழ முடியுமோ?)

யானைக்குட்டி பிறந்தவுடன் 125 கிலோ எடையிருக்கும்.
*(அதான் நான் தூக்கி கொஞ்சவே இல்லங்க )

பாம்பு கடிக்கும் போது சுரக்கும் நஞ்சு 4 முதல் 6 துளிகள்தான்.
*(ஹூக்கும் அதுக்கே பூய் சேர்ராய்ங்க.. பின்ன! பசுமாதிரி லிட்டர் கணக்குலையா சுரக்கனும்.!   )

நெருப்புக் கோழி முட்டைகளை பகலில் பெண்ணும், இரவில் ஆணுமாக இரண்டும் அடைகாக்கின்றன.
*(சின்ன டவுட் நெருப்புகோழி முட்டை வெந்துடாதா? நாங்களும் திங்க் பண்ணுவோம்ல   )

ஒரு பட்டுப்பூச்சிக்கூடு சுமார் 3000 அடி நீளமுள்ள பட்டு நூலைத் தருகிறது.
*(பேசாம 30 -அடில ஒரு புடவையே கொடுத்திருந்தா நல்லா இருக்குமே )

நாய்களுக்கு வியர்வை நாக்கின் வழியாகத்தான் வெளியேறுகிறது. அதனால்தான் நாய் ஓடும் போது நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறது.
*(ஹாஹா நோ கம்மேண்ட்ஸ் அப்புரம் ஜொள்ளு பார்டிங்கல்லாம் என்னை முரைப்பாய்ங்க  )

ஸ்லாத் எனும் மிருகம் தலைகீழாக நடக்கும். மேலும் இது தண்ணீர் குடிப்பதில்லை.
*(நாளைல இருந்து தரை பண்ணி பார்க்குறேன் ..இந்த பாலைவனத்தில் இருக்குறவங்களும் ட்ரை பண்ணலாமே!)

பூச்சியினங்களில் குறைவான ஆயுட்காலம் கொண்டது ஈ தான். ஆண் ஈ 14 நாட்களும், பெண் ஈ 29 நாட்களும் உயிர் வாழும்.
*(ஈ -க்கும் லவ் பெயிலியர்லாம் இருக்கும் போல..! ஹாஹா ஆனா ஒன்னு ஒருமாசத்துக்குள்ல எல்லாம் முடிஞ்சுரும் டீ.வி -சிரியலுக்கு இது தேவலை.. )

புத்திசாலியான 10 மிருகங்களுள் பன்றியும் ஒன்று.
*(இனி எவனாவது திட்டட்டும் ஹாஹா )

கோல்டன் ஈகிள் எனும் கழுகு ஒரு சிறு முயலை ஆகாயத்திலிருந்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பார்க்கும் சக்தியுடையது.
*
embed code

No comments: