Friday, August 10, 2012

கோவை மாநகரம் இது...!!!

இரும்புத்தாதுகள் காற்றில்
இம்மியளவு இடைவெளியில்லாமல்
இடம் நகரும்

விசை மோட்டார் நகரம்...!!
தறி பாடும் இரைச்சல் கீதம் எப்போதும்
கேட்கும் பஞ்சாலை 
நகரம்...

வாணிபச்சந்தையில்
வானெட்டும் வேகம் கொண்ட
உழைப்பாளரின்...உப்புத்தேகம்
ஓய்வுக்கு ஏங்குவதில்லை...!!!

அன்னமிட்ட சாலைகளும்
கல்விக் கொடையும்
கந்தக நெடியும்
இங்கே
ஏராளம் தாராளம்..!!

கொங்குத்தமிழுக்கும்
குந்தகப் பேச்சுக்கும் கொஞ்சமும்
குறைவில்லை...!!!

மேற்குக்காற்றின்
ஈரவாடையில்.இங்கே.
பொழுதுகள் விடியும்...

இன்னும் மிச்சமிருக்கும்
பாரம்பரீய அடையாளமாய் வீதிகள்
சாணம் மொழுகிய அடையாளத்தோடு
இங்கே வரவேற்கும்..!!!

வார்த்தைக்கு வார்த்தை
அன்பொழுகும் நேசம்
என்றும் மாறாததாயிருக்கும்..!!!

பிறப்பிடம் எங்கேயோ
வசிப்பிடம் இதுவென்று
வந்தோர் பல்லாயிரம் இங்குண்டு...!!

எழுபத்து இரு மாதங்களாய்
இம்மக்களினூடே  வாழ்ந்ததில்
ஒரு நாளும் போதுமடா சாமி
எனச் சலித்ததே இல்லை..!

கொங்குத்தமிழ் விளையாடும்
வீதியில் செம்மொழியும்
தேர் நின்ற ................................... “கோவை மாநகரம்”




ஆம்!
இங்கே உழைப்புக்கு
வந்தனம் செய்வோர்...
ஆயிரமாயிரமுண்டு....!

-கவிதைக்காரன்

No comments: