Sunday, August 26, 2012

யாதுமாகிய என்னவளே...!


அன்றோர் நாள்
கண்ணாடி பூக்களை கைகளில்
ஏந்தி வாசமென்னவென கேட்கிறாய்!
உன்னால் நான் சிரித்திருக்கும் போது
எனக்கே தெரியாமல் விழியோரம் கோர்த்திருக்கும்
கண்ணீரை துடைதெடுத்தெடுக்கிறாய்!
என் தனிமையின்..கணங்களில் வந்து
மௌனத்தில் மழைபோல் சடசடவென
உரையாடுகிறாய்!
நான் ஆர்பரித்து மகிழும் போது
தேனெடுக்கும் தும்பிபோல்
மெதுவாய் வந்து உன்னோடு காதலில் நான்
என்று காதில் ஸ்வரமாய் இசைக்கிறாய்!
உன் நேசத்தின் ஆழம் புரியாமலே..!
மேலோட்டமாய் நீந்தி திளைத்திருக்கிறேன்!
உன் மௌனத்தின் காரணம் விளங்காமலே!
பலநாள் நீங்கிதவித்திருக்கிறேன்...!

நான் உன்னில் சொல்லும் பொய்களின்
இடைவெளியில் உன் புன்னகையை
பதியம் செய்து உண்மையென
மாற்றிடுகிறாய்....!
உன்னில் ஏற்படுத்திய என் கோபங்களில்
நீ எத்தனை உடைந்து போயிருக்கிறாய்
என்பதை உம்மென்ற உச்சரிப்பில் உணர்த்திடுகிறாய்
அந்த மௌனம் கலைக்க நான் போடும்
குறும்புத்தனங்களில் மெல்ல
சிரித்து என் தலைமுடி கலைத்து
கண்களிலே பேசுகிறாய்..!
மறந்து போன நம் முதல்நாள் சந்திப்பை
வருடம் கழித்து அத்தனை ஆவலாய்
நீ கேட்டதும் புரியாமல் விழித்த கதை
சொல்லி அவ்வப்போது விகடம் செய்கிறாய்!,
ஜேப்டியில் மறைத்து வைத்த
உன் பழைய புகைப்படத்தின்
பின்னால் எழுதியிருந்த
இருவரிகவிதையை கண்டு
இத்தனை கேலி செய்கிறாய் !
உன்னை அணு அணுவாய் காதல் செய்கிறேன்
அதை தினம் தினமும் கவிதை செய்கிறேன் !
இத்தனைக்கும் என் ஒற்றை கவிதைக்கு
கூட உன்னிலிருந்து பாராட்டுதல்கள்
கேட்டதில்லை ; நீயும் சொன்னதில்லை!
உன்னிலிருந்து கிடைப்பது
கடையிதழை சுழித்து ரிக்க்க்க்க்க்...
என்ற
ஒலியுடன் ‘’மொக்கை கவிதை’’-டா!
என்ற வார்த்தையும் பின்னே ஒரு புன்னகையும்தான்!
அட்ந்த புன்னகைக்காகவேணும்
இன்னுமோர் கவிதை! செய்திருப்பேன்!
தனித்திருக்கும் இன்றைய பொழுதுகளில்
புரட்டிபார்த்திருக்கவாவது!

No comments: