Wednesday, August 29, 2012

கொஞ்சம் திமிர்....





இரவு என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
நஞ்சைப்போல
விழுங்குகிறது...!

சுயமரியாதைக்காய் |
கைவிடப்பட்ட
முன்னேற்றக்கூடம்...!

கடைசியாய்
நடந்து வரும் - என்னை
பார்த்து ஏளனமாய்ச்சிரிக்கிறது..!

ஜாடி தூக்கும்
மகத்துவத்தொழில்
எனக்கு மறந்தும்
தெரியாமல் போனதால்

இறந்தும் விடைக்கும்
பிணம்போல
முறுக்கிடும் கோபம்
என்னைக் கொண்டு

சேர்த்த இடத்தில்
நான் மட்டும்
தனிமையாய்..

ஆம்! இங்கே
நான் மட்டும் தனிமையாய்.

யாரும் உடனில்லை
வேண்டுமென்றும்
ஏக்கமில்லை...!

கடைசிச்சாலையில்
நடந்து வந்தும்..
கண்ணிரண்டும் தூங்கவில்லை..!

நாளை நீயே
சொல்வாய்... அதோ
போகிறான் பார்
திமிர்பிடித்தவனென்று..!

சொல்லிவிட்டுப்போ!
ந்ன் திமிரெனக்கு வேலி
எனத் தெரியப்போவதில்லை
உனக்கு..!

நீ அப்போது
என் பின்னால்
நின்று
கொண்டிருப்பாயாவென
தெரியாது..! - ஆனால்

நான் அப்போது உனக்கு முன்னால்
சென்றுகொண்டிருப்பேன்!

-கவிதைக்காரன்

No comments: